ஞாயிறு, 27 ஜூன், 2021

சில காலணிகளின் பெயர்கள்-

காலணிகளின் பெயர்கள் சிலவற்றை இன்று அலசி எடுத்து நோக்குவோம்.

பாதுகை


இதற்குப்  பாதுகம் (அம் விகுதி , மற்றும் மராடி  என்றும் கூறுவதுண்டு.  மிதியடி எனலுமாகும். "கால்கட்டை" என்பது கேள்விப்பட்டிருக்கிறோம்.   மராடி என்பது மர அடி என்பதன் மரூஉ. 

பாதுகை என்பது ஒரு காலணிவகை. (மரத்தாலானதும் தெய்வச்சிலைகட்கு அணிவிப்பதும் ஆம் )   இக்காலத்தில் காலுறையையும்  காலணிகளோடு கூடவே வைத்துத்தான் ஆய்வு செய்யவேண்டியுள்ளது. தமிழ் இலக்கியத்தில் காலுறைகள் பற்றி எதுவும் கண்டதாய் எம் நினைவில் இல்லை. காலுறை யணிதல்  மேலைநாட்டினர் வழக்கமாய் இருக்கலாம்வெப்பமிக்க நாடுகளில் வாழ்ந்தோருக்குக் காலுறைகள்  அணியும் வழக்கம் இருந்ததற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்னலாம். உடையில் கொஞ்சம் விலகல் அல்லது நீம்பல் இருந்தாலும் குளிர் உட்புகுந்து வருத்தும் இடங்களில் நாம் வாழவில்லைஉலகுலாவுக்குச் செல்வதென்பது வேறு.

நாம் நடக்கும்போது காலும்  ,  அணிந்துள்ளபோது  காலணியும் நிலத்தில் பதிகின்றன.   இதனைக் காரணியாகக் கொண்டு காலணிப் பெயர்கள் சில தோன்றியுள்ளன..  ஆதலின் கவனத்துக்குரிய  அடிச்சொல் " பதி(தல்)"   என்பது ஆகிறதுபதி என்பதன் முந்துவடிவம் பது என்பதுஅதனின் மூத்தது பல் என்ற அடிச்சொல்லேஅதனின் தாய்ச்சொல் எனின் அது புல் என்பதுஅதன் மூலப்பொருள் "பொருந்து" என்பதே ஆகும் இதனை இப்போது ஒரு வரிசைப் படுத்தினால் -----:


அடிச்சொற்கள்:

புல்  -  வினைச்சொல்: புல்லுதல்,  எனின் பொருந்துதல்.   தரையில் முளைக்கும் புல்,  அப்பெயர் பெற்றது அது தரையில்  செறிந்து பொருந்தி வளர்வதனால்தான்.   இது காரணப் பெயரானாலும், சில் இலக்கண நூல்கள் இதை இடுகுறி என்று வகைப்படுத்தியிருக்கக் கூடும்.  இதற்குக் காரணம், இச்சொல் நோக்கியவுடன் காரணம் தெற்றெனத் தெரியாமையினால் தான். > பல் > பது > பத்து;

புல் >பல் > பற்று ( பல் + து)

புல் பல் ( கடைக்குறை) >  + து பத்து > பது.

இந்த ஈரெழுத்துக்களையும் இணைத்ததில்

ப து பத்து என்று வந்தது தோன்றல்.

பத்து என்பது பின் பது என்று வரின் அது கெடுதல் ( அதாவது த் என்ற மெய் ஒழிந்தது.)

இனிப் பது என்பது பாது என்று வரின் அது  திரிதல். எப்படித் திரிதல்நீண்டு திரிதல்.

பது > பாதுமுதனிலை நீண்டு திரிந்தது என்னும் --   இலக்கணம்.

பொருளைப் பொறுத்தவரை,  

பதிதல் ( கால் அல்லது காலணி நிலத்தில் பதிதல் என்பதே அடிப்படைக் கருத்துஇங்கு கவனம்பெறும் எல்லாச் சொல்லுருக்களுக்கும் இது பொதுப்பொருள். )

 பாது என்பது சொல்லின் பகுதி.

பாது + கை பாதுகை ஆகிறது. இது ஒரு காலணி அல்லது காலணி வகை.  இங்கு, கை எனல் விகுதி   .

