செவ்வாய், 27 ஜூன், 2017

சொப்பனம்

சொப்பனம் என்ற சொல்லுக்கு  யாமெழுதிய
 ஆய்வுரை இப்போது கிட்டவில்லை.

மனிதன் உறங்கும்போது, கனவு கண்டு, சில
சொற்களைப் பன்னுவதுண்டு.  இது நன்றாக
ஒலிப்பதற்கும் உளறுவதற்கும் இடைப்பட்ட
 ஒரு நிலையாகும்.   பன்னுதலாவது
பல முறை ஒன்றைத் தடுமாற்றத்துடன் ஒலிப்பது.

சொல்லைப் பன்னுதல் >  சொற் பன்னம் .  சொப்பனம்
என்று இது வந்தது.

இது பேச்சு வழக்கு. பின் திரிந்து பொருளும் சற்று மாறி,
"கனவு" என்ற பொதுப்பொருளில் வழங்கி வருகிறது.
இச்சொல்லுக்குச்   சிவஞானபோதம் முதலிய நூல்கள்
வேறு பொருளை உரைப்பதுண்டு. ஆனால் அது தத்துவப்
பொருளாகும்.

சொப்பனம் என்பது  சொற்பனம் என்றும் எழுதப்படும்.
 சொற்பனம் என்பதே முந்துவடிவம் ஆகும்.
ஸொப்பனம்,  ஸ்வப்பனம், ஸொப்னம், ஸ்வப்னம்
என்று பலவாறு உருக்கொள்ளும் சொல் இதுவாகும்.


------------------------------------------------------------------------

Notes:

1.
சொப்பனம் என்பது ஆன்மா கழுத்தில் நின்று புலனுணர்ச்சிகள்
(   acts of   sense organs   ) ஒடுங்கி எண்ணங்கள் (   mind  )   ஓடும் நிலை
 ( சிவஞானபோதம் விளக்கம் )
More at:
https://sivamaalaa.blogspot.sg/2015/12/4.html.






அதிபர் டிரம்ப் President Trump

விருந்தாளி மோடியையே  விரிந்த  அன்பில்
மிகுந்தகை குலுக்கலுடன் புரிந்து  கொண்டார்;
திருந்தாத தீவிரத்தால் தெண்மை இல்லாத்
திரிபுள்ளம் கொண்டோரை இறுகக் கட்டும்
பெருந்தோதில் ஈடுபாடு பகிர்ந்து கொண்டார்;
அருந்துவதில் அவர்வேறு இவரோ வேறே
இருந்தாலும் குறையாதும் பொருந்தி டாமல்;
இவரிந்தப்  பார்ப்பணியை   ஏற்பச் செய்வார்.




ஞாயிறு, 25 ஜூன், 2017

குள் என்பதிலிருந்தே அமைந்த இன்னொரு கருத்து


குள் என்னும் அடிச்சொல்லிருந்து குண்டலம் ஈறாகப் பலசொற்கள் அமைந்திருத்தலை முன் இரு இடுகைகளில் கண்டோம்.  இப்போது குள் என்பதிலிருந்தே அமைந்த இன்னொரு கருத்து அளாவிய
சில சொற்களைக் காண்போம்.

குள் என்பது நீட்டக் குறைவையும் குறிக்கும்.

குள் >  குள்+து  =  குட்டு.

குட்டு என்பது இரகசியம் என்று பொருள்படும். அகத்துள் இருந்து வெளிப்படாததே இரகசியம். (இரு+ அக(ம்) + சி+ அம்).  இதில் சி, அம் என்பன விகுதிகள். இனிக் குட்டு என்பதென்ன எனில், நீளக் குறைவினால்  வெளிவராது உள்ளடங்கி  இருக்கும் விடயம் ஆகும்.  இது மிகவும்
எளிமையானதும் சற்று நகைச்சுவையானதுமாகும் ஆகும்.நீட்டமானால் வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும்.  நீட்டக்  குறைவினால் வெளிவராது உள்ளிருப்பது என்று பொருள்.  இது புலவன் புனைவு அன்று. சிற்றூரான் சொல்லும் கருத்து.

குள் > குட்டு + அம் = குட்டம்.

நோயின் காரணமாக, விரல்கள் கை கால்கள் குட்டை ஆகி விடுகின்ற ஒரு நோய்.  இது பின்பு வேறு மொழிகளில் "குஷ்டம்" என்று மலர்ச்சி அடைந்தது.

குள் > குள்+து = குட்டு+ ஐ  = குட்டை

இங்கு து,  ஐ என்ற இரு விகுதிகள் சேர்ந்தன.  குறுஞ்சொற்கள் பின் ஒட்டிச் சொல் மிகுவதே விகுதி.   மிகுதி > விகுதி. ( விகுருதி அன்று)   ம-வ போலி.

குள் > குட்டு > குட்டி  (குட்டு+ இ ).

இளம் விலங்குகள் உயரமும் நீளமும் குறைந்தவை.

குள் > குள்+து+ ஐ = குட்டை.    (நீட்டக் குறைவு).