திங்கள், 27 மார்ச், 2017

தவளையும் தபசியும். they escape.......

ததவளையும் தபசியும்.

பகரத்துக்கு வகரமும் வகரத்துக்குப் பகரமும் பலமொழிகளில் வருகின்றன.எனவே  தபசி என்பது தவசி என்றும் எழுதப்படும். இரண்டும்
ஒன்றுதான். தமிழுக்கென்று சில சிறப்பான திரிபுகள் உள்ளன. ஆனால்
பிறமொழிகளில் வரும் திரிபுகளும் தமிழிலும் வருகின்றன. இரண்டுமுண்டு. இதற்குக் காரணம் நாமும் மனிதர்கள்; பிறமொழியினரும்
மனிதர்கள். நாக்கு வாய் முதலியவற்றிலும் கருதத்தக்க வேறுபாடுகள் இல்லை. தேய்வைத் தோட்டத்தில் (ரப்பர் எஸ்டேட்) தமிழர்களுடன் வளர்ந்த சீனர் நன்றாகத் தமிழ்ப் பேசுகிறார். தொலைபேசியில் அவருடன்
பேசுகையில் அவர் தமிழரா, சீனரா என்று தெரிவதில்லை. எண்ணற்குரிய‌
வேறுபாடின்மையால் பல் திரிபுகளில் ஒற்றுமை இருப்பது வியப்புக்குரியதன்று .  இது கடன்கொண்டதுமன்று.  இருவேறிடத்தும்
இயல்பானது.

தபசி என்ற சொல்லின் முன்வடிவம் தவசி என்பதே. பின்வந்த மொழிகள் இச்சொல்லை "தப" என்று அவற்றுக்கு எளிதாக மாற்றிக்கொண்டன. ஆனால் இவ்வடிவமும் தமிழுக்கு ஏற்புடையதே. இது தாவுதல் என்ற வினைச்சொல்லினோடு தொடர்புடையது. ஒரு தவசி, ஏலாத உலக நடப்புகளைத் தாவி, அப்பால் செல்கின்றான். இந் நடப்புகளோடு சென்று வெற்றி கொள்ளாமல் தவிர்த்துவிடுகிறான்.  தாவு! தவிர்! இத் தவிரென்பதும் தொடர்புடைய சொல்லே என்றறிக. தாண்டுதல் என்பதும் தா என்றே தொடங்குகிறது. தாள் என்ற காலடி குறிக்கும் சொல்லும் "தா" என்றே தொடங்குகிறது. தாண்டுவதும் தாள்களினாலேயே  முடிகிறது. தாள்+ து  = தாண்டு ஆகிறது. தாவும்போது, தாண்டும்போது, தவசி என்போன் "தப்பி" விடுகிறான். உலகியல் நடவடிக்கைகளில் அவன்
பட்டுக்கொள்வதில்லை. தப்பு என்பதும் தாண்டுவதோடும் தாவுவதோடும் தொடர்புடையதே என்றறிக. தப்பு என்பது இடைக்குறைந்தால் தபு என்று
வரும். தப்புதல் > தபுதல் ஒன்றே என்பதறிக.  தபுதாரம்:  தாரம் இழப்பு. மனைவியை இழந்த நிலை. இது தொல்காப்பியச் சொல்.

தவசியைப் போல் தவளையும் தாண்டியே செல்கிறது. இடைப்பட்ட மண்ணில் தடையொன்று இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனக்குள்ள‌
இயல்பான முற்செலவு முயற்சியால் தாவிவிடுகிறது; தாண்டிவிடுகிறது.

இவ்விடையத்தில் தவளையும் தபசியும் ஒன்றாகின்றனர். இருசொற்களும்
தாவுதல் அடிப்படையில் அமைந்தன.

தாவு > தாவு+ சி =  தவசி.
சி என்பது ஒரு தொழிற்பெயர் விகுதி.

வேய்தல் : வேய்+சி > வேசி. யகர ஒற்று மறைவு.
காய்தல் :  காய்+ சி + இன்+ இ = காய்சினி > காசினி.

