புதன், 23 நவம்பர், 2016

A stanza from Puram on pulavar vaRumai.

வளிநடந் தன்ன வாஅய்ச் செலல் இவுளியொடு
கொடிநுடங்கு மிசைய தேரினர் எனாஅக்,
கடல்கண் டன்ன ஒண்படைத் தானையொடு
மலைமாறு மலைக்குங் களிற்றினர் எனாஅ,
உரும்உடன் றன்ன உட்குவரு முரசமொடு
செருமேம் படூஉம் வென்றியர் எனாஅ,
மண்கெழு தானை, ஒண்பூண் வேந்தர்
வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே;
எம்மால் வியக்கப் படூஉ மோரே,
இடுமுள் படப்பை மறிமேய்ந்து ஒழிந்த
குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு,
புன்புல வரகின் சொன்றியொடு, பெறூஉம்,
சீறூர் மன்னர் ஆயினும், எம்வயின்
பாடறிந்து ஒழுகும் பண்பி னோரே;
மிகப்பேர் எவ்வம் உறினும், எனைத்தும்வறுமை 
உணர்ச்சி யில்லோர் உடைமை யுள்ளேம்;
நல்லறி வுடையோர் நல்குரவு
உள்ளுதும், பெரும! யாம், உவந்து நனி பெரிதே!

புறநானூறு 197,  கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்  பாடியது.
திணை: பாடாண், துறை: பரிசில் கடாநிலை

 சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனைப்  பாடியது

 

இவுளியொடு  ~ குதிரைகளுடன்;
வளி நடந்தன்ன வாஅய்ச் செலல்  - வீசும் கற்றினைப் போல் விரைந்து வழிச் செல்லுகின்ற;
கொடி நுடங்கு மிசைய தேரினர் எனாஅ    ~    கொடிகள்  மேலே ஆடிப் பறக்கும்  தேருடைய அரசர்கள்  என்றாலும்;
கடல் கண்டன்ன ஒண் படைத் தானையொடு  கடலைப் போன்ற தோற்றம் தருகின்ற ஒளி வீசும் படைக்கருவிகளையுடைய் படையுடன்;
மலைமாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ -   மலையை எதிர்க்கும் மலைபோன்ற  யானைகளை உடையோர் என்றாலும்; 
உரும் உடன்றன்ன உட்குவரு முரசமொடு        ` யாரும் அஞ்சுகின்ற இடிபோலும் போரிடும் பேரொலியைக் கிளப்புகின்ற  முரசுகளுடன்;  (உரும் ~ எண்ணத் தோன்றுகிற )
செருமேம் படூஉம் வென்றியர் எனாஅ  ~  படைத்திறன் காட்டும் வெற்றியுடையார்   என்றாலும்; 
மண் கெழு தானை ஒண் பூண் வேந்தர் வெண் குடைச் செல்வம் வியத்தலோ இலமே  ~     மண்ணாள்கின்ற படையுடைய அணிகள் பூட்டிய முடியரசரர்களின் வெண்கொற்றக் குடை காட்டும் செல்வச் செழிப்பினைக் கண்ணுற்று மலைத்து நிற்றலோ அது நம்மிடம் இல்லையே!
எம்மால் வியக்கப் படூஉ மோரே  -  அப்படியானால் யாங்கள் யாரைக் கண்டுதான் அசந்துபோவோம் என்று கேட்கிறீர்களா?   அது: 
 எம் வயின் பாடறிந்து ஒழுகும் பண்பினோரே  ~  எங்கள் வாழ்வின் உறுபவைகளை அறிந்து ஏற்றபடி எங்களைப் போற்றிக்கொள்ளும்  பெற்றியுடையாரையே யாங்கள் கண்டு மலைத்துப் போற்றி உயர்த்தி எண்ணி நிற்போம்;    அவர்கள்: -
இடு முள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த குறு நறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்று அடகு  ~ முள் அகற்றாது விடப்பட்ட  பின் தோட்டத்தில் செம்மறி ஆடு மேய்ந்து  மிஞ்சிக் கிடக்கும் வளமான  பறித்த இலைகள் ;
புன்புல வரகின் சொன்றியொடு பெறூஉம்  - புன்செய் நிலத்து வரகு  உணவோடு  கிட்டுகின்ற
சீறூர் மன்னர் ஆயினும்  -  ஒரு சிற்றூரின் ஆட்சியாளர் ஆனாலும்;
மிகப் பேர் எவ்வம் உறினும் எனைத்தும் உணர்ச்சியில்லோர் உடைமை உள்ளேம்  -  எத்துணை துன்பம் வந்தாலும் எம் பால் பற்றுணர்ச்சி இல்லாதவரின் பொருளை எண்ணிப்போகமாட்டோம்.
blocked by error ,messages.  will return after repair.

