செவ்வாய், 19 ஏப்ரல், 2016

சிவஞான போதம் 9: " உராத்துனைத் தேர்."

ஊனக் கண் பாசம் உணராப்  பதியை
ஞானக் கண்ணினில் சிந்தை நாடி
உராத் துனை  தேர்த்து;எனப் பாசம் ஒருவ
தண்ணிழலாம் பதி; விதி எண்ணும் அஞ்செழுத்தே. ( சி  போதம்  9)


இங்கிருந்து  தொடர்கிறோம் :

http://sivamaalaa.blogspot.sg/2016/04/blog-post_17.html

துனை :

ஒன்பதாம் நூற்பாவில் இந்தத் தேர் குறிப்பிடப் படுகிறது. இந்தச் சொல்லில் வரும் துனை என்பது விரைவு என்னும் பொருளுடையது ஆகும்.

துனைதல் என்னும் வினைச்சொல் விரைதலென்னும் பொருட்டாதலின்
துனை என்னும் பகுதி மட்டும் நின்று பெயர்ச்சொல் ஆயினால் அது முதனிலைத்  தொழிற்பெயராய் விரைவு என்றே பொருள்தரும்.

 உராத்துனைத் தேர்

உரா  என்ற சொல்லின் பொருளை அறிவோம்.   இதன் உறவுச் சொற்களை ஆய்வதன் மூலம்  பொருளை எளிதில் கண்டுகொள்ளலாம்.  அதைப் பின்வருமாறு  விளக்கலாம் ,

உர்  என்பது அடிச்சொல் .   இது உள் என்னும் வினையாக்க விகுதி பெற்றுச்  சொல் அமைகின்றது .  உர்  உள் > உருள். உள் என்பது பெயராக்க விகுதியாகவும் வரும். -  வேறு சொற்களில்.

உரு >  உருள் > உருளுதல்.
உரு >  உருடை  ( வண்டிக்கு இன்னொரு சொல்).
உரு >  ஊர்  .  ஊர்தல். (வண்டியில் செல்லுதல்)
உரு >  ஊர் > ஊர்தி  =  வண்டி.( வானூர்தி,  வானவூர்தி  என்ற‌
வழக்குகள் காண்க.)
உரு >  உரா  (  உருளுதல்.)

நில்>. நிலா.  கல் >கலா, பல் > பலா (சுளை பல உடையது )  வில்>  விலா (ஓர்  எலும்பு ) என்பன நோக்குக.

உரா என்பது உருளுதல்; துனை என்பது விரைவு.  உராத்துனைத் தேர் எனின் விரைந்து உருளும் தேர்.

தேர்த்து ‍ ‍=   "தேர் போல்வது"  என்னும் பொருட்டு

சக்கரங்களின் விரைவு உருட்சியினால் பாய்ந்தோடி மறைகின்ற  தேர்.

இதனால் உராத்துனை என்பது விளக்கப்பட்டது.
பின்பு மறுபார்வை செய்யப்படும் .

Hope your reading is more pleasant after editing and insertion of references.





திங்கள், 18 ஏப்ரல், 2016

வை விகுதி பெற்ற சொற்கள் சில

விதவை என்ற சொல்லில் வருவது வை என்னும் விகுதி என்று சொல்
லப்பட்டது.  அதைக் கீழ்க்கண்ட இடுகையில் காண்க:‍

http://sivamaalaa.blogspot.sg/2016/04/blog-post_73.html

 இப்போது சில சொற்களைக் காண்போம்.

வித +  வை =  விதந்து குறிக்கப்பட்டவள்.  (கணவனை இழந்தவள்)
அள + வை =  அளவை.
தெரி +  வை = தெரிவை
முகம் + வை = முகவை
அகம் + வை =  அகவை (இவ்வுலகில் ஒருவற்கு வாழ அகப்படும் காலம் )
அறு +வை =  அறுவை.
அரி + வை = அரிவை. (18 > 25 அகவைப் பெண்)  அரிய அழகினை
உடையவள்.  அரு> அரி > அரிவை.    அரு என்பதில் உகரம் கெட்டு இகர விகுதியுடன் வை விகுதியும் பெற்றது .

பலவாம்.  கண்டுகொள்க .

தமிழ் விகுதிகளாற் சொல்லாக்கும் மொழியாகும். முன்னொட்டுக்கள்
குறைவு.

விதவைக்கு மோப்பி என்பது எப்படி >?

 விதவை என்றாலே, விதந்து தனியாக்கப்பட்டோர் என்று பொருள்.
விதத்தல் என்பதற்கு  specially cited or  highlighted என்பது பொருளன்றோ?

ஒன்றைச் சிறப்பாக எடுத்துரைத்தல் விதந்து ஓதுதல் எனப்பட்டது. என்பது

இந்த விதத்தலிலிருந்துதான் " விதம்" என்பதும் வந்தது.

விதம் என்றால் சிறப்பாக வைக்கப்பட்டது என்பதே பொருள்.

வித >  விதத்தல்.
வித > விதம் ( வித+அம்)  ஓர் அகரம் கெட்டது.

வித + வை ‍=  விதவை.  சிறப்பாகக் குறிக்கப்பட்டோர் என்று
பொருள்.இது உடையணிதல் ஒழுக்கம் பற்றிய கடைப்பிடிகளாக‌
இருக்கலாம்.

இந்தச் சொல்லுக்கு மாறான பொருள் உடையது கைம்பெண்களைக் குறிக்கும் மோப்பி என்ற சொல்.

மோப்பம் > (மோந்து பார்த்தல் )
மோப்பம் > மோப்பி  (மோந்து பார்ப்பவள் _)

அதாவது ஆண்களை மோப்பம் பிடிப்பவள் என்ற அர்த்தம். இது
பெண்களுக்கு எதிரான கருத்தோட்டத்தில் அமைந்த சொல் ஆகும்.

மோகம் என்ற சொல்லும்  மோப்பத்தினடியில் தோன்றிய சொல்லே.
மோ + கு+ அம் =  மோகம்.

சில தமிழ் மூலமுடைய் சொற்கள் பிற மொழிகளில் ஆதிக்கம்
பெற்றன.  இது தமிழின் சிறப்பைக் காட்டுகிறது,

இப்போது ஆங்கிலச் சொற்கள் எங்கும் கலந்து வழங்குவது  ஆங்கிலத்தின்
சிறப்பைக் காட்டுவது போல.

For another view of  the word vithavai:

https://bishyamala.wordpress.com/481

(We could not check as the connection was closed abruptly when we tried. It may work from
your location. We shall try later  )