வியாழன், 8 ஆகஸ்ட், 2024

தினகரன் என்ற சொல்லின் ஆக்கம்

 தினகரன் என்ற சொல்லை இன்று அறிவோம்.

தினகரன் என்ற சொல்லைத்  தமிழினின்று நோக்கி ஆய்வதன் மூலம் நாம் சில விளக்கங்களை அடையமுடியும்.   சூரியனின் அருகில் தீ எரிந்துகொண்டிருக்கிறது என்பதைப் பண்டையரும் அறிந்திருந்தனர். அவர்கள் சொல்லை இப்படிப் படைத்தனர்:

தீ + இன் + அகு  + அரு + அன்.

தீயின்   அங்கு  அருகில் அவன் உள்ளான்.  

சொல்லின் பொருட் செலவை ஒட்டியே வாக்கியம் அமைக்கப்படுகிறது.

தீ என்பது தி என்று குறுகும். தா என்ற ஏவல் வினை வினைமுற்று ஆகின் தருகிறான் என்று குறுகுதல் காண்க. இன் என்பது இகரம் அ கு என்ற இரண்டில் கு என்பது அகரத்துடன் இணைந்து ககரம் ஆகும்.

இதுபோன்ற திரிபுகட்கு முன்னர் பெயருக்குப் பெயரே எடுத்துக்காட்டிக் குறுகுதல் நிலைநாட்டப் பட்டது என்றாலும் வினைச்சொற்களின் குறுக்கம் இதை இன்னும் தெளிவாக மக்களுக்குக் காட்டவல்லவை.

\சூரியன்<  சூடியன் ( சூட்டியன்)  என்பதும்  டகர ஒற்று இழந்து சூடியன் என்பதில் டி என்பது  ரி ஆகிற்று.

இஃது வாக்கிய நிலைமொழி வருமொழிகளின் ஏற்படும் புணர்ச்சி அன்றாதலின் டகர ஒற்று தோன்றுமா பின் மறையுமா என்பது தேவையற்றது என்பதே சரியாகும். இதில் டகர ஒற்று தோன்றவேண்டாம்.

நெருப்பும்  சூடும் சூரியனிலிருந்து வருபவை என்று பண்டை மக்கள் அறிந்திருந்தனர்.

எனவே தினம் என்பதும் தீ இன் அம் என்ற பகவுகளின்   புணர்வே ஆகும். இதைப் பிறரும் கூறியுள்ளனர்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்



அசுவம் என்ற குதிரை

 குதிரை என்ற சொல் அது குதித்துக் குதித்து முன்செல்லும் ஒரு விலங்கு என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. அசுவம் என்பது இதே கருத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த சொல்லே ஆகும்.

அசுவம் என்பதைப் பலவாறாகப் பிரித்துக் காட்டலாம் என்றாலும் , இப்போது அதைச் சுருக்கமாக இங்குக் காட்டுவோம்.

குதிரையின் அசைவு, குதித்து எழுதலும் பின் எழுநிலையினிAன்று விழுதலும் (கீழிறங்கி முன்னிருந்த மட்டத்திற்கு வருவதும் ) பின்னர் மீண்டும் எழுதலும் இவ்வாறு அது முன் செல்கிறது. இதைத்தான் குதி என்ற சொல்லும் காட்டுகிறது.

அசை, உ, அம் என்ற மூன்று சிறுசொற்கள் அசுவத்தில் உள்ளன.

அசு + ஐ > அசை.   அசு என்பது அடிச்சொல்.

அசை உ என்ற இரண்டு கூறாமல்  அ ஐ உ  என்றும் கூறிவிளக்கலாம். இதற்குக் காரணி,  அய் + உ  ( ஐ உ) இரண்டும் போதுமானது.

அய்  -  எழுந்து      உ  -  முன் செல்லுதல்.

எழுந்து என்றால் உடலை மேலே எழுப்பித்து என்பது.

