செவ்வாய், 14 ஏப்ரல், 2015

ஸாப்தபதீனம் ritual

ஒருவனுடன் ஒத்துப்போய்  நட்பு தலைப்படுவதாயின்  அவனுடன் ஏழு அடிகள்  இணைந்து  எடுத்துவைக்கவேண்டும். ஏழாவது  அடி  வெற்றியுடன்  எடுத்துவைத்து முடிக்க  இருவரும் நண்பர்கள் ஆகிவிடுவர்   இப்படி ஒரு வழக்கம்  \பண்டைக்   காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது.

பிற்காலத்தில் திருமணங்கள்  அமைவுற்றுச்   சடங்குகள் ஏற்பட்ட ஞான்று
இந்த முறை அவற்றுள்ளும் புகுந்தது .  திருமணம் என்பது ஆடவரும் பெண்டிரும் கூடி வாழ்வு முழுவதும் தொடரும் ஒரு நட்பே ஆதலின்.

மணமகனை நோக்கி வருகின்ற மணமகள் ஏழு அடி எடுத்துவைத்து நடந்து அவனை அடையவேண்டும் ,  தீவலம் வருகையில் இருவரும் இணைந்து ஏழு
அடிகளில் சுற்றிவந்து முடிக்கவேண்டும். குறைதல் கூடாது

இதுவே வடமொழியில் ஸாப்தபதீனம் எனப்பட்டது.




======================================================================

திங்கள், 13 ஏப்ரல், 2015

thAniam a short enquiry

தன்யது என்று  சங்கத மொழியில் சொன்னால்   அதற்கு இடி என்று பொருள். இது உருக்கு வேதத்திலும் அதர்வண வேதத்திலும் காணப்படும் சொல்தான்.

தனீயஸ் என்று வரும் ஒரு சொல், மிகச் சிறியது என்று பொருள்படுவது.  இவற்றுள்  தானியம்  dhanya  என்பதற்கு மிக்க அருகில் வந்துள்ள சொல் இந்த தனியஸ்  தான்.   தான்ய   dhanya என்ற சொல்  இதனுடன் தொடர்புடையதாய் இருக்கக்கூடும்   

ஆகவே,  தானிய  என்ற சொல்  மூலம்   கண்டுகொள்ள முடியவில்லை என்றாலும்,  நெல்,கொள், எள்  முதலியவை சிறியன ஆதலின்,  தனியஸிலிருந்து தானிய வந்தது என்று வாதமிடவேண்டும்.  ஆய்வு செய்கிறவர்கள், அகரவரிசைக்காரர்கள்  காரணம் ஏதும் கூறாமலே  அது சமஸ்கிருதத்திலிருந்து வந்தது என்று சொல்லிவிட்டால், ஆய்வறிவு இல்லாதவர்கள் உடனே நம்பிவிடவேண்டியதுதான்.

 நிலத்தில் விளைபவை, நிலத்தோடு தொடர்புடையவனுக்குச் சொந்தமானவை. இதுவே பண்டைக் கருத்து ஆகும். ஆகவே,  தான் self என்பதிலிருந்து தானியம் என்ற சொல்  வந்தது என்பதே சரி.

தனக்குச் சொந்தமானவற்றை  "பெர்சனால்டி" personalty  என்று ஆங்கிலத்தில் சொல்வதுபோன்ற பொருளமைப்புக் கொண்டதே இது. பெர்சொனல் சட்டல்ஸ் personal chattels  என்று சொல்வதையும் அறியவும்.

வழக்கு:

தானியம் என்பதற்கு நேரான இன்னொரு தமிழ்ச்சொல் கூலம் என்பதாகும். இச்சொல் இப்போது பெரும்பாலும் வழக்கில் இல்லை,கூலவாணிகன் சாத்தனார் போலும் சங்கப் புலவர்களை நினைவு கூர்கையில் மட்டும் அது  வருகிறது.  நவதானியத்தைத் தொண்கூலம் எனலாம் என்பது பல தமிழரும் அறியாததே.


தானியங்கள் நீண்ட காலத்துக்குச் சேமித்து வைப்பதற்கு ஏற்புடையவை அல்ல ;  ஆதலா\ல் அழியுமுன் அவற்றைத் தானமாகக் கொடுத்துப் புகழ் பெறவேண்டும் என்பர்.  தா > தானம் >தான்யம் என்று  சிந்திப்பதும் கூடும்.

--------------------------------------------------------------------

personalty
 noun assetsavailable meanschattelseffectsfundsholdings,investments, perronal property, personal resourcespossessionspropertyresourceswealth ( This appears to be the current legal definition.  This may have become widened over passage of time,  owing to interpretation of the judges. ).
Personalty-  actually this excludes lands and things permanently fixed to lands which are known as real property.  "realty".
Another easier explanation is:  "movable property that a person possesses.  "  For the  recovery of any of such things, you have to sue the person,  as opposed to remedies like foreclosure  which goes against the land.`

தான் - தானியம்;   "தனக்குச் சொந்தமான விளைபொருட்கள். "  அரசுக்கு வரியாகச் செலுத்தப்பட்டது போக எஞ்சியவை தனக்கு ( விவசாயிக்கு)ச் 
சொந்தமானவை .  வேதம் பாடியோர் அவற்றை விவசாயியிட மிருந்தே பெற்றனர்.  கேட்போரிடம்  விளைச்சல் தனது என்று சொல்லற்குரியவன் அவனே.   தனீஸ் , தான்ய , தானியம் முதலியவை தான் என்ற மூலம் பிறப்பித்தவை.

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

வாசனின் வாச மங்கை - தொடர்ச்சி II

தொடர்ச்சி....பாகம் 1-ல் இருந்து.

வாசன்  " நண்பர்களுடன் கொஞ்ச நேரம் தனியே பேசவேண்டும் "  என்று சொல்லி,  அந்த வீட்டின் முன்பக்கமாகச் சென்றார்.   நண்பர்களுடன் உடன் போயினர்.  பெண்ணின் அழகைப் பார்த்து  ஒருவாறு மயங்கிய வாசனுக்குக் கல்யாண ஆசை வந்துவிட்டாலும்,  வேறு ஏதோ பேசவேண்டும் போல்  தோன்றியது. "இதெல்லாம் முடிகிற காரியமா?" என்று பேச்சைத்
தொடங்கினார்.

"மணம் தேடுமுன் பணம் தேடி வைத்திருக்க வேண்டும்.   அதனால் பணம் வைத்துக்கொண்டு அப்புறம் இங்கே வருவோம் "  என்றார் வாசன்.   நண்பர்கள் இதற்கு ஒப்பவில்லை.  "அப்புறம் என்றால் நாங்கள் எல்லாரும் ஒன்றுகூடி இங்கே வரவேண்டும். இதே பெண்ணும் கலயாணம் ஆகாமல் இருக்க வேண்டும்.   வேறு யாரும் கலைத்துவிடாமலும்  இருக்கவேண்டும் ...... அதெல்லாம் சரிவராதப்பா"  என்றார் அவர்களில் ஒரு நண்பர்.  " பணக் கவலையை விடு,  செய்து முடித்துவிடலாம் ...... நீயே தெரிந்துகொள்வாய்" என்றார் இன்னொருவர்.   வாசனின் நண்பர்கள் எல்லாமே திருமணம் ஆனவர்கள்.  ஆகக் கடைசியாகக் கல்யாணம்  ஆனவருக்கு ஒரு குழந்தை . மற்றவர்களுக்கு இரண்டு மூன்று  என்றவாறு இருந்தனர். எப்படியும் வாசனின் வாழ்வு வாசனை பெறவேண்டும் என்று விரும்பினவர்கள் அந்த நண்பர்கள்.

ரப்பர் எனப்படும் தேய்வைத் தோட்டங்களில் மணப் பேச்சுக்களை[ப் பெரும்பாலும் இழுத்தடிக்க மாட்டார்கள். இழுத்தடித்து நடைபெறும் திருமணங்களுக்கு  கொஞ்சம் மதிப்புக் குறைவு என்று பேசிக்கொண்டார்கள்.

முடிந்தால் இன்னொரு நாள் தங்கி உறுதி செய்துவிட்டுப் போய்விடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர் நண்பர்கள்.  வாசனுக்கும் வாசனைத் திரவியங்கள் மணமலர்கள் போய் வங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.  பக்கத்து வரிசையில் உள்ள வீடுகள்  ஒன்றில் இருந்த   சோதிடரும் தம்  வேலைக்குரிய  ஏடுகளுடன் வந்து பொருத்தம் பார்த்து,  மிகவும் பொருந்தியிருப்பதாகச்  சொல்லிப் பச்சை விளக்குப் போட்டார்.  பெண் வீட்டில்  இரவு தங்குவது வழக்கத்துக்கு மாறானது என்பதால்,  அடுத்திருந்த வீடுகள் தொகுதியில் இருந்த   ஓர்  எழுத்தரின் வீட்டில் மாப்பிள்ளை வாசனும் நண்பர்களும் தங்க வைக்கப்பட்டனர்.  வசதிகள் எல்லாம் மன நிறைவு  அளிப்பனவாகவே இருந்தன.
மாறு நாள் குளுவாங்  என்னும் பட்டணத்துக்குப் போய்  சேலை, வேட்டி, பூக்கள், தேங்காய், வாழைப்பழம் , வெற்றிலை பாக்கு என்று பலவற்றை வாங்கினார்கள் நண்பர்கள்.  வாங்கிக்  கொண்டு பெண்வீட்டுக்கு வந்து,  மணத் தொடர்பை உறுதி செய்தனர். வாசனுக்குப்  பட்டு வேட்டி.  பெண்ணுக்கு அழகிய சேலை.   பெண்ணின் கண்ணிலிருந்து புறப்பட்ட ஒரு மின்னல்,  வாசனின் இதயத்தைத் தொட்டது.  வாசன் வெளியில் காட்டாமல் சமாளித்துக் கொண்டார். அப்படியே செய்தாள் அந்த அழகியும்.   தேவகி என்பது அவள் அழகான பெயர். நண்பர்கள் அந்த "மின்னலைக்" கண்டு கொண்டனரோ என்னவோ ?

இனி விருந்து காத்துக்கொண்டிருந்தது.  பெண்ணின்  உறவினர்கள் சிலர், ஊர்மக்கள் ஆகியோர் கலந்துகொண்டு,  வாசனுக்கும் தேவகிக்கும் தம் நெஞ்சங்களின் வாழ்த்துக்களைச் சொற்களால் சிலரும் புன்னகையால் சிலரும், கண்களால் சிலரும் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.
பின் வாசனும் நண்பர்களும் சிங்கையைநோக்கிப்  புறப்பட்டனர்.y

thodarum தொடரும்

Will edit later, as this feature is now unavailable.