திங்கள், 8 ஏப்ரல், 2024

சமானம் என்னும் பதம்.

 பழைய இடுகை ஒன்றில் பதம் என்ற சொல்லும் எவ்விதம் அமைந்தது என்பதற்கு  விளக்கம் எழுதியுள்ளோம்.  ஒவ்வொரு வழக்கிலுள்ள தமிழ்ச்சொல்லிலும் பொருண்மை பதிவுற்று உள்ளது.  பதிவுற்று நிற்பதுதான் பதம் என்னும் சொல்.  பது, பதி என்பவை பதிந்துள்ளமை என்று பொருள்தரும். சற்றுக் குழம்புபோல் உள்ள பரப்பில் கெட்டியான ஒரு பொருள் நல்லபடி பதிந்துவிடுகிறது.  ஒரு பெண்ணாதிக்கக் குடும்பத்தில்  அப்பெண்ணை மணந்துகொள்ளும் ஆண்மகன் திருமணத்தின்பின் தன்னைப் பதிந்துகொள்ளுகின்றான். பண்டைக் காலத்தில் எழுத்துமுறையிலான பதிவுகள் இல்லை.  மனத்திலே பதிந்துகொள்ளும் முறையே இருந்தது. ஆகையினால் அவன் "பதி" எனப்பட்டான்

இதை மேலும் இங்கு விளக்கியுள்ளோம்.  சொடுக்கி வாயித்து  (வாசித்து)க் கொள்ளுங்கள்.  வாயினால் வெளிப்படுத்துவதுதான் வாயித்தல். யி பின்  சி  ஆகும்.

https://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_25.html

சுழுத்தி , சுழுமுனை நாடி என்பனவும் இங்கு விளக்கப்பட்டுள்ளன.

https://sivamaalaa.blogspot.com/2021/03/blog-post_15.html

சமானம் என்பது தமிழிலும் சங்கதத்திலும் (= சமஸ்கிருதத்திலும்)  உள்ள தற்சமச் சொல்.

இதைப் பாணினி என்ற பாணப் புலவன் சொன்ன படி பிரிக்காமல்  தமிழ்வழியில் பிரித்தறிவோம்.

சமம் +  ஆன + அம் >  சம +  ஆன + அம் >  சமானம்.  

சமானம் என்பதை  ஸமானம் என்று முன்னர் எழுதினர்.

இதை:

சமம்  +  அன் + அம் >   சம + அன் + அம் >  சமானம் என்றும்  பிரிக்கலாம்.

அன் என்பது அன்ன என்ற உவம உருபு  அன் என்று குறுகி இடைநிலையாக நின்றதாகும்.  " சமமான அதுபோலும் அமைந்தது " என்று இது வாக்கியமாகிப் பொருள் பயக்கும்.

சம என்பதில் இறுதி  அகரமும்   அன் என்பதன் முதலான அகரமும் இணைய:

அ + அ >  ஆ  என்பது ஒலியியல் முறையில்  சரியானதே,

அ அ என்பதைத் தட்டச்சுச் செய்தால்  ஆ ஆகிவிடும்.  அறிக.

விடுதலை விடுதலை என்ற பாரதியார் பாட்டில்  சரிநிகர்  சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே என்ற வரியையும் படித்து அறிந்துகொள்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.



சனி, 6 ஏப்ரல், 2024

மித்திரம் நட்பு - காக்கும் காஉசிக முனிவர்.

 தேவர் தம் நூலில் நட்பினை நன்கு  ஆராய்ந்து விளக்குகிறார். அவர்:


மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு. 800


என்று தெளிவாகப் பாடுகிறார்.  ஆனால் இதிலுள்ள தொல்லை என்னவென்றால் ஒருவன் மாசற்றவன் என்று அவனுடன் பழகுமுன் எப்படித் தெரிந்துகொள்வது?  பிறகு பிறகு தானே ஒவ்வொருவன் வண்டவாளமும் தண்டவாளத்தில் ஓடுகிறது?

ஒருவன் ஒவ்வொரு மாலையிலும் போய்ச் சங்கிலி திருடுகிறான் என்று,  நாம் வீட்டிலுருந்துகொண்டு எப்படித் தெரிந்துகொள்வது?  ஒருநாள் பிடிபட்டபின் என்னை வந்து பிணையில் எடு ( bail me out please)  என்று தொலைபேசியில் அழைக்கும்  போதுதான்  தெரிகிறது. 

நட்பு என்பது மிக்கத்திறன் வாய்ந்தது.  அவனுக்காகச் சொத்தை அடைமானம் வைத்து காசு கட்டி அவனை மீட்டு வருகிறோம்.

இது நம் அளவில் நாம் செய்த நன்மை.  நாம்  அவனுக்கு மிக்கத்திறன் வாய்ந்த ஒரு நண்பன். நட்பு என்பதே ஒருவனையாவது காப்பாற்றவேண்டிய ஒன்று. இப்படி உலகில் பலரைக் காப்பாற்றியவர்தாம் கவுசிக முனிவர்.   அவர்: உலகம் என்றால் அதில் நல்லவர்களும் கெட்டவர்களும் இருப்பார்கள். கெட்டவர்களுக்கு நோய் வந்தாலும் மருத்துவர் மருந்து கொடுக்கத்தான் செய்கிறார்.  அப்போதுதான் ஒருவர் உலக நண்பன் ஆகிறார்.

காவு  உசிக  முனிவர்.

காவு உயிக முனிவர்

காவு உய்வு இக முனிவர்.  காவலின் உயர்வு மிக    வாழ்ந்த முனிவர்.

காவு என்றால் அது காவல். 

அவரல்லரோ  உலக நண்பரான முனிவர்.