ஞாயிறு, 20 நவம்பர், 2016

நடப்பு , நிற்பு நிபுணத்துவம்

சில வேளைகளில்  சில காரியங்கள் நடக்கின்றன.  வேறு சில  வேளைகளில் அக்காரியங்கள் நிற்கின்றன. காரியங்கள் நடக்குங்கால் அவற்றை நடப்புகள்  என்கிறோம்.  அவை நிற்குங்கால் அவற்றை நிலை ,நிலைமை என்று குறிக்கிறோம்.  நாய், பூனை  மனிதன் ஏனை விலங்குகள் நடத்தலும் நிற்றலும் போல் காரியங்களும் நடக்கவும் நிற்கவும் செய்கின்றன . நடக்குங்கால்  நிற்குங்கால் என்று எழுதும்போதே காரியங்களுக்கும் கால் முளைத்து விட்டனவோ என்று எண்ணத்தோன்றுகிறது. (  கால் =  காலம் )  .ஆனால் எல்லா மொழிகளிலும் இதுபோன்ற சொற் பயன்பாடுகளும்  சொல்லாக்கங்களும் உள்ளன.  Situation  என்ற சொல்லைக் கேட்கும்போது காரியங்கள் உட்காருவதும் உண்டுபோலும்  என்று எண்ணத்  தோன்றுகிறதா ?   ஆனால் situare என்ற இலத்தீன்  சொல்  ஓரிடத்தில்  வைத்தல் , இடுதல் என்ற பொருளில்  situation என்ற சொல்லைப் பிறப்பித்தது.  Status என்பது  நிற்பது  stare  என்பதிலிருந்து வருவதால் அதை நிலை , நிலைமை என்று மொழி பெயர்த்தால் சொல் அமைப்புப்படி சரியாக இருக்கும் என்றாலும்  பொருந்துவதாகவும்  இருக்கவேண்டும். . Legal standing, standing in society  ஆகிய வழக்குகளிலிருந்து  என்ன உணர்கிறோம்.?

மலாய் மொழியில் நிலைமையைக் குறிக்க keadadaan என்பது வழங்குகிறது.ada
என்பது  இரு(த்தல்)  என்று பொருள்படும்.  keadadaan இருப்பு  என்பது சொல்லமைப்புப் பொருள் எனினும் அதை நிலை என்றே கூறவேண்டும்.
நிலைமை என்பதைக் குறிக்க பல சொற்களைச்  சீன  மொழி கையாளுகிறது. அவற்றுள்  இருக்கை  seat  场所 [chǎngsuǒ] {noun} என்பதும் ஒன்றாகும்.

நடப்பும்  நிலையும் தொடர்பு உள்ளவை.  இளைஞன்  ஒருவன் உவதி (யுவதி)(உவப்புத்  தருபவள் )  ஒருத்தியைக்  காதலிக்கும்போது  அது நடப்பு. காதல் மாறாமல் இருந்தால் அது நிலை அல்லது நிலைமை ஆகிவிடுகிறது.   மேலும் ஒரு மாற்றம் அடையாமல் காதல் நிற்கிறது.  நட  > நடப்பு.   நில் > நிலை.  நிலை + மை = நிலைமை.   நிலமை என்று பேச்சில் வந்தாலும் அதைப்  பிழை என்பார் தமிழாசிரியர்.  கவிதையில் ஏற்ற இடத்தில் எதுகை நோக்கி ஐகாரக் குறுக்கமாகக் கையாளலாம் என்றாலும் அது கவிஞன்  தீர்மானிப்பது.

நடப்பு, நிலை ,நிலைமை  என்பவற்றை  நடப்பு , நிற்பு  என்றும் சொல்லலாம்.
ஆனால் நிலை, நிலைமை  என்பவற்றை நிற்பு  எனல்  பேச்சு வழக்கில் இல்லை.  என்றாலும்  நிலை என்பது நிற்பு  என்பதே ஆகும்.

