ஞாயிறு, 15 மே, 2022

மாளிகை மகளிர் தொடர்பு மற்றும் பாஞ்சாலி



நெடிலாயிருக்கும் ஒரு சொல்லின் முதலெழுத்து, பெயராய் அமைகையில் குறிலாய் மாறிவிடுதலைப் பல சொற்களில் கண்டு நாம் பல இடுகைகளில் விளக்கியிருக்கிறோம். இதை ஒரு பெருநிகழ்வாகக் காட்டிய வேறு நூல்களை யாம் காணவில்லை; இருப்பின் அவற்றின் பெயர்களைப் பின்னுட்டமிடுங்கள்.

நெடில் அடிச்சொல்லினெழுத்து குறிலானதை முன் இடுகைகளில், மேற்குறித்தபடி காண்க.  இவ்வாறே  குறிலும் நெடிலாகும்.


"மகன் மகள் உடையவனையே அல்லது உடையவளையே மன்பதை மதித்தது. மன்பதை எனில் சமுதாயம், குமுகாயம். மகன் உடையவன் பெரியவன். அவனால்தான் நாலைந்து மகன்களையும் வயலுக்கு அனுப்பிப் பாடுபடச் செய்ய முடியும். எண்ணிக்கை இருந்தால்தானே படைவலிமை. ஆளிருந்தால்தானே உழைக்கமுடியும். உழுதல் முடியும். இதனால் மக என்ற சொல் திரிந்து மா என்றாகும். அப்போது மா என்பது பெரிது என்றும் பொருள்தரும். மக என்பது மகா, மஹா என்றும் திரியும்."

மேற்கண்டபடி அவ்விடுகையில் வரைந்திருந்ததை அறிவீர்.

தமிழர் வாழ்ந்த நீண்ட நெடுங்காலத்தில் ஒரு பகுதியில்  ஆணாதிக்கமாகவும் இன்னொரு பகுதியில் பெண்ணாதிக்கமாகவும் இருந்துள்ளது சொல்லாய்விலிருந்து தெரிகிறது.  பாஞ்சாலி தமிழ்நாட்டில் வாழ்ந்தவளல்லள்,  பக்கத்திலுள்ள நாட்டில் வாழ்ந்தவள் என்று கதைகள் கூறினாலும்,  பாஞ்சாலி என்ற சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளில் பொருள் உரைக்கலாம். அதிலொன்று:

பால் - பகுதி.
பால்+ மை > பான்மை.   பான்மை + சால் +  இ  > பான்சாலி>  பாஞ்சாலி ஆகிறது.
பான்மையான  ( பகுதிகளான) வாழ்வுடையவன்.
பகுதிகள் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்தலும் , ஒரேகாலத்தியல்தலும் என இருவகையாக நிகழும்.

பாஞ்சாலிகாலம் பெண்ணாதிக்க காலமாகும்.

பாஞ்சாலி என்பது தமிழ்மூலங்களிலிருந்து விளைந்த சொல்லென்று இது காட்டும்.

அப்பனின் பெயரின்றி  அம்மாவின் பெயர் பிள்ளைக்கு முன்பெயராய் வருமுறையும் பெண்ணாதிக்க முறையே.  இது நாள்வரை இம்முறை மக்கள்  சிலரிடைத் தொடர்ந்துள்ளது.

மக என்ற சொல் மா என்று திரிந்தது என்று கூறுங்கால்,  மக என்ற சொல்லில் பால்தெரிவு  இல்லை.  மகள்,, மகன் என்ற சொல்லிலேதான் பால்தெரிகின்றது. இதுபோலவே,  மகான் என்பதில்  ஆன் விகுதி வருவதால்,  ஆண்பால் தெரிகின்றது.  மகான் என்பது உண்மையில் "பெருமகன்" என்பதே ஆகும். மகான் என்பது சிறப்பு பொருள் அடைந்த பின்பு,  பெருமகன் என்ற சொல் சற்றே வேறு பொருட்சாயலை உணர்த்தத் தேவைப்பட்டது. அதுவே மீண்டும் உயர்நிலைப் பொருள் பெற்றகாலை.  பெருமான் என்று திரிந்து உன்னதம் உணர்த்தியது.  எ-டு:  ஏசுபெருமான்,  நபிபெருமான்,  வள்ளுவப்பெருமான்.

அரசியரில், மகவை உடைய அரசியே உயர்வாக உணரப்பட்டாள்.  அவள் மகவரசி என்று போற்றப்பட்டாள்.  இது திரிந்து " மகராசி" ஆனது.  மகவு உடைய அரசன்: " மகராசன்" ( மகவரசன்).  இதில் வரும் மகவென்ற சொல், ஆண்மகவு என்று எடுத்துக்கொள்ளலாம்.  ஆணுக்குப் பட்டம் கட்டும் முறை வழக்கிலிருந்த காலங்களில்.  மக என்பதே மகா, மஹா ஆயிற்று.