பற்றன் ஒருவன், இராமனின் பாதுகையே தனக்குத் துணை ஆகும் என்று பாடும்போது இச்சொல்லைப் பயன்படுத்துகிறான்.

இராமபிரானின் பாதுகை  ஒரு தெய்வம் அணிந்த பாதுகை ஆதலால், பாதுகை என்பதற்குப் புனிதமானது என்ற பொருளும் சில மொழிகளில் உண்டானது.

மலாய் மொழியில்:

 

மலாய் மொழியிலும் அப் பொருள் காணப்படுகிறது.  (Sri Paduka Baginda )

இனி, சப்பாத்து என்பதிலும் இறுதியில் இச்சொல் உள்ளது.

சப்பை + பாத்து > சப்பாத்துஇது ஒரு பகவொட்டுச் சொல். காலடிப் பகுதியில் சப்பையாக நிலத்தில் பதிவதான காலணி.

சப்பாத்துக்கட்டை என்றும் கூறுவர்இது ஒரு கள்ளி வகைக்கும் பெயராகிச் சப்பாத்துக்கள்ளி என்று கூறுவர்.

சப்பாத்துக்கள்ளிக்குப் பலகைக்கள்ளி என்றும் பெயருண்மையால்இதன் சப்பை உருவத் தன்மை தெரியலாகும்.

பற்று என்ற இலக்கியச் சொல்லும் பல் > பத்து என்ற அடிகளிலிருந்து வருவதே. பற்று என்பதற்கு மூலம் மக்கள் மொழியே.  

இங்கு நாம் கருதும் பத்து எண்ணிக்கையன்று. 

 "பற்றுக பற்றற்றார் பற்றினை ......."  குறள்.

மக்கள் மொழி

மக்கள் மொழியிலிருந்து இலக்கிய மொழி கிளைத்தது. அவ்வாறின்றி ஏற்பட்ட எந்த மொழியும் வெறும் புனைமொழி ஆகும்புலவன் புனைந்த மொழி பேச்சு மொழியாகாமல் வெறும் செத்த மொழியாக ஓலைச்சுவடிகளில் மட்டும் இருக்கும்தமிழின் சிறப்பு அது பேச்சு மொழி; எழுத்து மொழியும் ஆகும்.

கிளவி என்ற பதத்திற்குச் சொல் என்பது பொருள்ஏன் இப்பெயர்அது பேச்சு மொழியிலிருந்து கிளம்பியகிளந்த  சொல்கிள் மேலெழு என்பது பொருள்

பகுபதம் பகாப்பதம் என்பவெல்லாம் இருக்கும் சொல்லை இருந்தபடி வைத்துப் படித்துக்கொண்டிருக்கும் புலவனுக்குரியவை. அவன் எதற்கும் எதையும் புதுவது அறிய முற்படாதவன். மொழியை மிக்கப் பழைமையான காலத்திலே அறிவியல்போல் பாவித்து ஆங்காங்கு சிந்தனையைத் தெளித்துவிட்ட தொல்காப்பிய முனிபோலும் கதிரவனுக்கு ஒரு விதிவிலக்கு. ஆதலின் ஆய்வாளனொருவன் இலக்கணப்புலவன் பகுபதம் என்று சொன்னதையும் பகுத்துப் பார்க்கச்  சொல்லியலில் தயங்குதல் இல்லை. பகாப்பதம் என்று முடிவுகட்டியதையும் துருவிச் சென்று உண்மைகாணப் பின்வாங்குவதில்லை.  ஆதலின் பகாப்பதம்  என்பதொன்றில்லை இங்கு

அது இலக்கணத்திற்றான் உண்டென்று கொள்க.


சப்பை என்பது

ஒரு பட்டை வடிவப் பொருளை அல்லது சப்பையான பொருளைத் தரையில் எறிந்தால்,  அது சப்  என்ற ஒலியுடன் அடைவிடம்  தொடும்.   இவ்வொலியிற் பிறந்ததே சப்பை என்ற சொல். இவ்வாறு விழத்தக்க பொருளேயன்றி பிறவகைப் பொருளுக்கும் இச்சொல் பொருந்துவதுண்டு;  எடுத்துக்காட்டு,  சப்பை மூக்கு என்பது.  செயலிலும் பொருந்தும்:  எ-டு:  சப்பைக் கட்டு. பிறபயன்பாடுகளும் வருதல் உண்டு.

