திங்கள், 19 ஜனவரி, 2026

புராணம் என்பதென்ன

 புராணம் என்பதென்ன என்று வினவிக்கொள்கிறோம். இதற்கு நாம் கண்டுபிடிக்கும் விடையிலிருந்து  புராணம் என்ற சொல்லுக்கு  அந்தச் சொல் புனைந்த காலத்தில் என்ன பொருளில் வழங்கியது என்று அறிந்துகொள்வோம்.

ஓர் இறைக்கதையை எடுத்துச் சொல்கிறவன்,  உரிய நிகழ்வினைக் கேட்டறிந்து கூறுகிறவனாகில், தான் அறியாமற் கழிந்தவை போக எஞ்சியவற்றைக் காதில் வாங்கிக்கொண்டு,  அந்தக் கதையைப் புனைந்து உரைப்பவனாகிறான்.  

புனைதல் என்பதென்ன?  புனையரணம் புராணம்.இந்தச் சொல்,  னை என்னுமெழுத்தும் யகரமும்  கெட்ட ( அல்லது நீக்கப்பட்ட) சொல்லாகும்.  இந்தச் சொல்லும் புனைவுச்சொல்லே. அல்லது தானே மக்களிடம் திரிந்த சொல்லெனினும் அதுவும் கூடுவதே. பு(னைய)ரணம்>> புரணம்>  புராணம்  ஆனது.  இது இரண்டு எழுத்துக்கள் மறைந்த இடைக்குறைச் சொல். எழுத்துக்கள் வேண்டுமென்றே விடுக்கப்பட்டிருந்தால் அதனைத் தொகை என்பர்.  மூவுழக்காழாக்குத் தினைதந்தாள் என்றதை மூழாக்காழாக்கு  என்று திரித்தால், அது தொகை ஆகும். இவ்வாறு சொல்லின் முழுமையும் அறிந்தோர் தமிழரே. பிறர் சொற்பர் ஆவர்.

இனி இன்னொரு பிறப்பும் இச்சொல்லுக்குக் கூறலாம்.  இலக்கியத்தை, கவிதையை, இறைவரலாற்றை, நடந்தனவற்றை உள்ளபடி காத்து வைப்பதற்கு ஆனவற்றை  எழுதிவைக்க ,  புர+ அணம் >  புராணம் என்று சொல்லமைந்தது என்னில்,  அதுவும் கூடுவதே.  

இச்சொல்லை முன்னரே  ஆய்ந்தோ ஆயாமலோ, அமைப்புக் கூறினவர்களும் உள்ளனர். அவர்கள் பழையன காத்தல் என்ற பொருளில் புராணம் ஆகும் என்றனர்.  அதையும்  சிந்தித்துக்கொண்டால்,  இச்சொல் ஒரு பலபிறப்பி என்று கொள்ளவேண்டும். பிற கூறினோரும் உளர். அவற்றை அவர்தம் நூலிற் காண்க.

புராணம் என்றால் பழமையானது, பொய்யுரை என்ற பொருளில் இங்கு எதுவும் கூறப்படவில்லை என்பதறிக.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை



வெள்ளி, 16 ஜனவரி, 2026

மூலியம், மூலிகை ( அவன் மூலியமாய்....) சிறு அலசல்.


கதிர்வேலுப் பிள்ளை என்பவர் ஒரு சிறந்த அகரவரிசைத் தொகுப்பாளர். அவரை நினைவு கூர்வோம்.

========================================================================
தமிழர் நாகரிகத்தின் பழமையான சான்றுகள் இப்போது தமிழ்நாட்டில் அகழ்வாய்வின் மூலமாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

சொல்:  முல் > முன்.  சொல்லாக்கங்கள்:

முல் >  முலை  (முன்னிருப்பது)

முல் > முன் ( லகர னகரப் போலி)  

முன் >  முனை ( முன்னிருப்பது). 


சொல்லின் முதல் நீளுதல்:

முல் >  மூல் > மூலம்.    மூலம் என்பதில்  அம் விகுதி வந்தது.  பழு> பழம் என்பது போலும்.

மூல் >  மூலிகை.  ( இ, கை).

மூல் > மூலியம் ( பேச்சு வழக்குச் சொல்). வழக்கு என்றால் பயன்பாடு.

(மூலியம் -  வழியாக, மூலமாக என்று பயன்பாட்டுப் பொருள்)

இது பலபொருட் சொல்.  through, means, price, payment  (see dictionary). etc.

மூலிகன் -  செடி. ( தவசி).

இப்போது மூலிகை என்ற சொல் மட்டும் வழங்குகிறது.  மூலிக்கை என்ற சொல்லும் உள்ளது. இது மருந்து மூலிகைகளைக் குறிப்பது.

மூல்+ இ+ அம் என்பவற்றில் இ - இடைநிலை, அம் - இறுதிநிலை;  இறுதிநிலையாவது விகுதி.   மிகுதி =  விகுதி  ( மி - வி  திரிபு).

விகு - விகுத்தல் என்ற சொல் இருக்கலாம் என்றாலும் பழைய நூல்களிக் கண்டுபிடிக்க முடியவில்லை.  விஞ்சு > < மிஞ்சு திரிபு எனில் அமையும்.

வியாழன், 15 ஜனவரி, 2026

அகஸ்துமாத்து, அல்லது அகஸ்மாத்து

 காரணம் இல்லாமல்  என்பதை அகஸ்துமாத்தாக அல்லது அகஸ்மாத்தாக  என்பர்.

ஒரு காரணம் என்பது  எப்போதும் மனத்தில் இருப்பது.  அந்தக் காரணத்தை,  காரியத்தைச் செய்பவன் அல்லது காரியத்தினால் பாதிப்புற்றவன் வெளியில் சொன்னால்தான் பிறரும் அதை அறிந்துகொள்ளவேண்டிவரும்.  நடப்பிலிருந்து ஊகித்துக் கொள்வதாய் இருந்தாலும் ஊகித்தவன் வெளியிட்டாலன்றி பிறர் அறிதல் கடினம்தான்.

இந்தச் சொல்லில் மாற்று என்பது  மாத்து என்று வந்தது,  மக்கள் பயன்படுத்தும் முறையில் சொல்லமைந்ததைக் காட்டுகிறது. காரணம் இருக்கும் என்னும் மனத்தினருக்கு அதற்கு மாறாக சம்பவம் நடந்ததையே இது காட்டுகிறது.

அகத்து -  உள்ளமைந்த காரணம் உண்டென்று எதிர்பார்ப்பவருக்கு,  மாத்து =  மாற்றமாக  ( நடந்தது  என்பது_.

அகத்து என்பதே அகஸ்து என்று வந்துள்ளது. பேச்சுத் திரிபு.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை