செவ்வாய், 2 அக்டோபர், 2018

அடிச்சொற்கள்: புள், பிள்.

இன்று புட்டி என்ற சொல்லின் அமைப்பைத் தெரிந்துகொள்வோம்.

புள் பிள் என்று இரண்டு அடிச்சொற்கள் உள்ளன.  இரண்டும் ஒரு பொருளில் ஏற்படும் துளை போன்ற இடைவெளியையும் இரண்டாக வேறுபட்டு நிற்கும் நிலையும் குறிக்கவல்லவை என்பதை உணர்ந்துகொள்க.

புள் > புழை என்ற சொல்லைக் காண்க. புழை என்ற தொல் ஒரு பெரிய அல்லது சிறிய துவாரத்தைக் குறிக்கலாம்.  அந்தக் காலத்தில்  ஓர் ஆலமரத்தில் ஒரு பெரிய துளை இருந்தது.  இதன் காரணமாக அந்த ஊருக்கே " ஆலப் புழை" என்ற பெயர் வந்து நிலைத்து இன்றுவரை அது நிலவுகின்றது.

இப் புழையில் விழுப்பம் அல்லது சிறப்பு  ( விழேடம்)  என்னவென்று தெரியவில்லை.  விழேடமாவது விழுமிதாய் எடுத்துக்கொள்ளத் தக்க உள்ளீடு.

புள் என்ற அடிச்சொல்லுடன் தி என்னும் விகுதி சேர்க்க, புட்டி ஆகும்.  புள்+தி = புட்டி. துளையுள்ள ஏனம் அல்லது பாத்திரம். ளகர ஒற்றின் இறுவாய் தகர வருக்கம் வர, டகரம் இரட்டித்துச் சொல் அமையும்.

இப்போது சில எடுத்துக்காட்டுகளைக் கூறி இதனைத் தெளிவுறுத்துவாம்:

கள் + து =  கட்டு > கட்டுதல் (வினைச்சொல்).

கள் +  தி =  கட்டி.  நன் கு கட்டப்பெற்று இறுக்கமானதே கட்டி.  இங்கு கட்டப்பெறும் பொருள்:  அணுத்திரள்களாகவும் இருக்கலாம்.  தூள்களாகவும் இருக்கலாம். எதுவாயினும் கட்டும் பசையினால் அல்லது பிறவால், கட்டப்பெற்றுக் கட்டி ஆகிறது.

குள் >  குள்ளை ( நீட்டக் குறைவு, உயரக் குறைவு).

குள் + தி >  குட்டி.  ( நாய்க்குட்டி, பூனைக்குட்டி,  சின்னக்குட்டி ).

பள் + தி = பட்டி.
தாழ்வான நிலங்களில் நீர் இருக்கும். விளைச்சலுக்கு ஏற்ற இடமாக இருக்கலாம். இதன் காரணமாக,  இத்தகு தலங்களில் அமைந்த குடியிருப்புகள் பட்டி எனப்பட்டன.   பட்டு என்றும் வரும்:  எடுத்துக்காட்டு: அம்மானிப்பட்டு. (ஊர்ப்பெயர்). குளத்தூரான்பட்டு.  ( நீங்கள் வரைபடங்களில் தேடி மேற்கொண்டு ஆய்வு செய்து தெரிவியுங்கள்).

இவ்வளவும் புட்டி என்ற சொல்லை விளக்கவே சொல்கிறோம்).

பிள் என்பதிலிருந்து பிளவு, பிளத்தல் இன்னும் பல காண்க. பின் அளவளாவுவோம்.    நன்றி.

 


அடிக்குறிப்புகள்:

விழு+ எடு + அம் = விழேடம்.  இதில் விழு = சிறப்பு.  எடு+ அம் = ஏடம் என்று, முதனிலை நீண்டு பெயர்ச்சொல் ஆனது.  இது பின் அயல்திரிபுகள் கொண்டு உருமாறியதை ஈண்டு கவனிக்கவில்லை.

The Dangers lurking in soft drinks

நாம் வீட்டிலிருக்கும்போது நம்மை வீட்டில் கவனித்துக்கொள்கிறார்கள். நன்`கு கொதிக்கவைத்து ஆறிய நீரையே பலர் அருந்துகின்றனர்.  நீர்க்குழாய்களில் வரும் நீரைக் கொதிக்கவைக்கமலே குடிப்போரும் உண்டு. பலருக்கு இப்படிக் குடிப்பதும் ஒத்துப்போகிறது.

வேறு சிலர் தாகம் எடுத்தால் ( அல்லது "தாகம் தவித்தால்" )  சோஃட் ட்ரிங்ஸ்" எனப்படும் மென் தேறலையே  ( மென் பானம் )  அடிக்கடி குடித்துக்கொண்டிருக்கின்றனர்.  இதனால் தேவையற்ற சீனி உடலிற் புகுந்து உயிருக்கு உலைவைத்துவிடுகிற தென்பதை நாமறிந்துகொள்வது நலம்.  சீனி கலந்த பொருட்களைக் குறைப்பது அல்லது கைவிடுவதே சரியானது என்று மருத்துவர்கள் எங்கும் கூறிவந்தாலும்,  புட்டியில் அடைத்த மின் தேறல்கள் நல்லபடியாக விற்றுக்கொண்டிருப்பதாகக் கடைக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

எங்கு சென்றாலும் நம் சொந்தக் குடிநீரை ஒரு புட்டியில் கொண்டுசெல்வதே சிறந்தது என்று பலரும் ஆலோசனை கலந்துகொள்வதைப் பலமுறை செவிமடுத்துள்ளோம்.

