திங்கள், 22 நவம்பர், 2021

குப்பை வீசும் குதூகலம்

 குப்பை எறிகின்ற முட்டாள் --- பிறரொடு

கூடிவாழ் தன்மையை எட்டான்!

எப்பையி லேனும  திட்டு --- அதை

எறிந்திடக் குப்பையின் தொட்டி.


இருப்பதை ஈங்குகண் டானோ --- அவன்

இருப்பி  னிறந்தவன்  தானோ? 

பொறுப்புடன் காரிய மாற்ற ---  அவன்

புகுந்திடல் இன்றிலே மாற்றம்.


வீசிய குப்பைகள் தம்மால் ---  வெள்ளம்

வீடு வரைமிகுந்  தேறி,

நாறிய துண்டடா  சென்னை  ----   செய்தி

நானிலம் கேட்டது மென்ன?


பொருள்:


எட்டான் -  அடையமாட்டான்

எப்பையி லேனும் -- எந்தப் பையிலாவது

(எப்பையிலேனும் அது இட்டு - எப்பையிலேனுமதிட்டு)

குப்பையின் தொட்டி -  வேண்டாத, வீசுகிறவற்றை இடும் கலம்

ஈங்கு - இங்கு

இருப்பின் இறந்தவன் -  வாழுகையில் பிணமானவன்

இன்றிலேமாற்றம் -  இல்லாவிட்டால் ஏமாற்றம்

வீடுவரை -   வீட்டினுள்ளும் என்க.

நானிலம் -  உலகம்.

கேட்டது - தொலைக்காட்சி முதலியவற்றால் அறிந்தது.



 

ஞாயிறு, 21 நவம்பர், 2021

வேற்றுமை முற்றுவினை விகுதிகள்

 அம்மா வந்தது,  தங்கை பாடியது,  அக்காள் காய்கறி வெட்டியது என்றெல்லாம் உயர்திணைப் பாங்கிலன்றி  இவர்களைச் சொல்வதென்பது தமிழ் இலக்கணப்படி ஏற்கவியலாதது என்றபோதிலும்,  தமிழகத்துச் சிற்றூர்களில் இவ்வாறு சில குழுக்களிடையே பேச்சு நிகழ்வது உண்மையாகும். ஆள் என்ற பெண்பால் விகுதி பெண்ணாட்சி குறிக்கும் ஏற்ற நிலையிலிருந்து பணிவின்மை குறிக்கும் நிலைக்கு இறங்கிவிட்டதனால்,  அப்பணிவினைத் தக்கவைத்துக்கொள்ளும் சிறந்த நோக்குடன் தான் இவர்கள் இவ்வாறு அஃறிணையில் பேசுகின்றனர் என்பது உண்மை. இதனை இலக்கணியரும் ஒப்புவர் என்பதனுடன், அதனை "வழுவமைதி" என்றும் ஏற்றுக்கொள்வர் என்பது நீங்கள் அறிந்ததுதான்.

சமஸ்கிருத மொழி நன்கமைக்கப்பட்டு அப்பெயரில் குறிக்கப்பட்ட காலத்தில், தமிழகச் சிற்றூர்வழக்கையே தன் வினைமுற்றுக்களில் பயன்படுத்திக்கொண்டது. அதே  இதே உதே  ( உது ஏ ) என்ற தமிழ்வடிவங்களில் உள்ள முதனிலை எழுத்துக்களை விலக்கிவிட்டு,  ஈறுகளைச் சமஸ்கிருத இலக்கணம் ஏற்றுக்கொண்டது.  மேலும் திணைப் பாகுபாட்டுக்கும் இடந்தரவில்லை.  எடுத்துக்காட்டாக:

நந்தனுதே! ஶைலசுதே! ஹர்ஷரதே!

கோஷரதே! ஹாஸரதே! மத்யகதே!

என்பன காண்க.

அள் அன் விகுதிகளைப் பான்மை காட்டுமாறு சங்கதம் பயன்படுத்துவதில்லை. இதனை ஒரு வேறுபட்ட முன்போக்குச் செலவு என்றும் சிலர் கருதலாம்.

அண்ணன் என்ற தமிழ்ச்சொல்,  ஏ என்னும் விளி பெற்று, அண்ணனே என்று வரும்.  விகுதி பெறாமல்,  அண்ணே என்றும் அண்ணா என்றும் விளியில் வரும். என் பிரிய பதியே என்று தமிழில் வருதலைவிட்டு,  பிரியபதே என்று சங்கதத்தில் வருவது  அண்ணனே என்று வாராமல் அண்ணே என்று சிற்றூர்களில் பேசப்படுவது போலுமே ஆகும்.

வினை எச்சத்தையே முற்றாகப் பயன்படுத்தி மலையாளம் முதலியவை புதுமை மேற்கொண்டன என்னலாமோ?  தமிழிலும் வினைமுற்று வளர்ச்சி என்பது பிற்காலத்தது ஆகும்.

( சேர்க்கப்பட்ட கூடுதல் பாகிகள் ( பாரா) காணாமற் போயின.  சில தட்டச்சுப் பிறழ்வுகளும் காணப்பட்டன.  பின்னவை திருத்தப்பட்டன).

(Different devices were used for additions to the post. This could have been the cause.

