ஞாயிறு, 14 ஜனவரி, 2018

80 ஆண்டு இந்துக்கோயில் இடிப்பு: நிலம் வாங்கினோர் நடவடிக்கை

இந்தச் செய்தியை இங்கு வாசிக்க:

/search?q=Masai+temple+demolition&client=firefox-b&dcr=0&tbm=isch&source=iu&ictx=1&fir=IaSTfD7kSFz

At Demolished Masai Temple! The public... - Malaysian Tamilar Kural

https://www.facebook.com/TamilarKural.../1810021032364561/
At Demolished Masai Temple! The public gathering to save the Temple!
https://www.google.com.sg/search?q=Masai+temple+demolition&ie=utf-8&oe=utf-8&client=firefox-b&gfe_rd=cr&dcr=0&ei=xVVbWqGPMNvmugS1ko2gBg
 
https://www.thestar.com.my/news/nation/2018/01/13/devotees-urge-authorities-to-halt-temple-demolition/
Compiled by THO XIN YI, ROYCE TAN and R. ARAVINTHAN
Read more at https://www.thestar.com.my/news/nation/2018/01/13/devotees-urge-authorities-to-halt-temple-demolition/#EQwTJURrkcKDkO5e.99

நாளிதழ் வாக்கியங்கள் காதுக்கெட்டிய பதில்கள்



வாக்கியமும் கேள்வியும்
எழுத்தில் தோன்றும் சில கருத்துகளும்  அவற்றில் புறப்படும் கேள்விகளும்.

1    அவர் தனிமனிதரல்ல;  அவர் நம் இனத்தின் சொத்து. அவரை அடிக்கக்கூடாது. 

அவர் பொதுமனிதர் என்றால் அவர் உயர் திணையாகவே இருக்கிறார் என்று பொருள்.  அவர் சொத்தாகிவிட்டால் அஃறிணையாகிவிடுகிறார். தனிச்சொத்தானாலும் பொதுச்சொத்தானாலும் விலைப்பொருளாகிவிடலாம். அவரை விற்றுவிட நீங்கள் ஒப்பினால், நாங்கள் வாங்கிக் கொண்டுபோய் அப்புறம் அடிக்கிறோம்.

2  சிலர் தங்கள் சுயநலத்திற்காக அவரை அடிப்போம் என்`கிறார்கள்.

அப்படியானால் பொதுநலத்திற்காக அவரை அடிப்போம் என்று சொல்வது சரி என்`கிறீரோ?

3  எல்லா நதிகளையும் நான் இணைப்பேன்.

உம் மாநிலத்தில் உள்ள நதிகளை இணைத்தாலே அது பெரிய காரியம்.  அடுத்தமாநில நதியை இணைக்க அவர்கள் இணங்கவேண்டுமே!

4  எல்லா அரசியல் கட்சிகளையும் இணைத்தால் நதிநீர் கிடைத்துவிடும்.

அப்படியா? இந்த அரசியல் கட்சிகளில்தான் நதிகள் ஓடுகின்றனவோ?

5  நிறைய இளைஞர்கள் கூடுகிறார்கள்.  இப்போது       விழிப்புணர்வு  ஏற்பட்டுவிட்டது.

ஒரு யானையைப் பார்க்கவும் கூட்டம் கூடுகிறது.  யானையைப் பற்றிய விழிப்பும் ஏற்பட்டுவிட்டது. இனி யானைகளுக்கு நல்ல நேரம்தான்.






சனி, 13 ஜனவரி, 2018

பொங்கல் வாழ்த்து அனைவருக்கும்.



உழுதுண்பார் உலகுக்கும் உணவளிப்பார்
 உயர்ந்தோராம்  அவரென்போம்
கொண்டாடும்
பொங்கல்  நன்னாள்;

பழுதில்லை  பாரெங்கும் யார்பிறரும் 
அவருடனே பொழுதெல்லாம்
களித்தாடிப்
பொஙகல் உண்டால்;

மெழுகாக உருகுள்ளம் படைத்தவர்கள்
உள்ளிலொரு கபடமற்றார்
மேதினியில்
 மக்கள் வாழ

அழகாகத் தம்கடனை ஆற்றிடுவார்
அவர்துயரெங் கிருந்தாலும்
அதுதுடைத்தல்
 கடனே யார்க்கும்;

பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக.
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.