புதன், 21 டிசம்பர், 2016

அழகான சுழியனிதே ஐயப்பா ‍‍

அழகான சுழியனிதே ஐயப்பா ‍‍===என்மேல்
அன்பாக அனுப்பிவைத்தாய் ஐயப்பா.
மெழுகாக உருகிப்பாடி ஐயப்பா === முடிவில்
மேலான சுவைவழங்கும் ஐயப்பா.

உளமார மக்கள்போற்றும்  ஐயப்பா === நீ
உலகோரைக் காக்கவேணும் ஐயப்பா;
தளமாகச் சபரிகொண்ட ஐயப்பா === நீ
தரவேண்டும் சமர்நிறுத்தம் ஐயப்பா.

இன்று ஐயப்ப பத்தர் தந்த சுழியன் உண்டபின் பாடியது 

திங்கள், 19 டிசம்பர், 2016

தமாஷ். how derived

தாம் மகிழ்வது நடந்தால் அதுவே கேளிக்கை. இதைத் தமாஷ்  என்றும்
சொல்வர்.

இது ஒரு கடுந்திரிபு ஆகும்.  பிறமொழி பேசுவோரால் திரித்து
அமைக்கப்பட்டது.  (உருது  பேசுவோரால் ).

தாம் மகிழ்  > தாமகிழ்.

இதில் மகி என்ற இரண்டெழுத்துக்கள் மா என்று நீண்டது.  பகுதி > பாதி
என்பதைப் பின்பற்றியது.

தா மா ழ் =  தாமாஷ் > தமாஷ்.

தா  > த   ஆனது.
மகி  >  மா ஆனது.
ழ் = ஷ் ஆனது.

தாம்மகிழ் என்பதன் உருவாக்கத்தை சுருங்கச் சொல்வதானால்:

முதலில் ழ் > ஷ் ஆக்கவும்.  ஒரு மகர ஒற்றை நீக்கவும்.

 தாமகிஷ்.

மகி என்பது ஒலி தட்டுப்படுவதுபோல் இருப்பதால், நீரொழுகுவது போல‌
ஆக்க:

தாமாஷ் ,   ( மகி > மா என்று மாறவேண்டும். )  ----->  தமாஷ் .

ஆக, சொல் படைக்கப்பட்டது.























கேளிக்கை.



கேளிக்கை

சில சொற்களில்  அகரத் தொடக்கமான சொல், ஏகாரத் தொடக்கமாகத் திரியலாம். அல்லது வேறு உயிரெழுத்தாகவும் திரியக்கூடும். இதைப் பல ஆண்டுகட்குமுன் யாம் தெரிவித்ததுண்டு.

இப்போது சில எடுத்துக்காட்டுகள்:

களிக்கை > கேளிக்கை.

இங்கு முன் நின்ற அகரம் ஏகாரமாயிற்று.

இதுபோன்று திரிந்தவற்றைக் கண்டுபிடித்துப் பட்டியலிடுங்கள்.
இது பற்றிய எம் முன் இடுகை அழிந்தது.