சனி, 14 மே, 2016

தானுண்டு தன்வேலை ......LIVING ALONE1

தானுண்டு தன்வேலை
உண்டென்றே இருக்காமல்
 தாய்தந்தை  உடன்பிறந்தார்
 நட்புடையோர் எல்லவரும்
வீணன்று  விழைந்து நீர்
வீட்டிலும்  வெளியிலும்
எதிர்கொண்டு பேசலோடு
 நலமுசாவி  மகிழல்தானே

இன்றிருப்பார் இனிநாளை
 இல்லையென்றே ஆகிடுவார்
எங்குசென்று  தேடிடுவோம்
இப்படியாய் உலகுசெலும்
என்றுகாண்பேன்  என்றுகாண்பேன்
என்றழுதே இளைத்திடினும்
எந்நாளும் வருவதில்லை
என்றிடுதல் நின்றவுண்மை;


நன்றுநன்று நாளிருக்கும்
இதுபோதே அவர்களையே
சென்றுகண்டு சேர்ந்திருந்து
கையமர்த்திப் பிரிந்துவந்தால்
வென்றுநித்தல் விழைந்தினிய
வாழ்க்கைஇனி  உமக்குவரும்
வெறிதுதனி  இருப்படைதல்
வேண்டாமே கலந்துறைவீர்,


மாண்புமிகு  பிரதமரே  சொல்கிறார்:

Spend time with family while they're still alive - Prime Minister Najib

https://sg.news.yahoo.com/spend-time-family-while-theyre-073124129.html?nhp=1


உண்மை உண்மை.  பிரதமரைப் பாராட்டுகிறோம்.

.

மனிதமுக ஆட்டுக் குட்டி

மனிதமுகம் தன்னுடனோர் ஆட்டுக் குட்டி
மனிதர்தமை வியப்புறுத்திப் பிறந்தி றக்க‌
அணுக்களுக்குள் ஆளைப்போல் அரத்த சாரம்
அதற்குண்டோ அறிவியலார் அதனை ