வியாழன், 23 ஜூன், 2016

சமாளித்தல் - சொல் பொருள்

சமாளித்தல் என்ற சொல்லினைக் கூர்ந்து கவனிப்போம்.
இதைச் சமம் + ஆள் + இ என்று பிரிக்கவேண்டும்.

சமாளித்தல் என்றால் என்ன என்று கேட்டால், பதில் கூறுவது கடினமாகத் தோன்றுகிறது. ஆனால் அச் சொல்லை மூலங்களாகப் பிரித்துவிட்டால் எளிதில் பொருளைக் கூறிவிடலாம். வழக்குப் பொருளைக் கூறுவது எளிதாக இல்லாவிட்டாலும் சொல்லமைப்புப் பொருளை எளிதாகக் கூறிடுதல் இயலும்,

அது: சம ஆளாக நிற்றல் என்று பொருள்படும்.

சொல்லிறுதியில் வரும் இகரம் அதை வினைச்சொல்லாக்குகிறது. இது பழங்காலம் தொட்டே தமிழ் மொழியில் பயன்படுத்தப் பட்டுப் பெயர்ச் சொற்களை வினைகளாக்குவதற்குப் புழங்கப் பட்டுள்ளமை காணலாம்.

-------------------------------------


எடுத்துக்காட்டுகள் சில காண்போம்:

வழு > வழி > வழிதல், வழித்தல்.
கொழு ? கொழி > கொழித்தல்.
நெள் > நெளி > நெளிதல், நெளித்தல்.
படு > படி > படிதல் : மனிதன் பாயில் படுப்பதுபோலவே தூசு போய்
ஓரிட‌த்தல் படுத்துக்கொள்கிறது. ஆகவே தூசு படிகிறது என்கிறோம்.
படு > படி > படித்தல். கண்ணின் ஒளி அல்லது ஒளிபெறு தன்மையானது ஏட்டுடன் இனைப்பை ஏற்படுத்திக்கொண்டு பார்வையைப் படியச் செய்கிறது. இதை விளக்கத் தெரியாத அகரவரிசைக் காரனொருவன் படி என்பது தமிழன்று என்று எழுதினான். ஆராய்ச்சியின்மையே இதற்குக் காரணம்.

அக்கு சிந்தா பாடா மூ என்ற மலாய் வாக்கியத்தில், பாடா என்பதென்ன? படிதலேயாம். என் காதல் உன்மேல் படிகிறது, படுகிறது என்று தெளிவிக்கலாம். படு> படி, படு > பாடு என்பது
எத்துணை அழகிய தமிழ்.


தமிழிலும் படு என்பது துணைவினையாகப் பயன்படுவதாகும். செய்யப்படுதல் , சுடப்பட்டார், கூறப்பட்டது என்பன காண்க.

இப்போது சமாளித்தலுக்குத் திரும்புவோம். இறுதி இகரமே வினைச்சொல் ஆக்கியது. இவ்விகரமும் தமிழில் தொன்றுதொட்டு
பயன்பாடு கண்டதே ஆகும். இதுவே சமாளித்தலிலும் பயன்பட்டுள்ளது.

இன்னொரு சொல் ஓக்காளித்தல். ஓக்காளம் என்பது வினையாகும்
போது ஓக்காளித்தல் ஆகும். இகரம் வந்து வினைச்சொல் ஆனது.

சமம் என்றால் ஒன்றுக்கு மற்றொன்று இணையாக அல்லது ஒப்பாக‌
அமைந்தது என்பது. அமை> சமை > சம > சமம் ‍ சமன். அல்லது
அமை > அம > சம> சமம்.


தமிழிலும் படு என்பது துணைவினையாகப் பயன்படுவதாகும். செய்யப்படுதல் , சுடப்பட்டார், கூறப்பட்டது என்பன காண்க.

இப்போது சமாளித்தலுக்குத் திரும்புவோம். இறுதி இகரமே வினைச்சொல் ஆக்கியது. இவ்விகரமும் தமிழில் தொன்றுதொட்டு
பயன்பாடு கண்டதே ஆகும். இதுவே சமாளித்தலிலும் பயன்பட்டுள்ளது.

இன்னொரு சொல் ஓக்காளித்தல். ஓக்காளம் என்பது வினையாகும்
போது ஓக்காளித்தல் ஆகும். இகரம் வந்து வினைச்சொல் ஆனது.

சமம் என்றால் ஒன்றுக்கு மற்றொன்று இணையாக அல்லது ஒப்பாக‌
அமைந்தது என்பது. ஒத்தமைவு! அமை> சமை > சம > சமம் ‍ சமன். அல்லது அமை > அம > சம> சமம். இதற்கு அது அமையும். இதற்கு அது சமையும். இதற்கு அது சமம்.


அகரத்தில் தொடங்கும் சொல் சகரமாதல் பெருவரவு. முன் எடுத்துக்காட்டுகளைப் படித்தறிக. Pl see previous posts. அமை என்பதில் உள்ள இறுதி ஐ அகரமாவது ஐகாரக் குறுக்கம். உதை என்பது ஒத என்று பேச்சில் வரும். ஐகாரம் அகரமாவது ஏனைத் திராவிட மொழிகளிலும் ஏராளம்.

