வெள்ளி, 4 மார்ச், 2016

சிவனுக்கு ஒரே ராத்திரி - நம் கடமை

சிவனில்லா இராத்திரிதான் எங்கே தம்பி -----அந்தச்
சிவனின்றிப்   பகலில்லை இரவுமில்லை
அவனில்லா உலகில்லை என்னும்காலை ----- பகல்
அவற்கில்லை  இரவொன்றே என்னலாமோ

அனைத்தினையும் விட்டு  நாமும் அவன்நினைந்து ----உள்ளம்
அவனிற்போய் மூழ்கிவிட  இரவும் ஒன்றே !
நினைத்தபடி வீண்பேச்சு பயன்இல் காலம் ----- வேண்டா
நேரியதோர் பண்பாட்டின் இராத்திரியாமே! 

புதன், 2 மார்ச், 2016

அபத்தம்

அபத்தம்

எதிரிகட்குப் பற்றலர் என்றும் கூறுவதுண்டு.  எவ்வாற்றானும் பொருந்திவராதவர்களுக்கு அந்தச் சொல் மிக்கப் பொருத்தமுடையதே. பானையில் உள்ளது பத்தாது ‍  அரிசி கிளைந்து வைக்கவேண்டும் என்று பேசுவர். பற்றாது என்பதே பத்தாது என்று பேச்சில் மாற்றம் பெற்று வரும். என்ன நடந்தது என்பதை எந்து பற்றி என்பர் மலையாள மொழியில்! எதைப் பற்றிப் பேச்சு நடக்கிறது என்று கேட்பதுண்டு.

பற்று என்ற சொல் பற்றி என்றாகிப் பின் பத்தி என்றாகி இறுதியில் பக்தி என்று விளைந்தது. "பத்தி செய்து பனுவலால் வைத்ததென்ன வாரமே!"  என்ற தாயுமானவரின் வரிகள் நினைவுக்கு வருகிறது.
தேவாரத்தில் "பத்தி" என்றே வரும்.  ஆனால் பக்தியைத்தான் பத்தி என்று பாடியுள்ளனர் என்று தமிழாசிரியன்மார் சொல்லிக்கொடுப்பர்.
ஆனால் பற்று > பற்றி > பத்தி பின் பக்தி என்பது இப்போது மிக்கத் தெளிவு பெற்றுள்ளது.  முத்தி  முக்தி ஆனாற்போல்.  முது >  முத்து > முத்தி > முக்தி;  முற்று > முத்து > முத்தி .

எமது எழுத்து அதைப்பற்றி அன்று.   அபத்தம் என்பது பற்றியே.

பற்றுதல் என்பது பொருத்துதல் என்றும் பொருள்தரும்.  இரும்புத் துண்டுகளைப் பற்றவைத்தல்  என்பதுண்டு,  அதாவது தீயினால் உருக்கிப் பொருத்துதல்  என்பதே இது.

அபத்தம் என்பது பொருந்தாதது.   பற்று >  பத்து > பத்தம்   அல்  >  அ .  அல்லாதது.   அ + பத்தம்  = அபத்தம்.

இதன் மூலமும் தமிழ் தான்.  இந்தோ ஐரோப்பியம் அன்று,

திங்கள், 29 பிப்ரவரி, 2016

ஐ and high

நீர்  (தண்ணீர், வெந்நீர்  என்பவை) தமிழில்போல் சங்கத மொழியிலும் உள்ளது.  சமஸ்கிருதத்தில் 1/3 பகுதி திராவிடச் சொற்கள்.   ஏறத்தாழ  1/3  மேலை மொழிகளுடன் தொடர்பு காணக்கூடியவை.  இறுதி 1/3  எங்கிருந்து  வந்தன என்று தெரியாதவை என்றார் டாக்டர் லகோவரி. தெரியவில்லை என்பவற்றில் பல தமிழில் காணக்கூடியவை.  நாமும்பல  சொற்களை எடுத்துக்காட்டியுள்ளோம். தமிழினின்று போந்தவை என்றால் அவற்றுக்கு மதிப்புக் குன்றுமென்பதால்,  ஒப்புக்கொள்ள வெட்கப்படுவான் வெள்ளைக்காரன்.

சமம்+மதி >  சம + மதி >  சம்+மதி = சம்மதி.  இதை இப்படிக் காட்டாமல் சம் என்பதை முன்னொட்டு என்றும் மதி என்பது வினைச்சொல் என்றும்  கூறுவான்  சங்கத ஆசிரியன்.

சம் எங்கிருந்து கிட்டியதென்றால், தமதென்பார்.

அமை> சமை > சம்  என்பது தெளிவித்துள்ளோம்.

ஒரு சீனனிடம் போய் சமஸ்கிருதப் பாட்டைப் பாடினாலும் தமிழ்பாட்டுப் பாடினாலும்  எல்லாம் ஒருமாதிரியாய் இருப்பதாகச்
சொல்கிறான்.   ஆகவே  மொழி நூல் அறிஞர் சட்டர்ஜி , ச‌மஸ்கிருத  ஒலிமுறை திராவிட மொழிகளின் அமைப்பைத் தழுவியது என்று உண்மையைச் சொல்லவேண்டியதாயிற்று.

சமஸ்கிருதம் தென்மொழி சார்ந்ததே. தமிழ் உள்ளிட்ட முன்னிருந்த‌
பாகதங்களிலிருந்து சொற்களைப் பெற்று இனிதாக அமைக்கப்பட்டதே
சமஸ்கிருதம்.

சமஸ்கிருதம் வளர்க்கத் தமிழ் மன்னர்கள் பலர் கடினமாக உழைத்துள்ளனர்.  தமிழ்ப் புலவர்களும்தாம்.  வேதம் பாடியோரில் பல தமிழர் இருந்தனர்.  தமிழ்ச்சொற்களை ஆண்டுள்ளனர். தென்கிழக்காசியா எங்கும் அதைப் பரப்பினான் ராஜ ராஜ சோழன்.

ஆரியன் என்று யாரும் வந்ததற்கு ஆதாரம் இல்லை. ஆர்ய என்பது தமிழ்ச்சொல் என்று ஆதாரம் காட்டியுள்ளார் தேவ நேயப் பாவாணர்.
ஆர்தல்,  அறிவு என்பன தமிழ்ச் சொற்கள்.  அரிவ் என்று அது அரபியிலும் சென்று வழங்கியது உண்மை.

Garden of Eden என்னும்  எழில் தோட்டம் தமிழ் நாட்டில் இருந்ததென்று சில அரபு  நூல்கள் சொல்வதாக ஓர் இஸ்லாமிய அறிஞர் எழுதியுள்ளார்.

சமஸ்கிருதத்திலிருந்து பல சொற்களை  மேலை மொழிகள்  மேற்கொண்டன.  தமிழிலிருந்து நேரடியாகவும் மேற்கொண்டன.

ஐ என்பது தமிழில் மேன்மை குறிப்பது.  ஐயன், தமையன்.
ஹை என்ற மேன்மை குறிக்கும் சொல் ஏன் ஒலியொத்து வருகிறது.

ஏர்   -  arable  என்ன தொடர்பு ?

ஆராயலாமே!

will  edit. enjoy the post first.