சனி, 11 மார்ச், 2017

கச்சடா என்ற பேச்சு வழக்குச் சொல்லை...

இப்போது கச்சடா என்ற பேச்சு வழக்குச் சொல்லைப் பார்க்கலாம்.

கசப்பு என்பது வெறுக்கத் தக்கதாக இருந்துவந்துள்ளது. அடா என்பதும்
அடர்வு, அடைந்துநிற்பது என்று பொருள்தரும்.  அடு> அடர்> அடர்வு.
அடு>அடா. ஆ என்பது ஓர் விகுதி. இது நிலா ( நில்+ஆ),  கலா ( கல்+
ஆ ), பலா ( பல் + ஆ: பல சுளைகளை உடையது ) எனப் பல சொற்களில் வரும்; மேலும் பெயர் அல்லாத சொற்களிலும் வரும்:  இல்> இலா; செல் > செல்லா எனக் காண்க. வளைவு குறிக்கும் வில்> விலா (வயிறு அடுத்த எலும்பு).  ஐ என்பதும் ஆ என்று திரியும்: தலை> தலா. இவை போதும். விளியிலும் வரும்: கண்ணன் > கண்ணா.

ஆக, வெறுக்கத்தக்கது அடர்வாய் இருக்கும்  நிலையே கச்சடா.

இங்கு கச என்பது புணர்ச்சியில் கச்ச என்று சகரம் இரட்டித்தது.

பசு(மை)+ அடி = பச்சடி போல. பசு என்பது பச்சு > பச்ச என இரட்டித்தது.

அறிந்து மகிழ்வீர்

A densely constituted detestabe stuff!

சூத்திரர் comparison with other words

continue reading from last post

ஒன்றைச் சூழ்ந்து (ஆலோசித்து) அறிந்து திறம் காட்டுவோரே
சூத்திரர் ஆவர். எனவே மூளைவேலையர் என்பது பொருள்.
இசை பாடுதல் சூத்திர வேலை. இதற்கு மூளையும் வேலை செய்யவேண்டும்.

சூழ்த்திறர் என்பதில் உள்ள ழகர ஒற்று மறைந்தது.

இதுபோன்று திரிந்த இன்னொரு சொல்லைக் கவனித்து, இதனுண்மை
நாமுணரலாம்.

வாத்தியங்கள் என்பவை திருமணம், விழாக்கள் முதலிய நிகழ்ச்சிகளில் இடம்பெறுவன.  இயம் என்றாலே இசைக்குழு என்று
பொருளுண்டு.  வாழ்த்தி இசைக்கும் குழு  வாழ்த்தியம். இதிலுள்ள‌
ழகர ஒற்று மறைந்து அது வாத்தியம் என்றானது.  வாழ்த்துதல் என்பதைச் சிற்றூர் மக்கள் வாத்துவது என்றே ழகர ஒற்று இல்லாமல்
பேசக் கேட்கலாம்.  மக்கள் கல்வி பெறப்பெற வாழ்த்து என்பதை
வாத்து என்று சொல்வது தவறு என்று போதிக்கப்படுவதால் திரிபுகள்
மறைந்துவிடும். ஆனால் முன்காலத்து ஆட்சிபெற்ற திரிபுகள் நம்
மொழியினின்று அகலா. ஆர்கெஸ்ட்ரா போன்ற ஆங்கிலச் சொல் அதனிடத்தை வந்து பிடித்துக்கொண்டால் அப்புறம் வாத்தியம் என்ற‌
சொல் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் வாய்ப்பு ஏற்படும்,

சூத்திரம் சூத்திரர் முதலிய சொற்கள் பொருளிழிவு உற்றவை. நாற்றமென்ற சொல்போல இப்போது பொருள் இழிந்தது அல்லது சொற்பொருள் அழிந்தது. பிராமணர் அல்லாதவர் தாங்கள் எதையும் அறிந்து அமைப்பவர்கள் என்று ஒருகாலத்தில் ஒரு தற்காப்பு வாதத்தை முன் நிறுத்தியிருக்கலாம். உயர்வு அளிக்கப்படாதவிடத்து அது நிகழ்வது இயல்பு ஆகும். அதனால் அவர்கள் சூத்திரர் என்று தங்களைக் குறித்துக்கொள்ளவும் பிறரால் குறிக்கப்படவும் ஆனது.
பிற்காலத்து நிகழ்வுகளில் சாதி ஒன்றையே மக்கள் நினைவில் கொண்டதனால் சொற்பொருளை மறந்தனர்.சொல்லும் இழிநிலைக்குத்
தள்ளுண்டது என்பதறிக.

சூத்திரம்.

ஒருவன் பிராமணனாகப் பிறந்தாலன்றி அறம் விளக்கும் குருவாகல்
ஆகாது என்பது பண்டையோர்  பின்பற்றி வந்த ஒரு சட்டநெறி. இது   brahma janatiti brahmanah. என்பதாகும்    

இது சில வேளைகளில் கடைப்பிடிக்கப்பட்டும் சிலவேளைகளில் நெகிழ்ச்சியாக விடப்பட்டும் வந்துள்ளமை, சரித்திரத்தின் மூலம் நாம்
அறிகிறோம். அது நெகிழ்ச்சி கண்ட காலத்து, சூத்திரர்களும் பிராமணர்
தொழிலை மேற்கொண்டனர்.

ஆனால் பிராமணர் சூத்திரரின்     தொழிலை மேற்கொள்வதும் பெரும்பான்மையே.  பல சூத்திரத் தொழில்களும் இனிமை பயந்து
பெரும்பொருள் ஈட்டற்கு வழிவிடுவன என்பது யாவரும் அறிந்ததே.
நடித்தல் , இசைபாடல் முதலியன குறிக்கலாம்.

பிராமணர் பிரம்மத்தை உணர்ந்தவர்.  அதற்கும் போதுமான வயதும்
அறிவும் தேவைப்படுகிறது. சூத்திரர்க்கும் அப்படியே. பெரும்பாலும் தொழிற் பூசல்கள்  மக்களைப் பாதிக்காமல் இருப்பதே இவற்றின் நோக்கமாகலாம்.
" Kalau sudrah sambhava"   என்று  சங்கத  நூல்கள் கூறுதலால்  இக்காலத்தில் அனைவரும்  சூத்திரர்களே   காரணம் எல்லோரும் ஆலோசித்துத்தான் செயல்படுகின்றனர்.
ஆக சூத்திர என்றால் என்ன?

சூழ்+ திறம்  = சூழ்த்திறம் > சூத்திரம்.

ஒன்றைச் சூழ்ந்து (ஆலோசித்து) அறிந்து திறம் காட்டுவோரே
சூத்திரர் ஆவர்.எனவே மூளை வேலையர் என்பது பொருள்.
இசை பாடுதல் சூத்திர வேலை. மூளையும் வேலை செய்யவேண்டும்.

சூழ்த்திறர் என்பதில் உள்ள ழகர ஒற்று மறைந்தது. றகரம்  ரகரம் ஆனது.