நவ -கடலையும் கடந்துவிட்ட சொல்

நவீனமென்ற சொல். தமிழில் வழங்குகிறது. நவீனம் என்பது புதுமை. நவீனம் என்ற பதம் (பொருளைப் பதிந்துள்ளது பதம்) ஏனை மொழிகளி லும் பரவியுள்ளது. இச்சொல்லை உலகுக்கு அளித்த பெருமை தமிழனது ஆகும். நியோ, நியூ என்பனவரை சென்றிருக்கின்றது என்றால் இஃதோர் ஆற்றல் மிக்க, ஆறுமலைகளையும் கடந்து நிற்கின்ற, கடத்தற்கரிய கடலையும் கடந்துவிட்ட சொல் என்றே கொண்டாடவேண்டும்.


அகர முதலவான சொற்கள், பிறமொழிகளில் இகர ஓகார முன்னிலையாகத் தொடங்குவது நீங்கள் கவனித்திருக்கலாம்.

நவ >       நோவல்டி   ( நாவல்டி )  novelty      
நவ > நோவோ.  trial de novo
நய > நியூ           new
நய > நியோ.        neo-colonialism

ஆனால் மேலைநாட்டுப் பண்டிதன்மார் இதை நவ்  (நோவா ) என்பதனோடுமட்டும் தொடர்புபடுத்துவதுண்டு.   எனின்  வகரமும் யகரமும்  உடம்படு மெய்களே; நய நவ எல்லாம் ஒன்றுதான்.

நல் என்பதினின்றே இவை பிறந்தன வென்பதை முன் சுட்டிக்காட்டி 
இருந்தோம்.


அதை மறுநோக்குச் செய்துகொள்ளுங்கள்.

அதன்படி, நன்மைக் கருத்தில் புதுமைக் கருத்து விளைந்தது.

இப்போது நவீனம் என்ற சொல்:

நவ = புதுமை.

நவ _+ ஈனு + அம் = நவீனம், அதாவது புதுமை பிறத்தல்.
ஈனுதலாவது பிறப்பித்தல்.

நவ என்பதன் இறுதி அகரமும் ஈனு என்பதன் இறுதி உகரமும் கெட்டன,

இப்படி நன்மை என்னும் சொல்லிலிருந்து உலகம் நன்மை அடைந்தது.



சங்கிலி யாது

இப்போது சங்கிலி என்ற சொல்ல்லைக்  கவனிப்போம்.

மிகப் பழங்காலத்து மக்கள் சங்குகளை நூலிலோ கயிற்றிலோ  கோத்துக் கழுத்தில் அணிந்துகொண்டனர். பின்பு சங்கு கோக்கும் பழக்கம் போய், சற்று முன்னேறிச்  சங்கு இல்லாத பிற கழுத்தணிகள் வந்தன.  இவற்றுக்கும் சங்கணி என்றே பெயர் வைத்துக்கொண்   டிருந்திருக்கலாம். சங்கு அதில் இல்லாமையாலும் சங்கு என்ற சொல் வழக்கி லிருந்துகொண்டு சங்கை நினைவு படுத்தி உறுத்திக்கொண்டிருந்ததாலும்
வேறு  பெயரிட முந்தாமல்,  "சங்கிலி"  என்றே  குறித்தனர்.

சங்கு +இல் +இ = சங்கிலி.  சங்கு இல்லாத அணி.  சங்கு இல்லாமற் போன அணி கண்டும் சிலர் கவலை கொண்டிருக்கலாம்  மஞ்சட் கயிற்றில் மாட்டாத தாலி கண்டு சிலர் கவல்வது போலும்.

கோயில் தொழுகை நடைமுறைகளில் சங்கிற்கு இன்றும் பெரும் பங்கு
இருக்கிறது.   பெருமிதத்துக்கு உரிய நேரங்களில் சங்கு ஊதுவதும், மணி காட்ட சங்கு ஊதுவதும் வழக்கம்.  சங்கில் பல, பெரியன, சிறியன,  நடுத்தரத்தன என்று வேறுபாடு காணலாம். சங்கிலிருந்து எழும் நாதம்  சங்க நாதம்.

தமிழர் முன் அறிந்தது நாவிலிருந்து எழும் நாதம்.  (நா> நாதம் )  தம் நாவில் எழுவது,  பிற பின் வந்தன.  வாயிலிருந்து வருவது வாயு ஆனதுபோல்  நாவில் எழுவது நாதம்.  இவற்றுள் வாய், நா என்பன‌
பின் தம் பொருள்குன்றின.

தங்கு என்பதினின்று சங்கு என்பது வந்தது,    த‍ > ச திரிபு.  ஓர் உயிர் தங்கும் கூடு.

இப்போது சங்கிலி யாது என்று புரிந்துகொண்டிருக்கலாம்.