முடிவுரை:

ஒரு கவியோ கட்டுரையாளனோ,  பதத்தின் பொருளை நன்கு அறிந்திருப்பானாகில்,  சொற்களைத்  திறத்துடன் கையாள்வான். பொருண்மை தவறாத நிலையில், கருத்துகள் துல்லியமாகப் படிப்பவன்முன் வைக்கப்பட்டு,  மொழியின் பயன்பாடு மேனிலை கொள்ளும். அதனால் சொல்லின் பொருளைச் சரியாக அறிதல் எவ்வாறு நோக்கினும் நன்மையே ஆகும்.  


அறிக மகிழ்க

மெய்ப்பு பின் 



-----------------------------------------------------------------------------------------------------------------------

EDIT RESERVE  - PL DO NOT READ.


காலணிகளின் பெயர்கள் சிலவற்றை இன்று அலசி எடுத்து நோக்குவோம்.

பாதுகை என்பது ஒரு காலணிவகை.  இக்காலத்தில் காலுறையையும் காலணிகளோடு கூடவே வைத்துத்தான் ஆய்வு செய்யவேண்டியுள்ளது. தமிழ் இலக்கியத்தில் காலுறைகள் பற்றி எதுவும் கண்டதாய் எம் நினைவில் இல்லை. இது மேலைநாட்டினர் வழக்கமாய் இருக்கலாம்.  வெப்பமிக்க நாடுகளில் வாழ்ந்தோருக்குக் காலுறைகள்  அணியும் வழக்கம் இருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்னலாம். உடையில் கொஞ்சல் விலகல் அல்லது நீம்பல் இருந்தாலும் குளிர் உட்புகுந்து வருத்தும் இடங்களில் நாம் வாழவில்லை;  உலகுலாவுக்குச் செல்வதென்பது வேறு.

நாம் நடக்கும்போது காலும்  ,  அணிந்துள்ள காலணியும் நிலத்தில் பதிகின்றன.   இதனைக் காரணியாகக் கொண்டு காலணிப் பெயர்கள் சில தோன்றியுள்ளன..  ஆதலின் கவனத்துக்குரிய  அடிச்சொல் " பதி(தல்)"   என்பது ஆகிறது.  பதி என்பதன் முந்துவடிவம் பது என்பது.  அதனின் மூத்தது பல் என்ற அடிச்சொல்லே.  அதனின் தாய்ச்சொல் எனின் அது புல் என்பது.  அதன் மூலப்பொருள் பொருந்து என்பதே ஆகும்.  இப்போது இதனை இப்போது ஒரு வரிசைப் படுத்தினால் -----

புல் > பல் > பது > பத்து;

புல் >பல் > பற்று ( பல் + து)

புல் >  பல் >  ப ( கடைக்குறை) >  ப + து >  பத்து > பது.

இந்த ஈரெழுத்துக்களையும் இணைத்ததில்

ப து >  பத்து என்று வந்தது தோன்றல்.

பத்து என்பது பின் பது என்று வரின் அது கெடுதல் ( அதாவது த் என்ற மெய் ஒழிந்தது.)

இனிப் பது என்பது பாது என்று வரின் அது  திரிதல். எப்படித் திரிதல்?  நீண்டு திரிதல்.

பது > பாது.  முதனிலை நீண்டு திரிந்தது என்னும்,   இலக்கணம்.

பொருளைப் பொறுத்தவரை,  

பதிதல் ( கால் அல்லது காலணி நிலத்தில் பதிதல் என்பதே அடிப்படைக் கருத்து:  இங்கு கவனம்பெறும் எல்லாச் சொல்லுருக்களுக்கும் இது பொதுப்பொருள். )

 பாது என்பது பகுதி.

பாது + கை >  பாதுகை ஆகிறது. இது ஒரு காலணி அல்லது காலணி வகை.

பற்றன் ஒருவன், இராமனின் பாதுகையே தனக்குத் துணை ஆகும் என்று பாடும்போது இச்சொல்லைப் பயன்படுத்துகிறான்.

