திங்கள், 18 செப்டம்பர், 2023

"செம" : மிகுதிப் பொருள் "செம்மை" யா?

 "வட்டி  செம  ஏற்றமாக அந்த வங்கியில் உள்ளது"  என்று பேசப்படுவதை கேட்கின்றோம்.  எல்லா வங்கிகளிலும் அப்படியா,  அந்த வங்கியில் மட்டுமா என்று அவருடன் உரையாடுபவர் கேட்பதில்லை. பேசுபவர்க்கும் தெரிவதில்லை.

செம என்பது செம்மை என்பதன் திரிபாகக் கொள்ளவும் பொருட்பொருத்தம் தெளிவாக இல்லை.

சுமை என்ற சொல் இருக்கின்றது. சுமைகாரன்,  சுமைகூலி  ( செமகூலி என்ற பேச்சுவழக்கின் எழுத்துவடிவச் சொல் ).  சுமைகூலி என்பதற்கு இப்போது இன்னொரு சொல்:  " எடுகூலி". (தூக்குகூலியுமாம்).

சுமைகூலி என்பதை வலிமிகுத்து  " சுமைக்கூலி" என்றும் சொல்வதுண்டு:  "சுண்டைக்காய் கால்பணம் ,  சுமைக்கூலி முக்கால் பணம்"  (பழமொழி).  

இவ்வாறு வலிமிகுத்தும் மிகாதும் வருமென்பது  தெரிகிறது.

வலி மிகவேண்டிய இடங்களில் மிகாமல் காத்து எழுதுவது இப்போது மிகுதியாய்க் கடைப்பிடிக்கப் படுகிறது. வல்லான் வகுத்தது வாய்க்கால் என்பதில் வல்லான் ஒருவனாக இருந்த காலம்போய்,  மக்கள் என்போரை ஒருவனாயும் வல்லானாயும் கருதும் நிலை வந்துவிட்டது.  நெடுங்காலமாகப் பல திரிபுகள் முன்னர் எதிர்க்கப்பட்டுப் பின்னர் ஆட்சி பெற்றுவிட்டமையானது தெளிவாகத் தெரிகிறது.   வல்லான் ஒருவன் என்பது ஒரு கற்பனை!  அவன் ஒருவனல்லன், பலர்.

ஒரு காலத்தில் ஒன்பதுக்குத் தொண்டு  எனப்பட்டது.  பின் தொண்பது என்னும் எண் ஒன்பது ஆயிற்றென்பர்.    ஒன்+பது என்பதால்,  பத்தில் ஒன்று குறைவு ஒன்பது ஆனது என்பர்.  அஃதிருக்க,  ஒன்பதுக்கு அப்புறம்  பத்து என்று இனி ஓர் எண்ணிக்கை தேவைப்பட்ட போது, தமிழர்  பல் - பல என்ற சொல்லினின்று அதைப் படைத்துக்கொண்டனர்.   பல்து > ப+ து >  பத்து ஆனது.  பல் என்ற ஈரெழுத்துச் சொல், ப என்று கடைக்குறையானது.  இதை இன்னொரு வகையில் பல்து > பற்று> பத்து  எனலாம்.  வல்லோர் பலர்,  பற்று என்பதைப் பத்து எனலாகாது என்று போராடியிருந்தாலும் அவர்கள் எல்லோரும் தோற்றுப்போயினர்!!  பற்று என்பது பற்றிநிற்கும் ஆசையை  அன்றோ குறிக்கவேண்டும் என்ற வாதம் தோற்றுவிட்டது. பற்று என்பது பத்து என்ற எண்ணைக் குறிக்கும் நிலை காணப்படவில்லை.  இருந்திருக்கலாம், நமக்குக் கிடைக்கவில்லை.  புலவர் காலமானபின் அவர் சேர்த்துவைத்திருந்த பழம்பதிவுகள்  எறியப்பட்டமையே  இயல்புநிலை ஆகும். 

கழுத்திருத்தல் என்பது சுமை என்பதற்கு இன்னொரு வரணனைச் சொற்றொடர்.   கழுத்து+ இருத்து + அல்>  கழுத்திருத்தல். இருத்து~(தல்) -கழுத்தை அழுத்தும் சுமை வை(த்தல்)  .   கோப்பு என்பது சுமைக்கு இன்னொரு சொல். இப்போது file  என்ற ஆங்கிலத்தை மொழிபெயர்க்கப் பயன்படுகிறது.  அரத்திற்கும் அது பெயராவதுடன், ஆங்கிலத்தில் வினைச்சொல்லாகவும் பயன் தருவது ஆகும். பலவற்றையும் ஒரு பைக்குள் கொட்டினால் சுமை மிகுதலால், கொட்டியான் என்பது சுமைதூக்குவோனுக்குச் சொல்லானது. காய்கறிகளும் பைக்குள் கொட்டப்பட்டுக்  கொண்டுசெல்லப் படுதலால்   கொட்டியான் என்பது காய்கறிகளையும் குறித்தது.  அரசர்கள் இவற்றை வாங்கி அலுவலர்களுக்கு இனாமாக அளித்தனராதலால், இவை படித்தரம் ஆயின.  ( படியாகத் தரப்படுவது படித்தரம் ).   இன் என்பது  உரியது, உரியன குறிக்கும் பழஞ்சொல். ஆம் என்பது ஆவது  ஆகும் என்று பொருள்தரும்.  இனாம் -  உரிமையாகத் தரப்படுவது. Don't always think of the word : "free".  Nothing is for free,  said our Statesman Mr Lee Kuan Yew. ( Someone had to work for it to be produced). கொடுப்பவன் வணிகன் அல்லன் ஆதலால்,  விலையின்றி என்ற வருணனைச் சொல் தேவைப்படவில்லை. Among factors of production, Labour has its own dignity and importance. Capital has its own. "எனமா", "எனாமா" என்பவை தவறான திரிபுகள். அறிக.  ஆனால் ஆய்வுக்குப் பயன்படலாம்.

சுமைதாங்கி என்பதைச் செமதாங்கி என்றும் சொல்வதால்,   செம என்பது பேச்சுவடிவச் சொல்.  இது சுமை என்பதன் திரிபே ஆகும்.

Heavy என்பதும் ஆங்கிலத்தில் மிகுதி குறிப்பதுண்டு.  எ-டு:  heavy rain. மற்ற மொழிகளிலும் இதைக் கண்டறியலாம்.  எடுத்துக்காட்டு:  மரமி   - (தகலோக் மொழி)  heavy (meals).  மிகுதியாய் ( உண்ணல்).

அறிக மகிழ்க.

மெய்ப்பு: பின்னர்.



கருத்துகள் இல்லை: