வெள்ளி, 10 அக்டோபர், 2008

"நீ"யில் முடிந்த பாடல்கள்.

நீயில் முடிய நிமிர்த்திய பாடல்கள்
நாவில் தவழ நலம்கண்டேன் --- நோவிலாது
ஆக்கி மனங்களை ஆள்கின்ற நற்றமிழ்
தேக்குவம் நீர்நிலை போல்.

மிதுலருக்கும் பாராட்டு

உள்ள உணர்வுகள் ஓரிரு சொற்களில்
குள்ள வடிவாகக் கோலமுடன் -- சொல்லவே
செல்ல உறுப்பினர் சீர்சான்ற நன்மிதுலர்
அல்லரேல் ஆரே பிறர்.

வெள்ளைப் பாட்டில்் உங்கள் கருத்து

உங்கள் கருத்தை ஒருவெள்ளைப் பாட்டினால்
இங்கு பதிக்க எழுந்தோடித் --- தங்குதடை
ஏதுமில்லை வந்தே இனிப்புணா போல்தந்து
மாதறியச் செய்வீர் மறுத்து.

இனிப்புணா - மிட்டாய். வெள்ளைப் பாட்டு = வெண்பா.
மாதறிய = (யான் அறிய).


உரை: மறுத்து = என் கருத்தை மறுத்து; உங்கள் கருத்தை ஒரு வெள்ளைப் பாட்டினால் இங்கு பதிக்கத் தங்குதடை ஏதுமில்லை; எழுந்தோடி வந்தே; இனிப்புணா போல்தந்து = மறுத்து எழுதுவதால் கசப்புணர்வைத் தூண்டாத வண்ணமாய் மிட்டாய்போல்; தந்து; மாதறியச் செய்வீர் என்று தொடர்களை மாற்றிப்போட்டு உரைகொள்க. இதுவே "சொற்றொடர் முறைமாற்று" உரை உத்தியாகும்.