ஞாயிறு, 23 அக்டோபர், 2016

மரணமும் உடல் விறைப்பும்

ஒரு மனிதனோ அன்றி விலங்கோ இறந்து இயல்பான இயற்கைச் சூழ் நிலைகளில் ஏறத்தாழ நான்கு மணி நேரத்துக்குள் உடல் விறைப்பு ஏற்படுவதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இதனை ரிகோர் மார்ட்டிஸ்
 என்று  கூறுவர். பின்பு நேரம் செல்லச் செல்ல, அவ் வுடல் தளர்ந்து, பின்
அழுகிவிடத் தொடங்குகிறது.

இந்த இலத்தீன் தொடர்,மருத்துவத் துறையில் இறப்பு ஆய்வில் பயன்படுகிறது.

ரிக்கோர் மார்ட்டிஸ்:      

இறுகு  >  இறுகு ஊர் >  றுகூர்  >  rigor.


மரி தீர்  >   mortis

மரித்தல்  தீர்ந்ததும்  இறுகுதல்  ஊர்ந்தது .


ரகர  றகர  முதலாய சொற்கள் தம் இகர உகர  முதலெழுத்தை இழப்பவை .

இங்ஙனம் தமிழ்  இலத்தீனுக்குச் சொற்கொடை வழங்கியுள்ளது.

மரித்தல்  மடிதல்  என்பதன் திரிபு . இது முன் தந்த விளக்கம்.

மரணமும்  உடல்  விறைப்பும்

சனி, 22 அக்டோபர், 2016

சொல்: புரட்டாசி

பழைய நலமற்ற நிலைமைகளை மாற்றி, புதிய பற்றுக்கோட்டினைத்
தருவது புரட்டாசி  ஆகும்.

புரட்டிப் போடுவது என்ற பொருளில்  "புரட்டு"  என்ற சொல் வருகிறது.
புரட்டுவது  எனில் முழுதும் மாற்றிவைப்பது.

ஆசு என்பது பற்றுக்கோடு; ஆதரவு; சார்பு தருதல்.

இரண்டு சொற்களும் சேர்ந்து புரட்டாசி ஆயிற்று.  இறுதி இகரம்
விகுதியாகும்.

சகரத்துக்குத் தகரம் போலி யாதலின், புரட்டாதி எனவும் படும்.

இம்மாதம் விரத மாதமும்  ஆகும்.   விரதத்தினால் தீமைகள் விலகி நன்மை
உருவாகும்  என்பதும் மக்கள் நம்பிக்கை,

சொல்:  புரட்டாசி 

வெள்ளி, 21 அக்டோபர், 2016

சாறாயம் and arrack.


சாராயம் என்ற சொல்லை ஆய்ந்து முன் எழுதியுள்ளேன். எனினும்
அதற்குரிய இடுகையை இங்குக் காண இயலவில்லை.

அதை மீண்டும் பதிவு செய்வோம்.

சாராயம் என்பது உண்மையில் சாறாயம் ஆகும். பேச்சு வழக்குச்
சொல்லாகிய இதனை எழுத்தால் வரைந்தவர். றா என்ற எழுத்துக்குப்
பதிலாக ரா என்பதை இட்டு எழுதியதே இதில் கோளாறு ஆகும்.

என்றாலும், சார் என்பதிலிருந்தே சாறு என்ற சொல் தோன்றிற்று. ஒரு
காயைச் சார்ந்துள்ளதே அதன் சாறு ஆகும்.

ஆயம் என்பது ஆயது, ஆனது என்று பொருள்படும் ஒரு  பின்னொட்டு
ஆகும்.

சாறாயம் பல பொருள்களிலிருந்து எடுக்கப்படுகிறது. அரிசியிலிருந்து
எடுக்கப்படுவது உண்டு.

அராக் என்பதும் அர் : அரிசி;  ஆக் : ஆக்கு என்ற இரு சொற்களின்
சிதைவே ஆகும். இத்  தேறல்  பின் பிற பொருள்களினின்றும்   Molasses பெறப்பட்டது. இச்  சொல்லைப்
புனைந்தோர் திறமைசாலிகள்   ஆவார்.


சாற்றாயம் என்று வருதல் வேண்டுமன்றோ எனின், சொல்லமைப்பில்
இங்ஙனம் வருதல் கட்டாயமில்லை, இது சொற்கள் பல ஆய்ந்தபின்
அடைந்த தெளிவு ஆகும்.  அன்றியும் இடைக்குறை றகர ஒற்று எனினும்
ஆம்.

சாராயம் என்பது இவ்வாதத்தை ஒருவாறு போக்குவது ஆகும்.