This will be  monitored. )


தூஷித்தல் என்பதன் மூலம்

 தூஷித்தல் என்ற பதமும் அவ்வப்போது எழுத்திலும் பேச்சிலும் வந்து நம்மை எதிர்கொள்கிறது. இது என்ன மொழிச்சொல் என்று நீங்கள் சிந்தித்ததுண்டா? இந்தச் சொல்லில் " ஷி " இருக்கிறது.  அதுதவிர, இச்சொல்லின் சிறப்பமைவு என்று ஒன்றுமில்லை, இயல்பான சொல்லே இது.

மலேசியா சிங்கப்பூர் முதலிய இடங்களில் வாழும் தமிழர்க்கு,  இந்த ஒரு சொல்லில் "ஶி" யை எடுத்துவிடுவதால், "  ஷி " என்பதிலிருந்து முற்றிலும் விடுதலை அடைந்துவிட முடிவதில்லை.  ஷியைத் தவிர்த்த மறு நிமிடமே,  ஒரு நண்பர் எதிரில் வருகிறார்.  அவர் பெயர் "பஷீர்!".  அவருடன் அன்பாகப் பேசுமுகத்தான் " என்ன பஷீர் ஐயா நலமா!"  என்று கேட்கும்போது , நாம் தவிர்த்த "  ஷி " வந்துவிடுகிறது.  அவர் பெயரைப் போய் " பசீர்" என்பது அவ்வளவு பொருத்தமாகத் தோன்றவில்லை. 

தொல்காப்பியனார் இலக்கணம் செய்த காலத்தில் நாம் வடவொலிகள் என்று குறிக்கும் திறத்தின அப்போதுதான் தமிழ்மொழி பேசுவோரை வந்தடைந்திருந்தன என்று எண்ணுவது சரியாக இருக்கும்.  அந்தத் தொடக்க நிலையில் அவற்றை விலக்கிவைத்தல் என்பது எளிதாக இருந்திருக்கும். ஆகையால் அந்த ஒலிகள் தமிழுக்குத் தேவையில்லை என்று அவர் கருதியிருக்க வேண்டும்.  எனவே தமிழ்ச் சொற்களில் அவற்றை விலக்குதல் நலம் என்று அவர் சூத்திரம் செய்தார்.

அவர் நூல்செய்த காலமோ இரண்டாம் கடல்கோளுக்குச் சற்றுப் பின்னர்!  தமிழர் பல நூல்களைக் கடல்கோளில் அப்போது இழந்துவிட்டிருந்த நிலையில் அவர் நூல்செய்தார். தமிழ் என்ற மொழிப்பெயர் அமைந்ததே,  எல்லாம் அமிழ்ந்து போய் அழிந்துவிட்ட பின்புதானாம்.   அமிழ் என்ற சொல்லினின்று பிறந்ததே தமிழ் என்று அறிஞர் சிலர் கருதுகின்றனர்.  அமிழ் - தமிழ் என்று பெயர் அமைந்தது என்று கருதுவர்.  நூல்கள் அழிந்துவிட்டன என்றால் ஒவ்வொரு நூலுக்கும் படிகள் (copies)  ஆயிரக் கணக்கில் இருந்திருக்கும் என்று எண்ணவேண்டாம்.   ஓர் ஆசிரியர் இயற்றிய நூலுக்கு ஒரு படிக்கு (காப்பி)  மேல் எங்கும் இருந்திருக்குமா என்பது ஐயப்பாடுதான்.  எல்லாம் மெனக்கெட்டு கையால் எழுதிப் பகர்ப்புச் செய்த நூல்கள்.  " வடசொற் கிளவி வடவெழு தொரீஇ "  என்றார் தொல்காப்பியனார்.

தூஷித்தல் என்பதில் ஷி இருப்பதால் அது வடசொல். அதாவது தமிழரின் வீடுகளுக்கு வெளியே மரத்தடிகளில் சாமிகும்பிட்டவர்களால் கையாளப்பட்ட ஒலி.  அப்படிச் சொல்லும் மந்திரங்களில்  "ஶ்"  "ஶீ  ஷீ ஷீ"  " உர் உர்" என்று ஒலி எழுப்பினால்தான் நன்றாக இருக்கும்.  வடம் - மரத்து அடி ( மரத்தடி) என்பதும் பொருள்.  

அதை எடுத்துவிட்டு,  தூசித்தல் என்றால் அது தமிழ்.   இப்போது இது "எழுத்தொடு புணர்ந்த சொல்" ஆகிவிட்டது,  தொல்காப்பியர் கூறியபடி.

தூசித்தல் என்பது,  தூசியைப்போல் ஒருவரை இழித்துப் பேசி, பரப்பிவிடுதல் என்பது தான்.

தூசு >  தூசு + இ >   தூசி > தூசித்தல்.   ( தூசியைப்போல் தூற்றுவது).

தூ > துப்பு.

தூ > தூவு

தூ > தூசு >  தூசி.

தூ  >  தூற்று.

தூ > தூள்.

து > துளி.

எல்லாம் பொடிகளைக் காற்றில் பரப்புதல் அல்லது அதுபோல்வது.

தூசு + அன் + அம் >  தூசனம் > தூஷனம் என்றானது.

இது ஒரு செயலொப்புமைச் சொல். தூவுதல் என்பதனோடு ஒப்புமை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.