புதன், 24 நவம்பர், 2010

some lines on my cat


 புதுக்கவிதை

இது எங்கள் பூனை,
இது எங்கள் பூனை.
எது பக்கம் வந்தாலும்
ஏதும் பயந்து ஓடுவதில்லை!

என்ன அங்கே வருதோ என்று
இருந்த படியே ஆய்வு செய்யும்.
கண்ணை விரித்துப் பார்த்து விட்டுக்
கலங்கிடாமல் நடந்து போகும்.

மியாவ் என்று நான் சொன்னாலே
மியாவ் என்று தானும் சொல்லும்.
குரலில் என்றன் உணர்வு தெரிந்து
மியாவில் பலவகை மீட்டிக் காட்டும்.

உடலோ கொஞ்சம் கனத்துப் போச்சு!
உட்கார்ந்து நேரம் கழிக்க லாச்சு!
உலகம் அமைதி என்றே நினைத்து
உறங்கிக் காலையில் விழிக்க லாச்சு.

போர்த்திப் போட்டேன் தூங்கு! என்றேனே
போர்வைக் குள்ளே கிடக்கும் சோம்பல்
நேர்த்தி என்று நினைத்தி டாமல்
நீட்டி மேலே தூங்கும் பூனை!

கிழடு ஆன போதும் இன்னும்
கிழட்டுப் பற்களில் பழுதோ இல்லை!
தோலும் முகத்தில் சுருங்க வில்லை,
வாலின் ஆட்டமும் அடங்க வில்லை.

கருத்துகள் இல்லை: