வெள்ளி, 24 மார்ச், 2017

பைரவர் : இரவனுக்கு நன்றி

  பைரவர் என்பது நாம் நம் ஆலயங்களில் அடிக்கடி கேட்கும் சொல். பைரவர் சாமியைக் கும்பிடும் பற்றரும் அதிகமே.

பல உயிர்ப் பைரவர்கள் பகலில் பெரும்பாலும் உறங்கி இரவில் சுற்றி வருவர்.  ஆலயங்கள் இரவில் முன்னிரவிலே மூடப்பெறுவதால் பைரவர் சாமிகட்கு இரவுகளில் பற்றருக்கு அருள்பாலிக்கும் வாய்ப்புகள் இல்லை.

நாம் கவனிக்க இருப்பது வீட்டுப் பைரவர்களை. இவர்களில் பலர் இரவில் வீட்டுச் சுற்றுச்சுவருக்குள் காவலுக்கு விடப்படுவர்.  இவர்களின் சேவையோ மாபெரும் தகையதாகும்.  வைகுண்டம், வையாபுரி, வையகம், வையம் என்று வரும் பலசொற்களின் தொடக்கமான வை என்னும் சொல் வைரவர் என்பதில் முன்னிலை பெற்றிருப்பதைக் காணலாம்,இச்சொல் முன் நிற்பது ஒரு சிறப்பு என்பதறிக.

வை என்பது இறைவனால் வைக்கப்படுதலைக் குறிக்கிறது. இது வைரவனுக்குப் பட்டமளித்தது போன்றது.

இவன் இரவில் உழைப்பவன்.  ஆகையால் :  " இரவன் "  என்று
இச்சொல்லிலே சுட்டப்பட்டவன்,

வை + இரவன் =  வைரவன்.  இங்கு இகரம் கெட்டுச்  சொல் அமைந்தது.  வையிரவன் >  வயிரவன் என்று ஐகாரம் கெட்டும்\   சொல் அமையும். வேண்டாத நீட்டத்தைக் குறுக்கிச் சொல்லை அமைப்பது ஒரு நல்ல கொள்கை.  அறு + அம் =  அறம் என்பதில் உகரம் கெட்டுப் புணர்ந்தது காண்க; மேலும் வகர உடம்படு மெய்யும் நுழைக்கப்படவில்லை.  இவை சொல்லமைப்பினில் கையாளும் தந்திரங்கள்.

இறைவனால் நமக்காக வைக்கப்பட்ட நன்றியுள்ள இரவனுக்கு நன்றி
நவில்வோம்.
வைரவர்  -  பைரவர்


வை இரவு அன் >  வையிரவன் > வைரவன் அல்லது வயிரவன்
வையி > வயி;
வயி > வை
எப்படியாயினும் வேறுபாடின்மை காண்க.

தமிழக அரசின் குறள் கொள்கை

ஆயிரத்து முன்னூற்று முப்பதான‌ அருங்குறளும்
போயிருந்து பள்ளியிலே புகுநாட்கள் முதல்கற்பீர்
ஏயுணர்வு மிக்குவர இனியவாய பண்பமைந்த‌
சேயர்செஞ் சீர்பெறுவீர் செந்தமிழ்க்கோல் உத்தரவே.

இடர்கள்பல குமுகத்தில் ஏறுமுகம் இழிகுற்றத்
தடர்தொகையால் ஆழ்குழிக்குள் வீழ்படாமை ஆற்றிடவே
தொடர்தகவு  நடவடிக்கை எனப்பலரும் பாராட்டும்
சுடர்கொள்கை சூழ்பயன்சேர் செந்தமிழ்க்கோல் உத்தரவே.


புவி . (தோன்றியது .)

பூத்தல் என்பது, பலரும் அறிந்த பொருள்,  "பூ மலர்தல்".

ஆனால் இச்சொல்லுக்கு வேறு பொருள்களும் உள்ளன:

தோன்றுதல், பயன் தருதல், அழகாகுதல், பருவம் எய்துதல் என்பன.

இவற்றுள் தோன்றுதல், முன்மைவாய்ந்த பொருளாம்,

புவி அல்லது இவ்வுலகம் தோன்றியது  என்பதே பலரின் எண்ணமாகும்.
தமிழரின் எண்ணமும் அஃதே.

மண் தோன்றி... என்பதைக் கேட்கையில், இம்மண் தோன்றியதென்பதே
நம் அறிவு நமக்குச் சொல்வது  ‍  :  தோன்றிய ஞான்று நாம்
இல்லை எனினும்.

பூ > பூவுலகு.  ( பூ+ உலகு).
பூ >  பூமி.    ( இங்கு "ம்" இடைநிலை).
(இவ்விடைநிலை உம் என்பதன் தலைக்குறை.)
பூ > பூவனம் > புவனம்.
( பூ ‍= தோன்றிய; வனம் = அழகுள்ளது ).
( வல்>வன்; வன் > வனை> வனைதல்; வன்>  வனம் ).
வனப்பு = அழகு. வல்> வல்லி ‍: பெண்,அழகி.
இவ்வோர்பும் ஏற்புடைத்தே:‍
பூவு> பூவு+அன்> அம் > பூவனம்; . புவனம்.
நெடில் குறுகுதல் பல சொற்களில் வரும்.


பூ > பூவி  >  புவி . (தோன்றியது .)   வி : விகுதி.

சாவு > சவம் எனக்   குறுகுதல்  காண்க.

இவற்றை ஆய்ந்து தெளிக.