வெள்ளி, 29 ஆகஸ்ட், 2025

ஸ்தாபித்தல் என்ற சொல்லமைப்பு.

 இச்சொல்லை அறிந்துகொள்வோம். 

ஸ்தாபித்தல் என்ற சொல்லை தற்காலத்தில் அவ்வளவாக நாம் உரைநடையில் எதிர்கொள்வதில்லை.. அதற்குப் பதிலாகவோ அன்றித் தனித்தமிழிலோ நிறுவுதல் என்ற சொல் நன்கு வழங்குகிறது. வேறு வகைகளில் சொல்வதற்குப் பல வழிகள் உரைநடையில் உள்ளன.

தாபித்தல் அல்லது தாவித்தல் என்று வருவதில்லை.

ஸ்தாபித்தல் என்றால் தளம் அமைத்து எழுப்புதல் என்று சொல்ல,  அது சரியாகவிருக்கும். 

தளம் >  தளப்பித்தல் > தாள்பித்தல் >  தாட்பித்தல் >  தாபித்தல்  >  ஸ்தாபித்தல் என்று வந்ததே இச்சொல்.

ஓர் அமைப்பின்  தாள்  அல்லது அடிப்பகுதியாய் இருப்பதே தளமாகும்..

தாள் > தாள்+ அம் > தளம்.  

இதில் அம் விகுதி வந்து சேர,  தாள் என்பது தளம் என்று குறுகி அமைந்தது.

சாவு+ அம் >  சவம் என்றமைந்தது போலுமே இது. இதுவே போல் தோண்டப்பட்டது போன்றிருக்கும்  குழாய்,  தொண்டை என்று குறுகி  அமைந்ததும் காண்பீராக.

வாண்டையார் என்ற பட்டப்பெயர்  வள் என்ற அடியிற் றோன்றி,  -----

வள் > வாள்>  வாண்டை >  வாண்டையார்  ( வளமுடையார்)  என்ற பொருளில் வரும் என்பதும் அறிக.  

நீள்தலும் சுருங்குதலும் தமிழியல்பு,  சொற்களில்.   வருக,  வாங்க என்ற சொற்களில் வரும் சுருக்கம்  நீட்சிகளை அறிக.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

பகிர்வுரிமை.

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

பகிரங்கம் என்ற சொல்.

பகிரங்கம் என்ற சொல் அறிந்தின்புறுவோம்.

பகிரங்கம் என்னும்போது ஒருவரை ஒருவர் அணுகி  அதைப் பகிர்ந்துகொள்வர்.   அதைத்தான் பகிரங்கம் என்று சொல்கிறோம்.  பகிரங்கம் என்ற சொல் அமைந்த காலத்தில் பத்திரிகை இல்லை,   அறைதல்  என்ற  சொல்லுக்கு என்ன பொருள் என்றால்  அரசன் தகுந்த முறையில் தன் கீழதிகாரிகளிடம் சொல்லி முரசறையச் செய்து,  கூவித் தெரிவித்தல்.  இதிலிருந்து பறைதல் என்ற சொல் கிளைத்தது.  அப்படி வராமல் தகுந்த முறையிலின்றி அங்குமிங்குமாகப் பேசிப் பரவுவதுதான்   தகவு+ அல்.   தகுந்த முறையில் அல்லாதது.  தமிழரசுகள் மறைந்தபின்  ''தகவு அல்''  - தகுந்த முறையில் இல்லாதனவே பரவின.  இவ்வரசுகள் போகவே,  அறைதல் என்ற சொல் வழக்கு  இலதாகி,  தகவல் என்பதே எஞ்சி நிகழ்ந்தது.

பகிர்ந்து அண்கு  அம் >  பகிர் அண் கு அம் > பகிரங்கம்  ஆயிற்று.  அண்கு அம்> அங்கமானது.

பகிரங்கம் என்ற சொல் உண்டானபோது  அவர்களிடம் இருந்த பகிர்வு முறைகள் இன்றைய நிலையுடன் ஒப்பிடமுடியாதன.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.


 

சனி, 23 ஆகஸ்ட், 2025

க> ச வருக்கம் திரிபுவகை [களி>சளி]

 இதனை இன்று   ஆய்வு செய்கிறோம்.

கேரளம் என்ற சொல்லை ஆய்ந்த தேவநேயனார்  சேரல்  என்ற சொல்லே சேரலம் என்ற திரிபு கொண்டு பின் கேரளம் என்று திரிந்தது என்று சொன்னார்.  ச என்ற எழுத்து  க என்று திரிவதானால்தான் இவ்வாறு கூறப்பட்டது. சளி என்பது  ஏறத்தாழ அரிசிக்களி போன்றே இருப்பதால்  களி > சளி என்று திரிதல் இயல்பு. இந்த மாற்றம் கள்>சள் என்று மாறி ஏற்பட்டமையின் இது பொருத்தமே. ( Medical people say that phelgm is a vegitable matter.  )அரிசித் தூள்  பன்மைத் தன்மை உள்ளமையின் கள் என்பது சள் என்று திரிந்து பொருண்மை பிறழாமல் வந்தது. பலர் இருக்கும் இடம் ''கள்> களம்''  எனப்படுவது அறிக. பரவலாகப் பறிக்கப்படுதலால்   கள்> களை என்பதும் காண்க. கள் > களர் என்பதும் அது. பலமரங்கள் (தென்னை) எடுக்கத் தருதலாலும் மற்றும் பல சொட்டுக்கள் வடிதலாலும் கள் என்ற பானம் அவ்வாறு குறிக்கப்படலாயிற்று.

தனது வலிமை பலவாறு விரிந்து ஓய்ந்துவிடுதலை  சள் > சளை > சளைத்தல் என்பதும் குறிக்கிறது. விரிவாகப் பல இடங்களிலும் உடலைத் தேய்த்துத் தடவும் விளையாட்டு :   சள் >சல்> சல்லாவம் எனவாகும். பல சிறியவான கற்கள் சல்லி என்பர்.  இவ்வாறு அறிக.

குருளுதல் > சுருளுதல் என்பதையும்  க - ச திரிபில் கவனத்தில் கொள்ளுங்கள்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை

இதில் சில எழுத்துக்கள் அழிந்துவிட்டனவாகையால் இது 

மீட்டு எழுதப்பட்டது என்பதறிக.