By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
சனி, 25 ஆகஸ்ட், 2018
வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018
கவியை வாழ்த்தாத புவி
தாழிசைகள்:
அழுத்துகின்ற ஆசையினால் அலர்கள் தோறும்
அலுப்பென்று காட்டாமல் தாவும் வண்டு;
எழுத்தனைத்தும் இன்பமென்றே அயர்ச்சி இன்றி
எழில்கூட்டும் கைவினையை மேவும் பெண்டு;
தேனடைபோல் யானடைந்த தித்திப் பெல்லாம்
தேயத்தார் ஞாலத்தார் தெவிட்ட லின்றிக்
காணட்டும் என் கின்ற கரவா உள்ளம்
கவியாகிக் குவிகின்ற நவைதீர் வெள்ளம்.
குண்டைத்தான் வீசிடினும் குலைதல் இல்லாக்
கூடிவரும் நாடோறும் கோலத் திண்மை;
வண்டைப்போல் வாழ்நாளைக் கழிக்கும் தன்மை
வாழ்த்திசைகள் யாதுமின்றி ஓடும் உண்மை.
அரும்பொருள்:
அலர்கள் - மலர்கள்;
எழில் - அழகு;
தேனடை - தேன்`கூட்டின் அடை;
கரவா : ஒளிவு மறைவு இல்லாத;
நவைதீர் - குற்றமற்ற;
கோலம் - அழகு;
திண்மை - திடம்;
வாழ்த்திசைகள் - பல்வேறு வகை வாழ்த்துப் பாடல்கள்
யாதும் இன்றி - ( அவற்றில் ) ஒன்றும் இல்லாமல்.
அழுத்துகின்ற ஆசையினால் அலர்கள் தோறும்
அலுப்பென்று காட்டாமல் தாவும் வண்டு;
எழுத்தனைத்தும் இன்பமென்றே அயர்ச்சி இன்றி
எழில்கூட்டும் கைவினையை மேவும் பெண்டு;
தேனடைபோல் யானடைந்த தித்திப் பெல்லாம்
தேயத்தார் ஞாலத்தார் தெவிட்ட லின்றிக்
காணட்டும் என் கின்ற கரவா உள்ளம்
கவியாகிக் குவிகின்ற நவைதீர் வெள்ளம்.
குண்டைத்தான் வீசிடினும் குலைதல் இல்லாக்
கூடிவரும் நாடோறும் கோலத் திண்மை;
வண்டைப்போல் வாழ்நாளைக் கழிக்கும் தன்மை
வாழ்த்திசைகள் யாதுமின்றி ஓடும் உண்மை.
அரும்பொருள்:
அலர்கள் - மலர்கள்;
எழில் - அழகு;
தேனடை - தேன்`கூட்டின் அடை;
கரவா : ஒளிவு மறைவு இல்லாத;
நவைதீர் - குற்றமற்ற;
கோலம் - அழகு;
திண்மை - திடம்;
வாழ்த்திசைகள் - பல்வேறு வகை வாழ்த்துப் பாடல்கள்
யாதும் இன்றி - ( அவற்றில் ) ஒன்றும் இல்லாமல்.
எஜமான்
எஜமான் என்ற சொல் எப்படி அமைந்தது என்று உங்களுக்குத் தெரிந்தால்
இங்கு பின்னூட்டமிடலாம்.பின் நாம் உரையாடுவோம்.
இங்கு பின்னூட்டமிடலாம்.பின் நாம் உரையாடுவோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