புட்டியில் அடைத்த சீனி மென் தேறல்களையே குடித்துவந்த ஒரு பையன் மரணம் அடைந்துவிட்டதை கீழ்க்கண்ட செய்தி தெரிவிக்கிறது.

http://www.msn.com/en-sg/news/world/our-son-didnt-gorge-himself-to-death-say-grieving-parents-of-boy-whose-downfall-was-fizzy-drinks/ar-BBNQXe0?li=AAaGkVj&ocid=ientp

மேற்கண்டதைச் சொடுக்கி வாசிக்கவும்.

A man whose overweight son died from a blood clot has warned of the danger of sugar-packed soft drinks.
Lewis Albon, 13, died in dad Stephen Platt’s arms as a clot travelled from his leg to his chest, causing cardiac arrest......................................

சில வேளைகளில் கனிம மென் தேறல்களும்கூடத் தொல்லை தரலாம்.  உங்கள் மருத்துவரின் ஆலோசனைப் படியே பின்பற்றவும். 

--------------------------------------------








சனி தனி; தங்கு சங்கம்.

சிலர் சனி என்ற பெயரைச் சொல்லவும் அஞ்சுமளவிற்கு சனி மிகுவலிமை பெற்ற கோளாகும். இதன் நிறம் கருப்பு ஆகும். அதனால் தமிழில் இதற்குக் காரி என்றும் பெயருண்டு.  சில சோதிடப் பாடல்களில் காரி என்ற சொல் பயன்படுத்தப்படுவதுண்டு.

எந்தக் கோளுக்கும் ஈசுவரப் பட்டமில்லை. ஒரு விதிவிலக்காக சனிக்குமட்டும் ஈசுவரன் என்பர்.  சனீசுவரன். ஏழரை நாட்டான் என்றால் எல்லோருக்கும் அச்சம்தான்.

ஒரு தனிமதிப்பு உடைய கோளாதலின் தனி என்ற சொல்லே திரிந்து சனி என்று அமைந்தது.

அத்தன் என்ற அப்பனைக் குறிக்கும் சொல், அச்சன் என்று திரிந்து தகரம் சகரம் ஆயினது காண்க.  இனி தசை > சதை என்பதும் காண்க. இதன்படியே தனி என்பதும் சனி என்று திரிந்தது. வியத்தற்கு ஒன்றுமில்லாத் திரிபு இதுவாகும்.

இதேபோல் பல புலவர்களும் வந்து தங்கி  அரசன் இட்ட உணவினையும் உண்டு பின் அவனைக் கண்டு கவிபாடிப் பரிசில் பெற்றுச் சென்ற இடம், சங்கம் ஆனது.  தங்கு > சங்கு > சங்கம்.

ஒரு நத்தைபோலும் உயிரி, தங்கிவாழும் கூட்டுக்குச் சங்கு என்ற பெயர் மிக்கப் பொருத்தமன்றோ. பின்னர் வெறும் சங்கை எடுத்து ஊதி  அவ்வொலியையும் சங்கொலி என்றனர்.  நாவு, சங்கு வாய் என எல்லாம் இணைந்து எழுப்பிய ஒலி, சங்கொலி, சங்க நாதம் எனப்பட்டது.

சிறிய சங்குகளைக் கோத்து மாலைபோல் கழுத்தில் அணிந்தனர். பிற்காலத்தில் போதுமான சங்கு கிட்டாததாலோ அல்லது வேறு காரணத்தாலோ சங்கு இல்லாத மாலைகள் அணிந்தனர். அது சங்கு இல்லாதது ஆகையினால் சங்கிலி  சங்கு இலி  ஆனது.  சங்கும் அம் விகுதி பெற்றுச் சங்கமானது. அப்போது ஒலி என்றும் கழகம்  என்றும் பொருள்பெறும்.

சங்கிலிக் கறுப்பனுக்கும் சங்கிலிக்கும் வந்த தொடர்பென்ன?

தாம் சேருமிடத்தில் இருப்பதைத் தங்குதல் என்றனர்.  தம்+கு.    தன் என்பது ஒருமை; தம் என்பது பன்மை ஆகும்.  கு என்பது சேர்விடம் குறிக்கும் உருபு.

தான் தான் என்று இரு தான் கள் சேர்ந்து தாம் ஆகி,  தாம் சேர்விடம் தம்+கு  என உருவாகும்;  இது தங்கு ஆனது.  தங்கு> சங்கு > சங்கம். தான்-கள் பல தங்கிய இடம் சங்கம். இதில் என்ன அயல்மொழி? ஒன்றுமில்லை. இது இனிய சொல்லாதலின் பலரும் பயன்படுத்திக் கொண்டமை தமிழின் உயர்வையும் வழங்கலையும் உலகுக்கு உணர்த்தும்.