அசு என்பது வந்தவுடன் அம் சேர்த்துச் சொல் அமைகிறது.

எப்படியெல்லாம் பார்த்தாலும், அசைந்து முன் செல்வதே குதிரை. அய் என்பதை மட்டும் எடுத்துக்கொண்டால்,   அய் உ > அயு> அசு என்று முன் சொல்லும் அடியே வந்துவிடும்.

அசுவம் என்பது தமிழ்ச் சுட்டடிகளைக் காட்டுவதால் சமஸ்கிருதம் என்ற பூசைமொழி தமிழ்ச்சொல்லமைபைப் பின்பற்றியது ஆகும்.

ய் என்பதை இயைதல் குறிக்கும்.  இ ய் ஐ . இது குறுக்கப்பெற்றது.

அசுவம் என்ற சொல் அச்சுவம் என்றும் வழங்கியதாக நூல்கள் சொல்லும்,

ஐ(அய்) என்பதே மூலவடியாக இருப்பதால் அச்சுவம் என்பதை இடைவிரியாகக் கொள்ளலாம். இதைப் பின் ஆய்வு செய்வோம்.

அஸ்வம் என்பது பின் விரிப்பு ஆகும். சு என்பது ஸ் என்று மெலிப்பு ஏற்றப்பட்டது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.


செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024

மெட்டி இடுதல்

 மெட்டி இடுதல் என்ற இருசொற்களின் புணர்வில் யகர உடம்படுமெய் வந்து இருசொற்களும் ஒரு சொன்னீர்மை  எய்துதல் வேண்டும்.  இது "மெட்டியிடுதல்" என்று வரும்.  இது தமிழ்ப் புணரியலில் வரும் இயல்பான இலக்கண முடிபு ஆகும்.

மெட்டுதல் என்ற வினைச்சொல் எட்டி உதைத்தலைக் குறிக்கும்

மெட்டு-தல் meṭṭu-tal from University of Madras "Tamil lexicon" (p. 3335)

மெட்டு¹-தல் meṭṭu- , 5 v. tr. cf. நெட்டு-. [K. meṭṭu.] To spurn or push with the foot; காலால் தாக்குதல். நிகளத்தை மெட்டி மெட்டிப் பொடிபடுத்தி (பழனிப்பிள்ளைத். 12).


இந்தக் கால் தாக்குதலில் தாக்கப்படுவோனுக்கு  அதிக வலி ஏற்படுத்தற்பொருட்டே இரும்பு அல்லது பிற கனிமங்களால் செய்த வளையங்களைக் காலில் விரலில் அணிந்துகொண்டனர் என்பது தெளிவு. நாளடைவில் பெண்களின்  அணியாக  இது உருவெடுத்தது

மெட்டுதல் என்பதே வினைச்சொல் ஆதலின்,  இடுதல் என்பதை இச்சொல்லுடன் இணைக்கையில் மெட்டு(வினை)+ இடுதல் ?> மெட்டிடுதல்  என்று வருமென்பது முன்பிருந்த பேரகராதிப் பதிவு என்று தெரிகிறது. இதை இப்போது காணமுடியவில்லை. இப்போதுள்ள ஆசிரியர்கள் இதை  வழுவென்று கருதிவிட்டனர் போலும். இதைச் சிறிது ஆராயலாம், மெட்டு+ இ > மெட்டி என்பதால்,  மெட்டி இடுதல் என்பது உண்மையில் மெட்டுவதற்கு இடுதல் என்பதே. மெட்டுவதற்கு வளையம் ஓர் ஆயுதம். அதற்கு ஆயுதம் இடுதல் என்பதாம்.  மெடடி இடுதல் அல்லது மெட்டிடுதல் என்பன இச்சொல்லின் புணர்ச்சி.   இது ஒரு திரிபு  வரலாற்றினைக் காட்டவல்லது ஆகும்,

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்