செவ்வாய், 21 மே, 2024

அதர்வண வேதம்

 அதர்வண வேதம் என்பதில் அதர்வணம் என்பது தமிழ்ப்புனைவாகும்.

அ =  அடுத்து.

தரு  -  தரப்படுகின்ற

அண் = மூன்றாம் வேதத்தை நெருங்கிய  படி ( அண்முதல் - நெருங்கியிருத்தல்)

அம் -  அமைந்தது

என்று தமிழில் பொருள்படும்,

அண் என்பது வண் என்றானது சந்தி.  வகர உடம்படுமெய்.

முன் எழுந்த மூன்று வேதங்களே வழக்கிலிருந்தமையால்,   அடுத்துத் தரப்படுவது என்றும்  அறிவு நூலாக முன்வந்த நூல்களை அண்மி  நிற்பது என்றும் பெயரிடப்பட்டது.  பூசாரிக்கு உரியது என்ற வழிகாட்டுதல் தேவையற்றதாகும்.  வேதம் என்ற சொல் போதுமானது,

வேய்தல்  -  செய்யப்பட்டது.

இவை எல்லாம் முற்றிலும் இந்தியாவிலே செய்யப்பட்ட நூல்கள். ஐரோப்பியருக்குத் தொடர்பற்றவை.  ஈரானுக்கும் தொடர்பில்லாதவை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.


திங்கள், 20 மே, 2024

பாசு என்ற தமிழ்ச்சொல் எதைக் குறிக்கும்?

 பாசு என்றால் அது பசுமை, செழிப்பு, ஊதியம் தரும் விளைபயிர் என வரும் பொருளியல் மேம்பாட்டுக்குரிய நன்மைகளைக் குறிப்பது. ஒருவனுக்கு ஆணவம் எப்போது வருகிறதென்றால்  அவன் ஒரு நிலத்தில் பயிரிட்டுத் தன் ஊதியத்தை அடைபவனாயிருந்தால்  எல்லாம் செல்வப்பெருக்காக மாறிவிடும் காலத்திலேதான் வருகிறது.  அவனடைந்த பசுமையிலிருந்தே அவனுக்கு ஆணவம் முதலிய மதங்களும் ஏற்படுவதால்,  அது உண்மையில் பசுமை அவனுக்குப் பதிந்து பொருட்பெறுமானமாக மாறிவிட்டமைதான்  ஆகவே சமயத்தில் இது   பாசுபதம் எனப்படுகிறது. பசுமைப்பதிவு எனப் பொருள்தரும் இது: அதிலிருந்து புறப்படும் குணம் ஆணவம் என்றோ அதை அடக்குதல் என்றோ வழக்காற்றுக்கு ஏற்பப் பொருண்மை பொருத்தும் என்றறிக.

பசுமைதருவோன் பசுபதி  ஆகிறான்.  அவன் இறைவன்.

ஆவென்னும் மாடும், பசுமையைத் தரும் பொருள். அதனால் அது வேளாண் மன்பதைகளில் பெரிதும் போற்றப்படுகிறது.  பசுமை தரும் வளர்ப்புஎன்ற பொருளில்  ஆவென்பது பசுவெனப்பட்டது.  பசு  என்பதை பஷு என்பது மெருகூட்டலே.

பசுமை விலங்கு என்ற பொருளில் ஆ என்பது தமிழ்ச்சொல்.

பசு என்பது முதனிலைப்  பெயர், அதாவது விகுதியற்றது.

பசு> பாசு என்ற வடிவம்,  முதனிலை நீண்டு அமைந்த பெயர்.

பாசுபதம் என்பது கூட்டுச்சொல

இவற்றின் வழக்காற்றுப் பொருண்மையை சமய நூல்களிலிருந்து அறிந்துகொள்ளலாம்.  ஆனால் இவை தமிழ்மூலச் சொற்கள்.

பூசைமொழியில் ஏற்றவாறு பசுவை பஷு என்று சொல்லிக் கேட்போரைப் பரவசப் படுத்திக்கொள்வது பூசாரியின் உரிமை.  கேட்பவரின் இன்பம்.   இத்தகையவை பூசை மொழிக்கே உரிய ஒலிநடை.  இது தமிழில் தொல்காப்பினாரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதன்மூலம் ஒலி வேறுபடுவதுடன், வேற்றுமொழி போலும் தோற்றமும் உண்டாகிவிடுவதைத் தொல்காப்பியனார் ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் அவர் ஒலிமெருகூட்டல் புறம்பானவை என்று கண்டு, அவ்வாறு பாதிப்புற்ற சொற்களை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருதலையே விரும்பினார்.  தொல்காப்பியனார் காப்பியக் குடியில் தோன்றிய பிராமணர் என்ப.  காப்பியம் என்பது சாத்திரம் என்பதனோடு ஏறத்தாழ ஒத்த பொருளுடையதாகும். 

இதற்கு  ( பாசு ) வேறு விளக்கம் தருவாரும் உளர்.  

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்/


ஞாயிறு, 19 மே, 2024

"தாக்கு" சொல்லும் பரவிய பொருளும்

 கொஞ்ச நாளாகவே  நாம் ஐரோப்பிய மொழிகளின் பக்கம் போகவில்லை. அப்போதைக்கப்போது சாளரத்தின் வழியாக அந்த மொழிகளையும் எட்டிப் பார்ப்பது சொல்லாய்வில் நேரிதே  ஆகும்.

தாக்கு என்பது தமிழில் ஒரு வினைச்சொல். அதவுதல் என்று இன்னொரு வினைச்சொல்லும் உள்ளது, ஒரு மடுவில் முதலை அந்தப் புலியை அதவிவிட்டது  என்று சொல்லலாம்,  இது கொன்றுவிட்டது என்றும்  தாக்கிவிட்டது என்றும் இருபொருளும் தருஞ்சொல் ஆகும்.   தா என்ற சொல்லின் உறவினை உளப்படுத்த    "அ-த" என்று அங்கு தகரம் வருகிறது. தா  என்ற நெடில், இன்னொரு சொல்லின் பகுதியாக வருங்கால்  த என்று குறிலாகக் குன்றிவிடுவது சொல்லியலில் இயல்பு  ஆகும்.

 தமிழில் அகரம் முன்னிற்கத் தாக்குதல் குறிக்கும் தகரம் அடுத்து வரல்போலவே  attack என்ற சொல்லும் அமைந்துள்ளமை கவனித்தற் குரியதாகும், அட்டாக் என்பதில் உள்ள கு என்பதன் ஒலிபோல வராமல் தமிழில் வினையாக்க விகுதியாக வுகரம் வந்துள்ளது தமிழியல்பு காட்டுவதாகும். எடுத்துக்காட்டு:  தாக்கு. இதைத்   தாக்(க் +உ ) என்றும்  தா(வ்+ உ)  அல்லது  அ-த+( வ்+ உ) >அதவு என்றும் கண்டுகொள்க.  அதவு  என்ற சொல் முன்பகுதியில்  அட்டாக் என்பதன் முன்பகுதி போலவும்  தாக்கு என்ற சொல் அட்டாக்கு என்பதன் பின்பகுதி போலவும் ஐரோப்பிய மொழியில் அமைந்துள்ளது கண்டறியத் தக்கதாகும்,

தாக்கு என்பதில் உள்ள கு என்பது சொல்லாக்கத்தில் வினையாக்க விகுதியாகும்,  கு என்பதை எடுத்துவிட்டால் சீன மொழியில் உள்ள தா என்ற தாக்குதல் குறிக்கும் சொல்லுடன் இச்சொல் ஒருமை உடையதாகிவிடும்.அதவு என்பதில் உள்ள அகரம்  சுட்டுப் பொருளதாகும்,  அடு>  அடி என்பதில் சுட்டிலிருந்தே வினையாக்கம் தொடங்கிவிடுகிறது,

அட்டாச் என்ற ஆங்கிலச்சொல்  சகர ககர உறவு உள்ளது  ஆகும். இது திரிபுகளில் கேரளம் சேரலம் என்பதுபோலும் தொடர்பினது ஆகும்,  இவ்விரண்டும் ஒலிஇரட்டைகள் என்று ஐரோப்பியச் சொல்லியலாரும் அறிந்துள்ளனர்.  தமிழில்  திரிபுப்போலிகள் என்போம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

சில மறைந்த வரிகள் மீட்டுத் தரப்பட்டு,

மெய்ப்பு சரிசெய்யப்பட்டது. 21052024 1146