செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

டகரம் ரகரமாக

டகரம் சொற்கள் சிலவற்றில் ரகரமாகத் திரியும். இதற்கு ஓர் எளிதான எடுத்துக்காட்டினைத் தரவேண்டுமானால்:

மடி >  மரி என்பதைக் குறிப்பிடலாம்.  இங்கு டி > ரி என்று திரிந்ததைக் கவனிக்கவும்,

கோடு என்ற சொல் வளைவும் குறிக்கும். மலையுச்சி வளைவைக்  கோடு என்பர். பின்னர் அது அம்மலை உள்ள ஊருக்கும் பெயரொட்டானது .

உதாரணம்:  திருச்செங்கோடு.   கசரக்கோடு .  அதங்கோடு.

வடக்கிலுள்ள பதன்கோடு வரை செல்லும் இச் சொல்லாட்சி. கோடு+ ஐ =  கோட்டை ஆயிற்று. கோட்டைகளும் வளைவாகக் கட்டப்பட்டனவாதலினால்,  கோடு அடிச்சொல்லாக நின்றது.

கொடு > கோடு.

கொடு என்பது இங்கு நீண்டது.  கருத்து வளைவுதான்,  நண்டுக்கொடுக்கு  வளைவானது.  கொடு> கொடுக்கு,     கொடுக்குப்பிடித்தல் என்ற வழக்கையும் நினைவுகூர்க.

செயலாலும் வளைவு உணரப்படும்.

கொடு > கொடுமை.

கொடு > கொடுங்கோல்  ( வளைந்த கோல்;  நேர்மையின்மை குறித்தது. )


கோடு > கோடம் > கோரம்.  ( மிகக் கொடுமை.)  ட > ர .

கோரக் கொலை என்பது காண்க.

கொடு > கொடுத்தல். ( வளைந்து நின்றபடி ஒன்றைத் தருதல்.)  இதுவே  சொல்லமைப்புப் பொருள்.  நாளடைவில் வளையாமல் கொடுத்தலும் கணினிக்கணக்கு வழி காசு கொடுத்தலும் எல்லாம்
கொடுத்தலில் உள்ளடங்கின .. இது பொருள் விரிவாக்கம். பயன்பாட்டு  விரிவு ஆம்.

வினோதம்

வினோதம் என்ற சொல்லின் அமைப்பைக் கண்டு அதன் வினோதம் உணர்வோம்.

வியன் என்ற சொல் நீங்கள் அறிந்ததொன்றாகவே இருக்கும், குறளில் விரி நீர் வியன் உலகத்து உள் நின்று உடற்றும் பசி  என்ற வள்ளுவனின் தொடர் சிறந்த நயம்பொருந்தியது.

வியன் எனின் பெரிது.விரிவானது

முன் பூனையையே கண்டு வளர்ந்தவனுக்கு யானை வினோதமானது. தினமும் காண்பவனுக்கு அது வினோதமாகாது.  வினோதமெனும் மனவுணர்ச்சி மறைந்துவிடும்.

ஆதலால் வியன் என்னும் சொல்லினின்று வினோதம் என்பது அமைந்துள்ளது.  எப்படி எனின் கூறுதும்.

வியன் + ஓது +  அம் = வியனோதம்.

இப்போது யகரத்தை விட்டிடுவோம்.

வினோதம் ஆகிவிட்டது.  ஒரே எழுத்தின் விடுபாட்டில் ஒரு புதிய‌
சொல் கிடைத்துவிட்டது.

வினோதமெனின் பெரிதாக மக்களால் பேசப்படுவது.  அவ்வளவுதான் .  ஓது என்பது  பேச்சைக் குறிக்கிறது.  மந்திரம் ஓதுவதைப் பிற்காலத்தில் குறித்தது.  தொடக்கத்தில்  ஓஓஓஓஓ என்று ஒலி  எழுப்புதலையே குறித்தது.  ஓலமிடுதல் என்ற சொல்லும்  அதே.  ஓஓஓஓ  என்பதுதான். ஒப்புதல் என்ற சொல்லும்  ஓ ஓ என்று சரி கொள்வதையே குறிக்கிறது.   இப்படி ஒலிக்குறிப்புகளைக் கொண்டு அமைந்த சொற்கள் பல்வேறு மொழிகளிலும்  ஏராளம்.  ஈண்டு விரித்தலாகது.  அம்  விகுதி/

புதிதாக உள்ளதைத்தான் பேசுவார்கள் . பழங்  குப்பைகள் பேச்கிக்குரியனவல்ல .

மகிழ்ந்து கொண்டாடலாம்.

ஆதி மனிதன் குகைகளில் வாழ்ந்து கரடி புலிகளுடன் போராடி உணவு தேடித் துன்புற்றான்.  அவனிடம் அகராதியுமில்லை  முகராதியுமில்லை. நாலைந்து சொற்களுக்கே அவன் சொந்தக்காரனாயிருந்தான். பல சொற்களைப் படைத்து மொழியை உருவாக்க வேண்டின், இதுபோன்ற தந்திரங்களைக் கையாள வேண்டுமல்லவா. இந்தப் பதங்களெல்லாம் ஒன்று தங்கத்தட்டில் வைத்து கடவுள் நீட்டினார் என்று எண்ணுகிறவன், மொழிவரலாறும் மனித வரலாறும் அறியாதவன். மனிதனின் கள்ளம் அவன் மொழியிலும் பளிச்சிடவேண்டுமே.

வி + நோ தம்  என்று பிரித்து  அதிலிருந்து  நூதனம் என்பதைப் பிறப்பித்தால் இன்னும் புலமை. பண்டையரைப் பாராட்டுவோம் .

edit later,  If we waited longer post may disappear from screen.  We have to upload quick.

சிவஞான போதத்தின் 6‍வது பாடல்

சிவஞான போதத்தின் 6‍வது பாடல்,  நம்மைச்   சிந்திக்க வைப்பது ஆகும். "சிவம் எது? எங்கே இருக்கிறது?" என்ற வினாவிற்கு, உலகத்தைக் காட்டலாம். நம் கண்ணுக்குத் தெரிவது இவ்வுலகமும் இதன்கண் இருக்கின்ற படைக்கப்பட்ட பொருள்களுமே . ஆனால் இவ்வுலகு சிவத்தால் படைக்கப்பட்டதொன்றே யன்றி, சிவம் ஆகாது. காரணம்,காரியம் என்ற இரண்டனுள் உலகத்திற்குக் காரணமாகியது சிவம். உலகம் சிவத்தின் காரியம் அல்லது செயலுரு ஆகும்.
இதையே "உணர் உரு" என்கிறது இந் நூல்.

உலகம் சிவமன்று. அடுத்து யாது உள்ளது  - எது சிவம் என்ற கேள்விக்குச் சுட்டுவதற்கு? ஒன்றுமில்லை!. சூன்யம் எனப்படும் இன்மையையே சுட்டுதல்  ஆகும் (கூடும் )  . சூழவுள்ள வெட்டவெளியில் ஒன்றுமில்லை.
எனவே சூன்யம் சிவமென்று சுட்டுவதாயின், அது சிவமாகாது என்பதே கேளவிக்கான பதிலாகும். இவ்விரண்டாம் திறத்ததும் மாயைதான் . உணர ஓர் உருவற்ற இன்மையும் மாயை. உணர் உருவாகிய உலகமும் மாயையே என்பர்.

உலகத்தினும் இன்மையினும் வேறாக நிற்பதே சிவ சத்து.   அதாவது
சிவமாகிய ஒருமை. தானன்றிப் பிறிது எதுவும் தனக்கீடில்லாத சிவமாகிய ஒருமை..இச் சிவத்தொருமை உணர, உலகமும் இன்மையும் ஏதுக்களாக நின்றன என்று புரிந்துகொள்ள வேண்டும்.

இதையே ஆறாம் பாடல் கூறுகின்றது. பாடல் பார்ப்போம்.

உணர் உரு  அசத்து எனின் உணராது இன்மையின்
இரு திறன் அல்லது  சிவ சத்து  ஆமென‌
இரண்டு வகையின் இசைக்குமன்  னுலகமே.

இதனுரை பின்  காண்போம்.