சமுதாயம் ( குமுகாயம்) குறிக்கும்  மன்பதை என்ற சொல் ம(க)ன் பதி ஐ >  மன்பதை என்று அமைந்திருத்தலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதே  ஆகும்.  மகன் பதிவாய் உள்ள கூட்டமே மன்பதை அல்லது சமுதாயம் ( குமுகம் )  ஆகும்.

மகளிர் இருந்த பெருமனையே  மகள் > மகளிகை >  மாளிகை என்று அமைந்தது என்பதும் ஏற்புடைய விளக்கமே.  அவர்கள் பயன்படுத்திய மணமுடைய சாந்து  "  மாளிகைச்சாந்து"  என்று கூறப்பட்டது.  கன்னிமாடம் என்பது இன்னொரு பெயர்.   இவற்றை இனி ஆய்வு செய்வோம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


குறிப்புகள்:

பதி பதிதல் -  வாழ்தல். பதி > வதி > வாழ்தல். வாழ்தற்பொருள் மன்பதை என்ற சொல்லில் கிடைப்பது.  ப-வ போலி.

பல் - வல் - மல்.  இவை வலிமை குறிப்பன.  வலிமையாகக் கட்டப்பட்டது என்ற பொருளில்,  மல்> மள் > மாள் > மாளிகை என்றும் காட்டலாம்.  சுற்றாக உள்ளது என்பதுதவிர,  வழுவில்லை.

இகுதல் -  இறங்குதற் கருத்து.  இறங்குமிடம்  இகை எனப்பட்டது.  இகு+ ஐ.  சுட்டுச்சொல் விளக்கம்:  இ - இங்கு.  கு-  சேர்விடம் குறிக்கும் சொல்.  "மகளிர் இங்கு வந்து சேர்வர்"  என்பது.  ஆகவே மகளிர் கூடுமிடமாகத் தொடங்கி, பின் பொதுவாக யாரும் தங்குமிடம் என்று பொருள் விரிந்தது என்று உணர்க, அரசிளங்குமரிகள் அவர்களின் தோழிகள் வேறு பெருமாட்டிகள்  முதலானோர் வந்து தங்கி உடைமாற்று ஒப்பனை முதலியன செய்துகொண்ட இடமென்று தெரிகிறது.  ஏனைப் பயன்பாடுகளும் சேர்ந்துகொண்டிருக்கும். இப்பொருள் பின் மாறிவிட்டது.  தேவரடியாள் என்பது போல. அரண்மனை தவிர அவர்கட்கு பிற வசதி இடங்கள் தேவைப்பட்டிருக்கும். வேறு உயர்ந்த பெண்களுக்கும் இத்தகைய இடம் வேண்டுமென்பது கூறவேண்டியதில்லை.

வண்டி வாகனங்களில் வந்து இறங்கிச் செல்வதால்  இறங்குதற் கருத்துடைய விகுதி மிக்கப் பொருத்தமானது.

இன்னும் வாசிக்க:


மக என்பதை விரித்து ஆய்கிறது,  இவ்விடுகை.




வியாழன், 12 மே, 2022

என்ன மசாலா? எந்த மசாலா?

இணைக்குறளாசிரியப்பா. 

( அடிகளில் சில் சீர்கள் குறைந்துவரத் தொடுக்கும்

ஆசிரியப்பா)


சிலமசா  லாவகை   நன்றாய்  இருக்கும்;

சிவவகை கறிக்குச்  சுவைதரா தவையே.

சாப்பிடும் மன்னர்  இதன்நீ   திபதிகள்!

ஆப்பிடு   வார்கள் இவர்களே   கடைக்கு!

கடைக்குள் நீர்போய்

எதைமசாலா  என்றுபோட்    டே நீர்

கறிவைத்       தீர்களோ?  என்று 

கடாவி     னீரெனில் கடிவர்  உமையே!

ஏனந்த  வம்பு?

வம்போ  ?     வேண்டாம்,   வேண்டாம்

வம்பு   வளர்ப்பின்  பின்புதலை யணையை

தம்பின்  முதுகில தன்பின்  கட்டணும்.

ஓரலை  பேசிப்  படமெடுத்  தாலே

பேரறி  வினரும் கண்டு களிப்பர்.

என்னம  சாலா என்பதை அறிந்தீர்

எண்ணம  னைத்தும்  இனித்திடக் குதிப்பீர்

என்று  குழந்தையும்  இனித்திட முடிக்கும்.

வாய்ப்பேச் சென்பது தாய்ப்பேச்   சினைப்போல்

இனிப்ப  தெனப்பா லதுவே

கனிப்பயன் காண்க மென்மை மிகுத்தே.

பொருள்:

சாப்பிடு மன்னர் -  சாப்பிடுகிறவர்களை மன்னர் என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுகிறது.

ஆப்பிடுகிறவர்கள்  -  ஆப்பு இடுகிறவர்கள் ( மசாலை சரியில்லை என்றால் இவர்கள் வரமாட்டார்கள்.  அதனால் " ஆப்பு இடுவார்கள்" எனப்பட்டது.