இராமபிரானின் பாதுகை  ஒரு தெயவம் அணிந்த பாதுகை ஆதலால், பாதுகை என்பதற்குப் புனிதமானது என்ற பொருளும் சில மொழிகளில் உண்டானது.

மலாய் மொழியிலும் அப் பொருள் காணப்படுகிறது.  (Sri Paduka Baginda )

இனி, சப்பாத்து என்பதிலும் இறுதியில் இச்சொல் உள்ளது.

சப்பை + பாத்து > சப்பாத்து.  இது ஒரு பகவொட்டுச் சொல். காலடிப் பகுதியில் சப்பையாக நிலத்தில் பதிவதான காலணி.

சப்பாத்துக்கட்டை என்றும் கூறுவர்.  இது ஒரு கள்ளி வகைக்கும் பெயராகிச் சப்பாத்துக்கள்ளி என்று கூறுவர்.

சப்பாத்துக்கள்ளிக்குப் பலகைக்கள்ளி என்றும் பெயருண்மையால்,  இதன் சப்பை உருவத் தன்மை தெரியலாகும்.

பற்று என்ற இலக்கியச் சொல்லும் பல் > பத்து என்ற அடிகளிலிருந்து வருவதே. பற்று என்பதற்கு மூலம் மக்கள் மொழியே.

"பற்றுக பற்றற்றார் பற்றினை ......."  குறள்.

மக்கள் மொழியிலிருந்து இலக்கிய மொழி கிளைத்தது. அவ்வாறின்றி ஏற்பட்ட எந்த மொழியும் வெறும் புனைமொழி ஆகும்.  புலவன் புனைந்த மொழி பேச்சு மொழியாகமல் வெறும் செத்த மொழியாக ஓலைச்சுவடிகளில் மட்டும் இருக்கும்.  தமிழின் சிறப்பு அது பேச்சு மொழி; எழுத்து மொழியும் ஆகும்.

கிளவி என்ற பதத்திற்குச் சொல் என்பது பொருள்.  ஏன் இப்பெயர்?  அது பேச்சு மொழியிலிருந்து கிளம்பிய,  கிளந்த  சொல்.  கிள் -  மேலெழு என்பது பொருள். 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின் 



 

மருத்துவரிடம் சென்றோம் NOT CORONA.

{இன்றுகாலை மருத்துவரிடம் செல்ல வேண்டியதாயிற்று அன்னையை

அழைத்துக்கொண்டு. அந்நிகழ்வைத் தெரிவிக்கும் ஒரு சிறுகவிதை.} 


சிறுகுழவிப் பருவத்தில் எனைய  ணைத்தார்

இன்னமுதை ஊட்டினவர் எடுத்தே ஆட்டிப்

பலவொலியும் செவிகுளிரப் பதித்துப் பண்ணில்

பரவயமே உறவைத்தார்  அருமை  அன்னை;

விலவுதலும் கூடுவதோ ? அன்ன வர்க்கே

விலாப்புறத்து வலியாலே துடித்து விட்டார்.

குலவன்பு மொழியோடே கூட்டிச் சென்றேன்

குலைதலற மருத்துவரைக் குறுகி  னோமே.  1

 

அருஞ்சொற்கள்

விலவுதலும் -  விட்டு விலகி நிற்பதும்.  

அன்னைக்கு முடியவில்லை என்றால் பிள்ளை

உதவாமல் நிற்கமுடியாது.

கூடுவதோ - முடியுமா?

குலவன்பு -  மிகுந்த அன்புடன்.

குலைதலற -  குலைதல் அற -  மனத்திடம் குறைந்துவிடாமல்.

குறுகி -  அணுகி.


மருத்துவர்முன்:

பாசமுறு  அன்னைதனைப் பார்த்து விட்டு,

பரிந்துரைத்த படி,தாமே சூசி யிட்டார்

நேசமுற மருந்தளித்துப் பேச லுற்றார் 

நீங்களினி அஞ்சுதலை நீப்பீர் என்றே

ஓசமுற வலி நீங்க,  உளம்க  ளித்தோம்

உடன்வீடு பின்வந்தோம் உமைய ருள்தான்;

தேசமிதில் தொற்றென்பார் அதுவோ அன்று;

தேகமுற்ற சிறுநோவே யாவும் நன்றே.   2


அருஞ்சொற்கள்

சூசி = ஊசி

அஞ்சுதலை -  அச்சமடைதலை

நீப்பீர் -  விலக்குதல் செய்வீர்.

