திங்கள், 28 மார்ச், 2016

கழுதை

கழுதை  என்பது ஒப்பொலிச் சொல் (Imitative)

அது காழ்  காழ்  என்று கத்துகிறது  என்பர் ,  இது  குறுகிக்   "கழு" என்றானது.

இப்படிக் குறுகிச் சொல்லமைதல் இயல்பு .(    அடிக்கடி நிகழ்வது )

எடுத்துக்காட்டாகக்  குயில் என்பதைக்  குறிப்பிடலாம்.   கூ கூ என்பது  கு என்று குறுகிற்று.

தை என்பது விகுதி .

விழுதை பழுதை என்ற சொற்களில் தை விகுதி வருதல் போல.

இனி. கழுதை என்ற சொல்

உதைக்கும் தன்மை உடைய விலங்கு என்பதால்  கழு+ உதை என ஓர் உகரம் கெட்டுப் புணர்ந்து  கழுதை என்றாயது எனினும் பொருத்தமே.

இங்ஙனம் கூறுவார்:

குதி + இரை =  குதிரை;  ( அதிகம் இரை உண்பது)
கு +  இல் =  குயில்  (இல்லம் அமைப்பது )

என்று பொருத்தம் காணலாம் எனினும்  சில சொற்களில் இப்பொருத்தம் அமையவில்லை.  எல்லாம் இரை உண்பன எல்லாம் கூடு கட்டுவன என்று மறுப்பு எழக்கூடும். சொல்லிறுதிகளை விகுதி எனில் அதில் மேலும் கேள்வி எழாது.

காரணப் பெயர்கள்
இடுகுறிப் பெயர்கள்
காரண இடுகுறிப் பெயர்கள் .






புரு, பொரு என்ற சொல்லடிகள்

புல்லுதல்  அல்லது "புல்" என்பதொரு வேர்ச்சொல்யாம் வேர்ச்சொல் என்று குறிப்பது, சில பல அடிச்சொற்களைப் பிறப்பிக்க வல்ல தாய்ச்சொல்.

புல் என்பதிலிருந்து புரு, பொரு என்ற சொல்லடிகள் எழுந்தன.

புல் > பொரு.
புல் > புரு.

இந்த இரண்டை மட்டும் இன்று ஆய்வோம்பலவற்றையும் கொண்டுவந்தால் வாசிப்போரில் சிலர் குழப்பம் அடையக்கூடும்.

-து என்பது வினையாக்க விகுதியாகவும் வரும்.

பொரு > பொருந்து.
பொரு > பொருத்து (பிறவினை).

இன்னோர் உதாரணம்திருந்துதிருத்து என்பன.


புரு என்பதும் இங்ஙனமே ஒரு விகுதி பெறும்.  (டு)

புருபுருடு.

டு என்பது ஒரு சொல்லாக்க விகுதியே.   கரடுமுரடு, திருடு, வருடு

நெருடு என வினை பெயர்  இரண்டிலும் இது வரும்  சொற்கள் பலவாகும்.

புருடு என்பதன்மேல் அன் விகுதி ஏறி,    புருடன் ஆயிற்று.

பேச்சு வழக்கில் புரு> புருசு > புருசன் என்று அமைந்தது.

புருசன் / புருடன் >  புருஷ என்றானது.

புரு என்பது பொருந்து என்னும் பொருளது ஆதலின், புருடன் என்பவன்
பெண்ணுடன் பொருந்தி வாழ்பவன் என்று பொருள் தருவதாயிற்று
.

புரு> புருவு > புருவம்.

இச்சொல்லும் புரு என்பதினின்றே பிறந்ததாதலின், புருடன் கண்ணாகிய பெண்ணுடன் பொருந்திய புருவம் போன்றவன்  அவளைக் காப்பவன் என்ற பொருள் கொள்ளுதல் ஏற்புடைத்தே. அங்ஙனமாயின், கணவன் கண்ணாக இருந்த நிலை மாறி (எது முதலில் படைக்கப்பட்ட சொல் என்பது ஆய்தற்கு உரியது)  இச்சொல்லில் புருவமாக உணர்த்தப்பெறுகிறான் எனலாம்.  இது பெண்ணியத்துக்கு ஏற்ற கருத்து ஆகும்.

An error occurred and no preview and edit are possible  Will edit later

.

ஞாயிறு, 27 மார்ச், 2016

எண்ணெயும் ஆதரவும்

வெட்சித் திணையில் ஆகோள் என்பதும் ஒரு துறை.  ஆ+ கோள் = ஆகோள் ஆயிற்று. இங்கு வல்லெழுத்து மிகவில்லை.  இதேபோல்,  ஆதரவு  (ஆவினைக் கொடுத்து ஒருவனை ஆதரித்தல்),  ஆதாரம் ( ஆவினைத் தருதலாகிய அடிப்படைத் துணை நிற்றல் ) என்பவற்றிலும் மிகவில்லை.   இவற்றுள் இப்போது ஆவை மறந்துவிட்டோம்.  மறந்துபோதலும் நல்லதுதான். மொழியும் கருத்துகளும் வளர்ந்து வேறுபாடுறுங்காலை,  ஆக்களை மறந்து பொதுப் பொருளில் சொற்கள் வழங்குவனவாயின. இதற்கு ஒர் எடுத்துக்காட்டு வேண்டின், எண்ணெய் என்பதைக் கூறலாம். இது எள்+ நெய் என்பதன் திரிபு (புணர்ச்சியினால் வந்தது). என்றாலும் எள் தொடர்பு இல்லாத பல எண்ணெய்களைப் பார்க்கிறோம்.  ஈராக் ஓர் எண்ணெய் வள நாடு என்றால், அங்கு எள்ளிருக்கிறது என்பது அர்த்தமில்லை. சொல்லில் புகுந்துகொண்டிருக்கும் எள்ளுக்கு அதன் பொருள் மறைந்துவிட்டது. அது வெறும் சொல்லாக்கத் துணையாக நிற்கிறது.

எள்  மறந்து எண்ணெய் பெற்றோம்.

எண்ணெய் என்ற சொல்லுக்குப் பொருள் மாறிவிட்டதால், " நல்லெண்ணெய் " என்று நல் இணைத்துச் சொன்னால்தான், எள்ளின் பொருள் வருகின்றது.

எண்ணெய் என்பதைக் கொஞ்ச காலம் எண்ணை என்று எழுதிப்பார்த்தனர்.  ஆனால் தமிழ் வாத்தியார்கள் விடவில்லை. எண்ணை என்று ஒரு சொல்லே இல்லை என்று மறுத்தார்கள்.
நெய் ணெய்யாகி நிற்கவேண்டும் என்று அடம் பிடித்தனர். அதனால்
எண்ணெய் எண்ணை ஆக முடியாமற் கிடக்கிறது. புதிதாகத் தலையெடுத்த வடிவம் ஆட்சி பெற முடியவில்லை.

எண்ணெயும் ஆதரவும்