ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

VINAYAKAN விநாயகன்

விநாயகன்

2005 வாக்கில் விளக்கி எழுதியிருந்தேன். அதையே சில‌
ஆண்டுகட்குமுன் இங்கும் மறுபதிவு செய்தேன். பின்னது
இங்கு எதிரிகளால்  அழிக்கப்பட்டது.

வி+நாயகன் என்று  பிரிக்காமல், வினை+ ஆயகன் என்று
பிரிக்கவேண்டும். அப்படிச் செய்தால், வினைகளை ஆய்ந்து
(களைவோன்) என்னும் பொருள் கிட்டும். வினாயகன்
தமிழிலிருந்து செய்யப்பட்ட சொல். வி+ நாயகன் எனினும்
வி = விழுமிய, நய+ அகன் = நாயகன் எனத் தமிழாகும்.

வினாயகன் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் இல்லை என்று
அறிஞர் சிலர் தெரிவிக்கின்றனர். புத்த மதத்திலிருந்து இந்து சமயத்துக்குத் தாவியது என்பர். கணங்களின் அதிபதி என்ற மற்றொரு
குறிப்பும் உள்ளது.  கணம் என்ற சொல், கண் ‍: இடம் என்ற பொருளுடையதாகும், இப்பெயர்கள் கணபதி அல்லது வினாயகனுக்குத்
தமிழில் ஏற்பட்டவையாதல் வேண்டும், இந்த ஆய்வுக்குள் நாம்
செல்லவில்லை. இவற்றை அவ்வந்நூல்களில் கண்டுமகிழ்க.

சங்கச் செய்யுள்களுக்கும்  மதங்களுக்கும்  தொடர்பு இல்லை. மன்னனிடம் பரிசில் பெற நினைக்கும் ஒரு புலவன், அரசன் முன்னிலையில் மதத்தை எடுத்து விளக்க இயலாது.  மதம்பற்றிப் புலவர்க்குத் தெரிந்தது மன்னனுக்கும் தெரிந்திருக்கவேண்டுமே! அதற்கு அரசு துறந்திருந்த இளங்கோ அடிகள் முன் சாத்தனார் போலும் புலவரே பொருந்துவார். Such a situation did not prevail in the Sangam.  This is why Sangam poems seldom had any references to spiritual matters. சங்கத்துக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் விநாயகர் வழபடப்பட்டாரா இல்லையா என்பதற்குச் சங்கச் செய்யுள்கள் சான்றுகள்  ஆகமாட்டா. மொட்டைத் தலை வேறு, முழங்கால் வேறு.  

edited
அறிக மகிழ்க.


சனி, 18 பிப்ரவரி, 2017

இந்திய விண்வெளிக் கழகம். புகழ்பாடும்....

ஆழிடரால் தம்மின் அரசியல் கார்முகில்போல்

வீழிருளில் வீண்பட்ட போதுமே === ஏழ்கடலின்

எல்லாத்தே யங்களும் ஏற்றிப் புகழ்பாடும்

வல்லாக்க வானாய் களம்.


அரும்பொருள் :


ஆழ்  இடரால் :   ஆழ்ந்த துன்பங்களால்;
கார்முகில் :  கருமேகங்கள்.
வீழ் இருளில் :  ஏற்றம் தராத இருட்டில்.
ஏழ்கடலின் எல்லாத் தேயங்களும்:  பிற நாடுகள் எல்லாம்.
வல்லாக்க :  வலிமை மிக்க கருவிகளைப் படைக்கும்;
வான் ஆய் களம்: இந்திய விண்வெளிக் கழகம்.

அரசியலில் மக்களாட்சி முறையைக் கேள்விக் குறியாக்கும் பல‌
இந்தியாவில் நடந்தாலும், இந்திய விண்வெளிக் கழகம்
நன்றாகவே செயல்படுகிறது.  என்பது கருத்து.

உலகத்தின் உண்மை நிலை அவ்வளவுதான்

கம்ப இராமாயணத்தில் உள்ள எல்லாச் செய்யுள்களையும் கம்பரேதாம்
எழுதினாரா என்ற கேள்விக்கு அறிஞர் சிலர் விடை பகர்ந்தனர்.  சில‌
பாடல்கள் சுவையும் சொல்லழகும் குறைந்தவையாய்க் காணப்படுவதால்
அவற்றைப்  பிறர் எழுதி இராமாயணத்திற் சேர்த்திருக்கிறார்கள் என்ற‌
முடிவுக்கு வந்தனர்.

ஒருவ‌ரே எழுதினாலும் சில மிக நன்றாக அமைந்துவிடுகின்றன. சில சுவை குன்றிவிடுகின்றன.  ஆதலால் இதை அறுதியிட்டுச் சொல்வது
கடினம்.

தொல்காப்பிய இலக்கண நூலிலும் இங்ஙனம் பிறர் எழுதிச் சேர்த்தவை
உளவென்பர்.  காலக் கழிவு காரணமாக ஓர் இலக்கண நூலில் சில‌
பொருந்தாமை ஏற்படுங்கால் முற்றிலும் புதிதாக ஒன்றை எழுதிக்கொள்ளாமல் இருப்பதில் சில மாற்றங்கள் செய்து வைத்துக்கொள்வது ( அதாவது மாணவர்களுக்குப் பயிலத் தருவது )
என்பது ஆசிரியர் சிலர் மேற்கொண்ட நடவடிக்கையாகலாம். இப்படிச்
செய்தாவது அதை வைத்துக்கொண்டார்களே, இல்லாவிட்டால் எல்லாமும் அல்லவா வீசப்பட்டிருக்கும்?  முழுமையும் இழப்பதற்குச்
சில மாற்றங்களுடனாவது அது கிடைத்ததுபற்றி நாம் மகிழ்ச்சி கொள்ளலாம். அதேவேளையில் நாம் கவனமாகவும் இருக்கவேண்டுமென்பதே சரியான கொள்கையாகத் தோன்றுகிறது.

அப்போது நடந்தது பற்றி கவலைப் படும் அதேவேளையில் இப்போது
நடக்கும் முறைகேடுகளைப் பற்றி நம்மால் யாதும் செய்ய முடியவில்லை என்பதையும் எண்ணிப்பார்க்கவே வேண்டியுள்ளது.

ஊரெல்லாம் வெள்ளக்காடு;  கால் நனையாமல்  எப்படி நடப்பது என்று கேட்டாராம் நபிகள் நாயகம். உலகத்தின் உண்மை நிலை அவ்வளவுதான் ,
" ............ஆகுல  நீர பிற  "  என்றான் வள்ளுவன் ,