ஓசம் உற -  ( முகத்தில் ) ஒளி பெறும்படியாக.  

இந்த மகிழ்வை முகமன்றி வேறெது காட்டும்?

ஓசமென்பது ஒரு மேனிலைத் தகுதி என்ற பொருளும் உடையது.

நோய் நீங்கிடில் ஓசம் தான்.  இது ஓச்சு(தல்) + அம் >  ஓசு +அம். [ச்] இடைக்குறை 

உடன் - ஒன்றாக

நல்ல வேளையாக இது கொரனா இல்லை.


இவ்வாறு உறவினர் நண்பர்கட்குத் தெரிவிக்கிறோம். நன்றி. 



வெள்ளி, 25 ஜூன், 2021

கொடிய கூற்றத்தால் மறைந்தோர்க்கு நெகிழுரை

 படித்தலில் பார்த்தலில் பதிந்துதம் சிந்தையைப்

பறிகொடுத் தோர்பலர் போய்விட்டனர்;

உடைத்தது பொன்மனத் துயர்ந்தவர் குழுவினை

ஒப்பதில்    லாத் தீய கொடுங்கூற்றமே. 1


படித்தலில் -  இடுகைகளைப் படிப்பதில்

பார்த்தலில் -  என்ன உள்ளது என்று நோட்டமிட்டோர் செயலில்

கொடுங்கூற்றமே = கொடிய எமனாகிய  கோவிட்19 நோய்

உடைத்தது குழுவினை - நோய் உள்ளே வந்து சிலரைக் கொன்றுவிட்டது.

[ இறந்தோரை பொன்மனத்தை உடையோர் என்றும்   பொதுவான நோக்குடையோர்

என்பதால் குழுவினர் எனத் தக்கார் என்றும்  இவ்வரிகள் போற்றுகின்றன .]

[ பொது நோக்காலும் ஆர்வத்தினாலும் யாவரிடத்தும் காணப்பெறும்

தம் செயல்பாட்டினாலே குழு என்பதறியப்படுவதால் குழுவாயினர் ]

 

முன்னூறு நானூறு  முன்வந்து  பாய்ந்தவர்

முத்த  மிழ்க்கடல் முட்ட நீந்தித்

தந்நா தங்கிடத் தாம்பல கண்டனர்

தம்மொழி தழைந்திட ஓங்கிநின்றார் 2


பாய்ந்தவர் -  வலைப்பூவில் விரைந்து வந்து புகுந்தோர்

முட்ட -  முற்றவும்

தந்நா தங்கிட -  தம் நாவில் தமிழ் நிலைநிற்க.

[தம் நாவில் இவ்விடுகைகளில் உள்ள தமிழும் அதன் மூலம்

கிட்டும் அறி பொருளும் குறித்தது.]

பல கண்டனர் -  பல கருத்துகளை அறிந்தின்புற்றனர்

தழைந்திட -  தழைத்திட


முதலாம் தொற்றலை மூலை முடுக்கெலாம்

மூண்டத    னால்அதைத் தாண்டிவர

எதனா    லும் இய லாதமக்  கள்அங்கே

இறந்தனர் தாங்காத்  துயரமிதே.  3


தொற்றலை -  தொற்று அலை


இரண்டாம் அலையின் இறுதியில் வந்தவர்

இருந்தவர் தம்மில் பாதியன்றே!

உறண்டி மடிந்தோரை மறவா    தேதலை

இருகால்  பணிந்து தாழ்கின்றமே. 4



இரண்டாம் அலை -  கொரனா அலை 2

உறண்டி -  நோயினால் நலம் குன்றி

இருகால் பணிந்து -  இருகால்களையும் பணிந்து;/   இருமுறையும்

வணங்கி.  ( இரட்டுறல்)

தாழ்கின்றமே -  வணங்குகிறோம்.

இக்கவியில் தொற்று என்றது கோவிட்19  நோயை