ஞாயிறு, 13 ஜூலை, 2025

வில்லாளன், விக்கிரமி சொற்களில் மறைந்திருக்கும் உண்மை..

 விக்கிரமி என்ற சொல்லுக்குச் சிங்கம் என்ற பொருளுடன் வீரம் என்ற பொருளும் கிடைக்கிறது.  என்ற போதிலும் ஒப்பீட்டுச் சொல்லியல் என்று வருகையில், அதனை வில் என்ற பழைய போர்க்கருவியின் அடிப்படையில் அமைந்த சொற்களுடனும் பொருண்மையுடனும்தான் நிறுத்திப் பார்க்கவேண்டும்.  விக்கிரமி என்ற சொல் ஒரு கருவிப்பெயரின் அமைப்பிலிருந்து எழுந்த சொல்லாகும் என்று உணர்க. இது எவ்வாறு என்று பார்ப்போம்.

வில் + கு+ இரு + அம் + இ  என்று இதைப் பிரிக்கவேண்டும்.  இவ்வாறு செய்கையில் வில்லுக்கு இருக்கின்ற அமைப்பில் இணைந்திருப்பது என்ற பொருள் கிடைக்கிறது. இந்த வில்லின் அமைப்பில் இணைந்திருப்பது எது என்று ஆராய்ந்தால் அதுதான் வீரம் என்று பொருண்மை கிட்டுகின்றது.  ஆகவே விக்கிரமி என்பதற்கு வீரம் என்ற அகரவரிசைப் பொருள் கிட்டிவிடுகின்றது.

பண்டைக் காலத்தில் வில்லும் ஒரு சிறந்த போர்க்கருவியாய் இருந்தது. வில்லாளன் என்ற சொல்லும் இக்கருவிகளைப் பயன்படுத்திய வீரர்களின் மறப்பண்பினைப் போற்றி எழுந்த சொல்தான். இதையே விக்கிரமி என்ற சொல்லும் எடுத்தியம்புகின்றது.

சொற்புணர்ச்சித் திரிபின் காரணமாக விக்கிரமி என்ற சொல் அவ்வளவு தெளிவாகத் தன்னை அடையாளம் காட்டிக்கொள்வதில்லை.

வில்லுக்கும் விக்கிரமிக்கும் உள்ள தொடர்பினைக் கண்டீர்கள்.

இதில் விற்கு என்பது விக்கு(இரு) என்று வந்தது முறையாக வந்த திரிபுதான். விற்கு என்பது விக்கு என்று வருவது பேச்சுவழக்குத் திரிபுபோல் தோன்றலாம். நல்+கீரன் என்பது நக்கீரன் என்று வர, இந்தவகைத் திரிபுகள் இல்லை என்று கூறிவிட முடியாது. நல் என்பது ந என்று கடைக்குறையானது என்றால் அதுவேபோல் வில் என்பது வி என்று கடைக்குறையாகலாம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை வழங்கப்படுகிறது.



சனி, 12 ஜூலை, 2025

நாள் தினம்

  இன்று நாள் தினம் என்ற சொற்களை ஆய்வு செய்வோம்.

நாள் என்ற  சொல் நள் என்ற அடி யிலிருந்து வருகிறது. முத னிலை நீண்டு திரிவதன் மூலம் இச் சொல் அமைகிற து.

அதாவது   நள் > நாள் .   நள் என்பதன்  பொருள் "நடு"  என்பதும் "நாள்" என்பதும் ஆகும்.  ஒரு விடியலுக்கும் இன்னொரு விடியலுக்கும் நடுவிலிருப்பதால்  இது பொருத்தம் ஆகிறது  

நள் > நடு :  இதற்கு "இடைப்பட்டது"  என்ற பொருள் உள்ளதனை "நள்ளிரவு" என்பதில் நள் என்பதற்கு உள்ள பொருளைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

 தினம் எனபது தமிழன்று என்பர் எனினும் இதுவும் தமிழச் சொல்லே என்று ஆசிரியர் பிறர் கூறுவர்.  தினம் என்பது தீ என்பதிலிருந்து  திரிந்தமை  இதற்குக் காரணம்.  தீ + இன் + அம் > தி + ன் + அம்> தினம் என்று முதனிலை குறுகுதல் வா> வந்தான் என்று பகுதி குறுகுதல் கொண்டு  அறிக.  இனி, சா + அம் > சவம் என்பதனாலும் தெளியலாம்.  இவை [ தினம் ] ஆசிரியர் பிறர் அறிந்து கூறியவை.   

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

இதை நீங்கள் பிறருடன் பகிர்ந்து கொள்ளலாம்.

 





FOR YOUR KIND ATTENTION PLEASE


If you enter compose mode please do not make changes.


You may share this post with others through any social media. 


நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 


இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். 





அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

உங்கள் அன்பான கவனத்திற்கு



FOR YOUR KIND ATTENTION PLEASE

If you enter compose mode please do not make changes.

You may share this post with others through any social media.

நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 

இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். 


செட்டியார் சிறஷ்டார்

 இந்தச் சொல்லை இன்று பார்ப்போம்.

செட்டியார்கள் என்போர், வணிகத்தின் மூலம் அரசனிடம் மிக்க மதிப்பு பெற்றவர்கள் ஆயினர்.  குடிமக்களில் மிக்கச் சிறப்புடையோர் செட்டியார்கள்.

சிறப்பு என்ற சொல்லில் உள்ள சிற என்ற சொல்லிலிருந்தே அவர்களுக்குப் பெயர் அமைந்திருக்கலாம். சிறப்புற்றார் >சிறற்றார்>  சிறஷ்டார் என்று வடமாநிலங்களில் பெயர் உண்டாகிற்று/

ஆனால்  எட்டிப்பூ அணிவித்து உயர்த்தப்பெற்றதால்,  எட்டி> செட்டி என்று உண்டானது என்பது தேவநேயப்பாவாணர்  ஆய்வு 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிவுரிமை  உடையது.