வெள்ளி, 1 டிசம்பர், 2023

சந்நியாசி என்ற சொல்

 சந்நியாசி  என்பது பொருளுடன் நாடறிந்த சொல்லே  ஆகும்.

இதற்குப் பல்வேறு பொருண்மைகள் இந்திய மொழிகளில் காணலாம், பொதுவாக அறியப்படுவது என்னவென்றால் சந்நியாசிகள் மக்களைச் சார்ந்து வாழாமல் ஒதுங்கி வாழ்வர் என்பதுதான். பெரும்பாலும் திருமணமாகாதவர்கள் என்ற கருத்தும் உள்ளது. ஆகித் துறந்தவர்கள் என்றும் உள்ளனர்.

எந்த மொழியில் எவ்வாறு  பொருளறியப்பட்டாலும், நாம் தமிழின் மூலமாக இதற்குப் பொருள் அறிவோம்:

சன்னி என்பதை  "தன்னி" எனப் பொருத்துதல்:

தன் -  தன் பிறந்த இடம். தன் சொந்த வாழ்வாதாரங்கள்.

நி  -   நீங்கி,

நீத்தல் -  விட்டு நீங்குதல்  ( உலகுதொடர்பானற்றை விட்டு விலகுதல்) என்றும் பொருள் தரும்.  நீப்பேன் ( விட்டு நீங்குவேன்),  எதிர்மறை:  நீயேன் (விட்டு நீங்கமாட்டேன்) என்ற வடிவங்கள் இப்போது வழங்கவில்லை.  இன்னொரு காட்டு:  காத்தல் (வினை),  காப்பேன்,  காவேன்  என்பன உரியவான வடிவங்கள்.  ஈகார இறுதிக்கு யகர உடம்படுத்தல் வரும்.  நீவு(தல்) என்பது வினையாயின் நீவேன் என்று எதிர்மறையில் வரும். இவற்றை வாக்கியங்களில் பயன்படுத்தி உணர்ந்துகொள்க.

பற்றுக்கோடு  அல்லது ஆதரவு:

ஆசு > யாசு>யாசு+ இ >  யாசித்தல்.

ஒ.நோ:  ஆ+ து+ அ + அர் > ஆதவர் ( வகர உடம்படுமெய்),  >  யாதவர்.   ஆவளர்ப்போர் என்பது,  இங்கு ஆ > யா ஆனது. து = உடைமைப் பொருள்.

பற்றுக்கோடு அல்லது ஆதரவு வேண்டுதல். இரத்தல்.

ஆகவே தன் நிலையின் நீங்கிய ஒருவன்  பிறரிடம் யாசித்து வாழ்தல் என்று தமிழ் மூலங்களின் மூலம் பொருள் கிட்டுகிறது.

நீங்குதல் பொருளதான நீ என்பது,  நி என்று குறுகியது,  பழம் + நீ என்பது பழநி என்று குறுகியது போன்றதே.  இளநீர் என்பது எளனி என்று பேச்சில் குறுகி ஒலித்தலும் காண்க.  வாய் நீர் என்பது வாணி (வாணி ஊத்துது என்பர்) என்றும் தண்ணீர் என்பது தண்ணி என்றும் ஆகுதல் தெளிவு. நான் நீ என்ற பதிற்பெயர்களில் நீ என்பதும் தன்னின் நீங்கியோனாய் எதிரில் நிற்போன் என்றே பொருளாதலின் நீக்கக் கருத்தே ஆகும்.

நீ என்பதும் குறுகி  நின்,  நினது,  நின(பன்மை),  நின்றன் ( நின் தன்) என வேற்றுமை வடிவம் படும்.

சந்நியாசி:  இச்சொல் தமிழிலிருந்து புறப்பட்டுப் பிற இடங்களுக்கும் பரவிற்று என்று முடிக்க.

ஆசி என்பது யாசி  என்றானது,  ஆனை > யானை என்பது போலாம்.

சந்நியாசி இறந்துவிட்டால் அவருக்கு நிலக்கொடைகளும் வழங்கினர் என்பதாகத் தெரிகிறது. நினைவிடங்களும் அமைத்தனர். இவற்றுக்கு   ஆண்டிசமாதிகள் என்பர்.  சந்நியாசிகளுக்குத் தமிழ் நாட்டில் ஓர் ஏற்றமிருந்தமை இதனால் பெறப்படும். தமிழ்நாட்டு மக்கள் இறையன்பர் ஆதரவாளர்கள்.  இவ்வாறு இறந்தோரின் அடக்கவிடங்கள்  மலாய் மொழியில் KRAMAT எனப்படும். மதித்துப் போற்றுதற்குரிய இடங்களாக இவை கருதப்படுகின்றன. ( SACRED). இங்கு அடக்கமானவர்களிடம் குறைகளுக்கு மாற்று வேண்டுவோரும் உண்டு.  ( நில் வரத்தி :  நிவர்த்தி)

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

வியாழன், 30 நவம்பர், 2023

வான்மழை

 வாழ்கென வரமருள் குளிர்ந்த மழைத்துளி, 

வீழ்கென மகிழ்தரு ஆழ்மனம்  வாழ்கநீ!

உடலில் வீழ்கென ஓடிமுன்  நிற்க,

படலும் குன்றியப்  பெயலும் நின்றது;

வானம்  நீயே வரையாது  வழங்குவை

கானம்  இசைத்தனை கடுந்தரை மோதலில்;

ஏன் நின்  றனைநீ   ஏற்றிடு  நீயே

நான்முயல்  வேனே நனிஇன்   னொருநாள்

கூன்படு நோக்கு குறைத்தே

நnன்மகிழ்ந்திடவே  நனைத்திடு  கவினே.


இந்தக் கவிதை என்ன சொல்கிறது என்பதை உங்கள் கருத்துரையில் எழுதுக. இதற்கு முன் எழுதியுள்ள பொருள் தேடி எடுப்போம்.

செயற்கை மழை பெய்வித்தல் முதலியவை இக்காலத்தில் உண்டாதலால், வான்மழை என்பது பொருத்தமான தலைப்புதான்.

புதன், 29 நவம்பர், 2023

சன்னுத என்ற சமஸ்கிருதச் சொல் அமைப்பு

 வெகுசுருக்கமாக,  சன்னுத என்னும் சொல்லை அறிவோம்.

சன்னுத:

தன் என்பது சன் என்று வரும். இது தகர சகரப் போலி.

எ-டு:  தனி  - சனி. தனிச்சிறப்புடைய கோள்.

             தங்கு -சங்கு  ஓர் ஓட்டுக்கூட்டினுள் தங்கி வாழ்வது.

அ, இ, உ மூன்றும் சுட்டு.

உ - முன்.

உது -  முன்னது, முன்னிருப்பது.

உத -  முன் அங்கிருப்பது.   உ, து,  அ.   (அ என்றால் அங்கிருப்பது.)

முன்னதாய் அங்கிருப்பது.

நாரத சன்னுத -  நாரதன் உன் முன்னிருப்பதான என்று பொருள்.

பாணினி இலக்கணத்தின்படி இது வேறு விதாமான விளக்கம் உடையது,

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்