வெள்ளி, 5 செப்டம்பர், 2025

படனை > பஜனை

 இந்தச் சொல் பழங்காலத்தில்  படனம் என்று  இருந்தது.  பின்னர் இது படன அல்லது பஜன  ஆகிப் பஜனை என்று  எழுதப்பட்டு இன்றும் இவ்வாறே வழங்கி வருகிறது.

சாவு என்ற சொல்லுடன் தொடர்புடைய சவம் என்ற சொல் பிணத்தைக் குறிப்பது.

சா> சா+ அம் >  சவம் என்று  குறுகி விகுதி பெற்றுத் தொழிற்பெயராவது காண்க.

தாள் என்ற சொல்லிலிருந்து வருகிற சொல் அம் விகுதி பெற்றுத் தளம் என்று குறுகி  அமைகிறது.    வா என்ற சொல்லினின்று  வந்தான் வருகிறான் என்ற சொற்களும்  வகரமாகக் குறுகிவிட்டன.  இது தமிழ்மொழியில் இயல்பு  ஆகும்.

இதுபோலவே படனம் என்ற சொல்லும்.  பாடு+ அன்+ அம் >  பாடனம்> படனம் என்று குறுகும்.

படனம் > பஜன > பஜனை.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்

பகிர்வுரிமை உள்ளது

செவ்வாய், 2 செப்டம்பர், 2025

ரவை என்ற சொல். ( துப்பாக்கியின் ரவை).

 இச்சொல்லினை இன்று  ஆய்வு செய்வோம்.

சுழல் துப்பாக்கிகளில் ரவைகளென்னும் தோட்டாக்களை வைப்பதற்குத் துவாரத்துடன் கூடிய சுழலி இருக்கும்.  சுழலியின் துவாரத்தில் வைப்பதற்குரிய தோட்டாக்காக்கள் ரவைகள் எனப்படும்.

இருக்கும்படியாக வைப்பதுதான் இரு + அ + வை > இரவை ஆகும்.   இச்சொல் பின்னாளில் தன் இகரத்தை இழந்து  ''ரவை' ' என்று மட்டும் வழங்கியது.

இரவை என்பதில்  இரு என்பது சொல்லின் பகுதி.  அகரம் இடைநிலை.  வை என்ற இறுதியே விகுதி ஆகும்.

தோட்டில் இருப்பது இரு அ வை > இரவை. ( ரவை).  தோடு > தோட்டா  ( தோடு+ ஆ)   எனவும் படும்.   ஆ என்பதும்  ஒரு விகுதி.    நில் > நிலா எனக்காண்க.  பல சுளைகள் உள்ள பழம் பலா  ( பல் + ஆ).    தோடு> தோட்டா.  இங்கு டகரம் இரட்டித்தது,  இவ்வாறு இரட்டித்தல் வினையிலும் பெயரிலும் நிகழும்.   பாடு> பாட்டு என்பது அறிக.  காடு> காட்டா என்ற சொற்புணர்ச்சியும் காண்க.  இது காடு+ ஆ என்பதுதான்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிர்வுரிமை.


ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025

அங்ககத்தி என்னும் மரியாதைப் பண்புநலம்

 இந்த மரியாதைப் பண்புக்கு உண்டான பெயரை இன்று அறிகிறோம்.

அணுக்கமாக வந்து பழகுவோரை உரிய பணிவன்புடன் நாம் போற்றிக்கொள்ளவேண்டும்.  எந்த நேரத்தில் எவனால் அல்லது எவளால் நமக்கு ஒரு காரியம்  ஆகவேண்டிய சூழ்நிலை வருமென்பதை உலகில் கணித்து வைத்துக்கொண்டு நடந்துவிடுதல் என்பது இயலாத வேலை.  சிறுதுரும்பும் ஒரு பல்குத்த உதவும் என்பது  உண்மையான  ஒரு பழமொழி.

அணுகி  அகமும் புறமும் மகிழ நிற்பவரை  ''அணுகும் அகத்தினர்''  என்ற தொடரால் அறிந்து கொண்டது பண்டைத் தமிழரின் பேராண்மையைத் தெளியக் காட்டுகிறது 

அணுகு + அகத்து + இ  >  அணுககத்தி >  (அண்கு + அகத்து + இ > அண்+ ககத்தி + அங்ககத்தி   என்ற சொல் அமைந்தது  மகிழத்தக்கது.

ணகர ஒற்று  ங்கென்று வந்தது  அறிந்துகொள்க.  இதுபோலும் சொற்களை முன் பழைய இடுகைகளில் காட்டியுள்ளோம்.

உறுப்புகள் அணுக்கமாக உள்ள பைக்குள் இருப்பதே அங்கம் என்பதும் ஆகும்.  அணுகு+ அம் > அங்கு+ அம் >  அங்கம்  ஆகும்.  தமிழ்ச்சொல்.  அணுகில் உகரம் ஒழிய,  அண் கு அம் >  அண்கம் >  அங்கம்  ஆகும்.  இது வருமொழி நிலைமொழிப் புணர்ச்சி அன்று.  சொல்லாக்கப் புணர்ச்சி  இலக்கண நூல்களில் சொல்லப்படவில்லை.

நீங்கள் (நிங்கள் > நிங்ஙள்)   என்னாமல் தாங்கள்  தங்கள் என்பன இப்பணிவண்பு.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது