புனிதம் என்பது தீமை அற்ற நிலை. விலக்கத்தக்க எதுவும் இல்லாமலாவது. இதற்கான சொல் எப்படி உண்டாயிற்று?
ஓரிடத்தில் சேறும் சகதியுமாய் இருக்கிறது. புவியில் எந்த இடத்தை நோக்கினாலும் கல்லும் மண்ணுமாகத்தாம் இருக்கிறது. இந்த இடங்களைத் தூய்மைப் படுத்தி கடவுளைத் தொழத் தொடங்குகிறோம். தூய்மைப் படுத்தும்போது அது புனிதமான இடமாக மாறிவிடுகிறது.
புன்மை என்பதன் அடிச்சொல் புல் என்பதுதான். புல்+ மை > புன்மை. தூய்மை செய்யப்பட்டு இனிதானால்:
புல் + இனிது + அம் > புல்லினிதம் > புனிதம் ஆகிவிடும்.
அழுக்கு நீங்கும் வண்ணம் தூய்மை செய்து முடிக்கவேண்டும்.
மறைமலையடிகள் அதைப் புனல் என்ற சொல்லினின்று விளக்கினார். புனல் இனிதாக்குகிறது என்றார்.
இதன்படி புனல்+ இனிது + அம் > புனலினிதம் > புனிதம். கழுவுதலால் புனிதம் உண்டாகிறது.
சமஸ்கிருதம் என்பது இந்திய மொழிதான். ,மேலைநாட்டு மொழியன்று. அதிலிருந்து பல சொற்களை மேலை நாட்டினர் கடன்பெற்றனர். மொழிவளத்தை உண்டாக்கிக் கொண்டனர்.
உரோமப் பேரரசுக்கு ஓர் ஆட்சிமொழி தேவைப்பட்ட போது அவர்களும் சமஸ்கிருதத்திலிருந்தும் தமிழிலிருந்தும் பல சொற்களைக் கடன்பெற்றனர். தமிழ் நாட்டிலிருந்து ஒரு புலவர் குழுவே சென்று உதவிற்று என்று சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவர் ஆய்ந்து கூறியிருக்கிறார். இந்த விவரங்களை மயிலை சீனி வேங்கடசாமி விளக்கமாகச் சொல்லியுள்ளார்.
புன்மை ஒழிந்து இனிமை ஆவதே புனிதம் ஆகும். இச்சொல் ஓர் இருபிறப்பி ஆகும்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.
பகிர்வுரிமை வழங்கப்படுகிறது.