சனி, 24 அக்டோபர், 2015

ஜகம் etc & உலகம்

பகவொட்டுச் சொற்கள்.

ஒரு சொல்லின் ஒரு பகுதியையும் இன்னொரு சொல்லின் ஒரு பகுதியையும் இணைத்து ஒரு புதிய சொல்லை உருவாக்கு முறை  பல மொழிகளில் காணப்படுகிறது. இத்தகைய  சொற்களைக் காணும்போது அவற்றைப் பட்டியலிட்டுக்கொள்ளுங்கள்.  ஆங்கிலத்தில்  இதற்கு  "portmanteau"  என்பர்.

ஆங்கிலத்தில்  brunch  (breakfast + lunch     )  என்ற சொல்லை ஓர்    உதாரணமாகச் சொல்லலாம்.
sheeple   -   என்பதும் அன்னது.2 (people who are sheep-like followers)   (மந்தை  ஆடுகள் மக்கள்  என்பது)

இன்னொன்று:    (mo) tor +  ho (tel )   =  motel. 

உலகம்:

இச்சொல்லிலிருந்து புனையப்பெற்றவை:-

இ = இந்த.
கம் =   உலகம்.
இ+கம் =  இகம்  -   இந்த உலகம்.

எடுத்துகாட்டுச்  சொற்றொடர்  :  இக பரம்.  

செகுத்தல் = அழித்தல்..
ஒவ்வோர் ஊழியிலும் உலகம் அழிந்து புத்துலகம் மலர்வதாகச் சொல்லப்படும். ஆகவே  இது குறிக்கும் சொல் தேவையாயிற்று. 

இங்குள்ள விளக்கத்தையும்  நோக்குக:
http://sivamaalaa.blogspot.sg/2015/10/httpsivamaalaa.html 


 செகு  = அழி(த் )தல்.
கம்  =உலகம்.
செகு+ கம் =  செகம்.  இதில் புணர்ச்சியில் குகரம் மறைந்தது.: 
செகம் =   அழித்து உருவாகும் இவ்வுலகம்.

(மக + கள்  =மக்கள்  என்பதில்  ஒரு க  மறைந்தது போல   செகு  +  கம் =  செகம்  என்பதில்  ஒரு கு  மறைந்தது,  )

மா -  பெரிது.
கம் -  (உல)கம்.
மாகம் :  விரிந்த விண்வெளி 1 .


mAkam. upper space; . sky, air, atmosphere;  svarga;  cloud

சமத்கிருதப் புனைவு:

ஜ -  பிறந்தது,
கம் -  உலகம்.
ஜகம் :  உலகம்.
--------------------------------------------------------------------------
பிற்குறிப்பு:

1 மாகம் என்பதும் ஒரு பகவொட்டு ஆகலாம்.  மா - பெரியது;  கம் - உலகம் என்பதன் இறுதிச் பகுதிச்சொல்.  ஆக மாகம் ஆகிறது.  பெரிதான உலகம். இன்னும் பல பொருள்.  யாவும் பெரியவை.  மக + அம் =  மாகம்,  முதனிலை நீண்ட,   விகுதி பெற்ற சொல் எனினுமாம்.

வியாழன், 22 அக்டோபர், 2015

இக்கட்டும் இடுக்கணும்

இக்கட்டு  என்ற சொல்லினமைப்பைக் கவனிப்போம்.

இந்தச் சொல்லின் பொருள் :   இடர், இடையூறு  இடுக்கண்,  என்பன .

இ + கட்டு = இக்கட்டு எனவரும் சுட்டுத் தொடக்கத்துத் தொடர் இதுவன்று.

இக்கட்டு  என்று இடையூறு குறிக்கும் சொல்லில் வரும்  "கட்டு "  வேறு.   கட்டுதல் எனும் சொல்லின் ஏவல் வினையாய் வரும் " கட்டு "   என்பது 
 வேறாகும்.  "மூட்டையைக்  கட்டு",   "கடையைக் கட்டு"  "சேலையைக்  கட்டு" என்று ஏவலாய் வரும்.

நாம் எடுத்துக்கொண்ட இக்கட்டு,  இடுக்கண் + து  என்று  பிரியும்.

முதலில் "கண்+து " என்பதை எடுத்துக் கொள்வோம்.

"சுவை ஒளி ஊறோசை  நாற்றம் என்றைந்தின் 
வகைதெரிவான் கட்டே உலகு" 

என்ற குறள் பாருங்கள்.

இதில்  (கண் + து)  + ஏ  =  கட்டே  என்று வருதல் நீங்கள்  அறிந்தது  
இங்கு  கட்டு + ஏ  =  கட்டே..    ஏகாரம் :  தேற்றேகாரம் . A component showing emphasis.

ஆகவே  இடுக்கண்+ து என்பது  இடுக்கட்டு  ஆகிறது.

நமது பயன்பாட்டுக்கு  இடுக்கண் என்பதிலிருந்து இன்னொரு சொல் கிடைக்கிறது.

ஆனால் இப்போது நம்மிடம் இருக்கும் சொல் இக்கட்டு.   இடுக்கட்டு அன்று.

இது:

இடுக்கட்டு > இக்கட்டு   என்று இடைக்குறைந்து நம்மிடம் வந்து சேர்ந்துள்ளது,

இக்கட்டு என்பதை வாக்கியமாக விரித்தால் :

இக்கட்டு <  இடுக்கட்டு <  இடுக்கண் து  <  இடுக்கண் அது  என்று விரித்து மகிழ்க .

இதுபோல் திரிந்த சொற்களில் ஒன்றிரண்டு கண்டு மகிழ்வோம்.

இடுக்கு+ இடைஞ்சல் =  இக்கிடைஞ்சல்.  -   இந்தத்  திரிபு நோக்கி இவ்வண்ண்ணம் திரிதல் கண்டுகொள்க. 


முக்கம் என்ற தெருமுனை குறிக்கும் சொல்  அகரவரிசைகளில் இடம்பெற வில்லை  என்று கருதவேண்டியுள்ளது.  இன்றுள்ள எல்லாவற்றிலும் தேடிப்பார்க்கவில்லை. நாட்டுப்புற மொழியில் உள்ளது.

முடுக்கு >முடுக்கம் >  முக்கம் 

என்ற திரிபாகவிருக்கலாம் :   ஆய்தற்குரியது. 








தந்திரம் - மற்றொரு முடிபு

இனித் தந்திரம் என்ற சொல்லுக்கு மற்றொரு முடிபும் கூறுவோம்.

ஓர் இக்கட்டான  நிலையில் அதைத் தவிர்க்கும் வழியைத் தந்து  தன் இருப்பு எப்படியும் குலைந்துவிடாதிருத்தல்  ஒரு தந்திரம் ஆகும்.   தன் நிலைபோல்  பிறர் நிலை காத்தலும்  அதுவே.

ஆகவே  தந்து + இரு + அம்  =  தந்திரம்  ஆகிறது.

இனி  இரு  என்ற சொல்லினை இறு  என்பதன் திரிபாய்க் கொள்ளினும் இழுக்காது.

இறுதல்  எனின்  முடிதல் இறுத்தல் எனின் முடித்தல்.

தந்திறம்  தந்திரம் ஆயிற்று என்று   அறிஞர் \கூறுவதால்  தந்திறம்  தந்து முடித்தல் என்று கொள்ளுதலும்  ஆகும் என்று அறிக .

ஒரு காரியத்தில் ஏற்படும் தடைக்கு அல்லது இடையூற்றுக்கு தீர்வு தந்து முடித்தலாம்..