இனி நிபுணன் என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.    நிற்பு  எனற்பாலது
நிபு  என்று இடைக்குறைந்து இயலும்.   நிபு உணர்ந்தவரே  நிபுணர்.
நிபு + உணர் .  நிலை உணர்ந்தோர்.   உணர்வு குறித்த இச்சொல் அவ்வுணர்வு உடையோனைக்  குறித்தல்  ஆகுபெயர்.  நிபுணர் என்பதே  அர்  என்று முடிந்ததனால் அதன்மேல் இன்னோர்  -அர்  புணர்த்தப் படவில்லை.  அர்  இன்றியே  அர்  உள்ளதுபோல் இயன்று பணிவுப் பன்மைபோல்  பேச்சில்
வழங்கியது.

அதுபின்  நிபுண என்று செதுக்கப் பட்டு,  நிபுணன், நிபுணர்  என்று ஒருமை பன்மையாய்  இயன்றமை  உணர்க. நிற்பு  உணர்ந்தோனே நிபுணன்  ஆவான்.  நிபுண + அத்து + அம்  =  நிபுணத்துவம்.

 செந்தமிழ் இயற்கை கெடாமல் வரவேண்டின் நிற்புணர்நன் > நிபுணர்நன் என்று வந்திருக்கலாம்.  அப்படி வந்தாலும்  நாளடைவில்  ர், ந  என்ற அடர்வுகள்  தொலைந்து  நிபுணன் என்றே  திரிந்திருக்கும் .ர் , ந   தங்கி  ஆகப்போவது ஒன்றுமில்லை. சொல்லொழுக்குத் தடையே மிஞ்சும் .

சிலர்  நி + புண்  என்று பிரித்து,  பொருள் கூறுவர் . எனின்  புண் என்பது புண்ணியம் என்பதன் பகுதி.. மேலும் புண் எனற்பாலது  புள் என்பதன் திரிபு. புள்ளியம்  என்பதே புண்ணியம் என்று திரிந்தது. Something that is capable of
good points. இதிலும் நி  என்பது நில்  என்பதன் கடைக்குறைதான் . ஒரு நிபுணனுக்குப் புள்ளி கொடுப்பான் அவனினும் பெரியவன்  ஆதல்வேண்டும்.
சிலர் இதை விரும்பலாம் . எனினும் புண்ணியத்திற்குப் புள்ளி கொடுப்பான்
இறைவன் . நிபுணனுக்கு ?
புள்ளி கொடுப்போனே நிபுணன் ! பெறுவோன்  அல்லன் எனல் கூடும் .

நிபுணர் பலராதலும் உலகில் உண்டு.
  







சனி, 19 நவம்பர், 2016

செல் > ஜென்

நாமிருக்கும் இப் பூமியில் பிறந்தவுடன் இறந்துவிட்டால்  எடுத்த சென்மத்துக்கு ஒரு பொருளில்லாமல் போகிறது. நிறை அகவையுடன் வாழ்ந்து இருந்தாலே அது ஒரு சென்மம் என்று  சிறப்பிக்கப் படும். ஆகவே
இது ஒரு பயணம்  ஒரு செலவு  ஆகும். இறுதியில்  சென்றுவிடுகிறோம் .

ஆகவே  செல்லும் அம் > செல்லுமம் >  செல்மம்  >  சென்மம்  ஆகும்.

சென்மங்கள்  மாறி மாறி  வரும். இது இந்து மதத்தின் கொள்கை .நம்பாதவர் என்றால்  அவர் இறப்பில் முடிந்துபோகிறார்  அல்லது அப்படி நினைக்கிறார்.
ஒரு சென்மம் முடிந்து மறு  சென்மம் தொடங்குமுன்  அம்மாவின் கருப்பத் துள்    சென்று உயிர் புக்கு நிற்கிறது. புக்கு  =  புகுந்து .. கருவினுள் செல்வதாலும்  அது சென்மம்  ஆகிறது.

ஆகவே  ஆதிக்கருத்து  செல் என்பதே  ஆகும்.

செல் என்பதே  செ  > ஜ (ஜா ) என்று  ஏனை மொழிகளில் திரிந்தது.

இந்தோ ஐரோப்பியத்தில்  ஜென்  என்றே  இச்சொல் ஒலிக்கிறது

செல் >  ஜென் .   லகர னகரப்  போலி.

எல்லா வகையிலும் பொருத்தமான அடிச்சொல்  செல் என்பதே.

சினை  என்ற சொல்லும்  ஆய்விற்குரியது ஆகும் .