ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

கருவி -- சொல்லும் அடிச்சொல்லும்

.

வி என்ற இறுதிநிலையைப் பார்த்தாலே கருவி என்னும் சொல்லில்  வி என்பது ‍விகுதி என்று நன்கு தெரிகிறது.  சொல்லின் பகுதி கரு என்பதே.

கரு என்ற அடிச்சொல்லின் அனைத்துப் பொருள்களும் கிடைத்துவிடவில்லை.  கருத்தல் அதாவது கரு நிறமாதல் என்பது கிட்டியுள்ளது.  ஆனால் கருவிக்கு அடியான கருத்தல் கிடைக்கவில்லை.

கருவியிலிருந்து கரு என்றால் செய் என்பது பொருளென்று புரிகிறது.
ஆனால் இப்பொருளில் சொல் வழங்கிய எந்த  நூலும் கிடைக்கவில்லை.

கருமம் என்றால் செய்கை.ஆனால் கரு >  செய் என்ற பொருள் தொலைந்துவிட்டது,

இதை மேலும் ஆய்வு செய்வோம், இதற்கிடையில் நீங்களும் சிந்திக்கவும்.

சனி, 27 ஆகஸ்ட், 2016

எப்போதும் தென்றல்

மாலைதோறும் தென்றலுமே வந்திடுமோ==நேற்றை
மாலைத்தென்றல் இன்றுசென்றொ ளிந்ததுவோ
சோலைசென்று நன்றுறவு லாவிவந்தேன்===தளிர்கள்
சோர்வினொடு நின்றனகண் டாவிநொந்தேன்.

நாளைநானும் வந்திடுவேன் செந்தமிழின் === சுவை
நாளும்நாளும் உண்டதுபோல் வந்துமனம்
காலைமாலை யாதானும கிழ்ந்திடவே ‍=== வாழ்வு
கனிவுறவே தந்திடவி ழைந்திடுவேன்.

எப்போதும் தென்றல்



வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

தொனி என்ற சொல்

தொல் என்ற சொல் மிகவும் பழைய அடிச்சொல். இதன் பொருள்கள் பல.
இதிலிருந்து விளைந்த சில‌ சொற்களைக் கவனிப்போம்..


தொல் > தொற்று இது தொல்+து என்று துவ்விகுதி பெற்று வினை ஆயிற்று.


இது போன்று அமைந்த இன்னொரு சொல்: பல்+ து = பற்று. பிடித்தல் கருத்து


தொற்று என்பதன் பொருளாவன:


ஏறுதல், ஒட்டுதல். தொடர்தல். கொடுத்தல். படர்தல், பற்றுதல்;


இனித் தொனி என்ற சொல்லைப் பார்ப்போம்.


லகர ஒற்றில் முடிவது னகர ஒற்றாகவும் முடியும்.


எடுத்துக்காட்டு: திறல் > திறன்.


எனவே தொல் என்பது தொன் என்றும் வரும்.


தொனி என்பது குரல் ஒலியானது ஒலிக்குழாயான தொண்டையிலிருந்து
பற்றிப்படர்ந்து மேலேறுத‌லும் தொடர்தலும் உடையது.



தொன் > தொனி.