முதுகிலதன்பின் -  முதுகில் அதன் பின்

அலைபேசி  -  கைத்தொலைபேசி

கடாவி  -  கேள்வி கேட்டால்

முடிக்கும் -  சொல்லி முடிக்கும்

( பொருள் தொடர்கிறது)


  ( மசாலா பெட்டிகள் கடைமுன்னர் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.)

(பொருள் தொடர்ச்சி)


வம்பு என்ற இறுதிச் சொல் அடுத்த அடியிலும் வரும்படி அந்தாதித்  தொடையாகத் தொடுக்கப்பட்டுள்ளது.  பின்னரும் இதுபோன்றே முயலப்பட்டுள்ளது.

எனப்பாலது -  எனப்படுவது.   (  என, பான்மை உடையது )

எனற் பாலது என்பது இன்னொரு  வகைத் தொடர்.

தாய்ப்பேச்சு --- அன்னையின் பேச்சு

கனிப்பயன் -  கனிபோலும் பயன். ( உவமைத் தொகை)

மசாலா :  இச்சொல்லுக்கான விளக்கம் இங்கு வாசிக்கவும்:

https://sivamaalaa.blogspot.com/2014/06/blog-post_7508.html

உங்கள் கருத்துக்களைப் பின்னூட்டம் இடுக.






This shop is situated in Sengkang East.  Curry (sambar) and chutneys are tasty.  You must go early before 10.00 am for chutney to be served.  The tasty chutney finishes quickly.  Buses 161, 163. nearest MRT is Buangkok..   nearest road junction is Sengkang East Avenue x Sengkang East Rd.  LRT is Renjong.  There are other good shops too. What they did not hide was what curry powder they are using. ( Perhaps due to lack of space inside their place or temporarily left there). 

Written by APM.  




         This is not an advertisement.

செவ்வாய், 10 மே, 2022

அன்னைக்குப் பாடியது

 உலகமெல்லாம்  மகிழும் நம்  அன்னைகட்கே,

உலர்விலாத நன்றியிலே ஊறுமகிழ்வே!  

பலகற்றார் கல்லாதார்  வேறுபடார்,

அன்னையன்பு முன்னெவரும் ஒருமைகொள்வார்

குலவுகுழந்  தைகளெனில் ஒன்றுதன்மை

அன்னைபாசம் என்பதிலே உலகம் ஒன்று,

நிலவுமிது  படைத்திட்ட ஆண்டவரின்

நேர்நிற்கும் பொருளொன்றோ ஞாலத்தில்லை.


உரை:


உலகமெல்லாம்  மகிழும் நம்  அன்னைகட்கே   -----   நம் அன்னையரைப் பற்றி யாரும் எழுதினாலும் பேசினாலும் நினைத்தாலும் இவ்வுலகம் மகிழ்வு கொள்ளும்; 

உலர்விலாத நன்றியிலே ஊறுமகிழ்வே!  ----  இந்த மகிழ்ச்சியானது காய்ந்துவிட முடியாத ஒரு இயல்பினதான நன்றியில்  ஊறிவருகின்ற மகிழ்வு ஆகும்.  ( அதாவது நன்றி கலந்த மகிழ்ச்சி ).  

பலகற்றார் கல்லாதார்  வேறுபடார்,----  இதில் கற்றவர், கல்லாதவர் - தெரிந்தவர் தெரியாதவர் என்று வேற்றுமை இல்லை

அன்னையன்பு முன்னெவரும் ஒருமைகொள்வார்----- தாயன்பு என்பதில் நடவடிக்கை எதுவும் பன்மைநிலை கொள்வதைக் காணமுடிவதில்லை,  ( ஒன்றான நிலையே எடுப்பர் ),

குலவுகுழந்  தைகளெனில் ஒன்றுதன்மை  ---- தாயிடம் பிள்ளை குலவுதலிலும் ஒரு வேறுபாடு இல்லை,  எந்தக் குழந்தை ஆயினும் அன்னையின் அணைப்பிலே ஆனந்தம் காண்கிறது.

அன்னைபாசம் என்பதிலே உலகம் ஒன்று,-----  அன்னை பிள்ளையின்மேல் கொள்ளும் அன்பிலும்   வேறுபாடு இல்லை;

நிலவுமிது  படைத்திட்ட ஆண்டவரின்----இதுவே உலகில் நிலவுவதாகும்;  படைப்பில் 

நேர்நிற்கும் பொருளொன்றோ ஞாலத்தில்லை.---  இதற்கு நிகராக எதையும் கூறமுடியாது, இவ்வுலகில் என்றபடி

இவற்றை எல்லாம் கூட்டிச் சொன்னால்:

அன்னையர்க்கு என்றும்இணை கண்டதில்லை.

எல்லா அன்னையர்க்கும் எம் அன்புவணக்கம்.