இவை சி விகுதி இறுதியும் இடையும் வந்த சொற்கள்.  இவைபோலுமே தவசி  என்பதிலும் சி  வந்துள்ளது.

இனி, தா என்ற நெடில் த என்று குறிலானதற்கு எடுத்துக்காட்டு:

சாவு + அம் = சவம்.
தாவு + அம் = தவம்.

தாவு = தப்பு. தப்பு> தபு > தபம் என்பதும் அம்முடிபு கொண்டதே.
இவை வேறல்ல. வேர்ச்சொல் ஒன்றானதால் எப்படிச் சென்றாலும்
அம்முடிபே தோன்றும்.

தாவு என்பது தவ்வு (தவ்வுதல்) என்றும் குறில்தொடக்கமாகும்.
தவ்வு > தவு > தவம்; தவ்வு> தவு > தபு > தபம்.
தவ்வு> தப்பு > தபு > தபம்!!

இடைக்குறைச் சொற்களாலும் பிறமொழிகளையும் வளப்படுத்திய மொழி
தமிழாகும்.

Some edit - paste repetitions seem to haunt us. We are looking into it.  If you find any appearing
on your screen, please give us time to rectify any error .









ஞாயிறு, 26 மார்ச், 2017

அம்மோகம்>

அமோகம் என்ற சொல் எங்ஙனம் அமைந்துள்ளது என்பதை அறிந்துகொள்வோம்.

அம் என்பது அழகு என்பதைப் பல இடுகைகளில் சொல்லிவிட்டபடியால் அதை மீண்டும் சொல்லவேண்டியதில்லை. எனினும் புதிய வாசிப்போருக்காக இதைக் கூறவேண்டியதாகிறது.

ஓகம் என்பது ஓங்குதல், அதாவது மிகுதி, உயர்வு முதலியன குறிப்பது
இதுவும் எளிதாக அமைந்ததே.

ஓங்கு  :  ஓங்குதல், தொழிற்பெயர்,

ஓங்கு >  ஓகு:  இது இடைக்குறை.  நடுவில் உள்ள ஙகர ஒற்று மறைந்தது,
ஓகு+ அம் =  ஓகம்,  மிகுதி, நிறைவு, உயர்வு குறிப்பது.

யோகம் என்ற சொல்லும் இதன்கண் பிறந்ததே ஆகும். ஓயனை> ஓசனை
யோசனை போல. ஆனை > யானை போல.
அது நிற்க.

அம்+ஓகம் = அமோகம் ஆனது.

அம்மோகம் என்று விரித்துப் புணர்த்தினாலும் பின் மகர மெய் மறைந்து
அமோகம் என்றே வரும். முயற்சிச்சிக்கனம். இடைக்குறை.

இதை அ+ மோகம் என்று பிரித்தல் பிழை ஆகும்.

Female baby names : KuRaL derived

அவிர்மதி (குறள் 1117)
தூவிதா ( குறள் 1120)
பணிமொழி (குறள் 1121)
நுதல்யா (> திருநுதல் குறள் 1123)
அமர்க்கண்ணி (குறள் 1125)
ஏமிதா ( ஏமம் - குறள் 1131)
மலரன்னா (மலர்+அன்னை, மலர், குறள் 1142) Also like a malar
ஒப்பிடுக: தம் +அன்னை, தமன்னை, தமன்னா)
மலர்மதி
அரிதாமணி (குறள் 1153) அரிதாகும் மணி என்பதன் சுருக்கம்.
உய்வினி (>உய்வு) குறள்1174
பசந்தி ( குறள்1188) பச்சை நிறம் தோற்றம்
தந்தவள்
இது வசந்தி என்பதனோடு மயங்கி நிற்கும் பெயர்.

நனவிதா ( குறள்1219)

மாலிகா (மாலை, குறள்1221)
இது பழைய பெயர் போலாகிவிட்டது.

போதிதா (போது = அரும்பு) குறள்1227

குழலினி. குழலிகா. குறள் 1228

மாயா குறள் 1230 இது பழைய பெயர்