நட்பும் மிகத்திறம் உடையது. அதனானாலேதான்  மிக்கத்திறம் >  மிகத்திரம்>  மித்திரம் ஆயிற்று

மித்திர(ம்)  என்றால் சம்ஸ்கிருதத்தில் நட்பு. மிக்கத்திறன் என்பது நட்புத்தான்.

காத்தல் என்பது ஒரு கடவுளியல்பு.  முனிவர் அவரின் பதில்நிலையராக (representative) நின்று உலகுக்கெல்லாம் நண்பராகிறார்.

மிகத்திறம்> மி(க)த்திரம் > மித்திரன்.

கா உய் இக அன் >  காவுயிகன் >  காவுசிகன் > கௌசிகன்.
பொருத்தமான புனைவு ஆகும்.


வெள்ளி, 5 ஏப்ரல், 2024

பாக்கியம் என்பதன் அடிமுடிப்பொருள்.

 இவ்வுலகில் இலாபம் மட்டுமே ஏற்படுவதில்லை.  நட்டமும் ஏற்படத்தான் செய்கிறது. இரண்டுமே இந்த உலகம் என்னும் குட்டையில் ஊறிக்கிடைத்த மட்டைகள்தாம். இரண்டும் ஒரே மட்டை என்று வைத்துக்கொண்டால், மட்டையில் ஒரு பாக்கியம் என்னலாம்; மற்ற பகுதி பாக்கியமின்மை ஆகும். ஒன்று நல்ல பகுதி.  இன்னொன்று கெட்ட பகுதி.

பாக்கியம் என்றால் இயன்ற பகுதி.  அதனால்தான் அதற்கு இயம் என்ற விகுதி கொடுத்துள்ளனர்.  பாக்கியமின்மை நமக்கு இயலாத பகுதி. அதை நாம் இப்போது துருப்பிடித்த பகுதி என்னலாம்.  துருப்பிடித்த இரும்பு போல பயன்படுத்த வியலாத பகுதி. இதை இன்னும் சுருக்கிச் சொல்வதானால் "துருப்பாக்கியம்" -  என்று சொல்லிப்பாருங்கள். இன்னும் சுருக்கித் துர்ப்பாக்கியம் என்று சொல்லியும் பாருங்கள். 

துரு என்பது இரும்பைத் துருவிச் சென்று இறுதியில் ஒரு பொத்தலைப் போட்டுவிடுகிறது.  அதனால்தான் அதைத் துருவென்று சொன்னார்கள். துருவென்பது துருவுதல் என்பதன் அடிச்சொல். இறுதியில் இரும்பைத் தின்றுவுடும் துருவை துரு என்று சொல்லாமல் என்னவென்று சொல்வது. துருவென்பது சரியான சொல்.

பாக்கியம் என்றாலே அதை நற்பேறு என்றுதான் வேறு சொல்லால் குறிக்கமுடியம்.  அப்புறம்  துருப்பாக்கியம் என்றால் இப்போது பாக்கியம் என்ற சொல் "கெட்ட நற்பேறு"  என்று சொல்லலாமோ?   அது முரண்பாடாக இல்லையா?  ஆகவே,  பாக்கியம் என்றால் நற்பேறு அன்று,  வெறும் பேறு மட்டுமே,  நற்பாக்கியம் என்றால்தான் நல்ல பாக்கியம், துருப்பாக்கியம் என்றால்தான் கெட்டபாக்கியம் என்னலாமோ.

மனிதனே குறைகள் இல்லாதவன் அல்லன்;  அவனால் ஆக்கப்பட்ட மொழியும் குறைப்பட்டதே ஆகும். ம்

இப்படி ப்ளூம்ஃபீல்ட்டு முதலிய மொழிநூலறிஞர்கள் மொழிகளில் பல முரண்பாடுகள் உள்ளன என்று கூறுகிறார்கள்.  உலகின் எல்லா மொழிகளிலும்!   ஆங்கில மொழியிலிருந்து பல முரண்பாடுகளைக் காட்டுகிறார்கள். தமிழில் இப்படி நாம் காணும்போது,  உரையாசிரியர்களே நமக்கு வந்து வழிகாட்டுகின்றனர். பாக்கியம் என்றால் நல்ல பாக்கியம் என்று எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும் கூறுவர்.  பள்ளமும் மேடும் அடுத்தடுத்து வருமாயின்  வண்டி கவிழ்ந்துவிடுமன்றோ?   நல்லபடியாக மட்டுறுத்துகின்றனர் என்று அறிக.

எனவே:

பாக்கியம் என்று வந்தால் அது நல்ல பாக்கியம் அல்லது பேறு.

துருப்பாக்கியம் என்றால் கெட்ட நிகழ்வு

அடிப்பொருள்

:  நல்ல பாகம் அல்லது பேறு.

ஏன் பாகம் என் கிறோம்?  பாகம் என்பது பகுதி,

எப்படிப் பகுதி ஆகும், பாருங்கள்:

பகு> பாகு>  பாகு + இயம் > பாக்கியம்.

இறுதி உகரம் வர ககரம் மெய்  இரட்டிக்குமே.

முடிப்பொருள்:

பாக்கியம் துர்ப்பாக்கியம் என்று உலகவழக்கில்  ( அன்றாடப் பயன்பாட்டில்) இருப்பதால்,  பாக்கியம் என்பது இப்போது பொதுப்பொருளில் வழங்குகிறது. 

ஆயினும் பாக்கியம் என்பதன் ஆக்கப்பொருள் நற்பேறு என்பதே.

இயம்:  இ + அம்  :  என்றால் இங்கு அமைவது அல்லது இயன்றது.

இயல் > இயம்,

அறிக மகிழ்க

மெய்ப்பு:  பின்னர்.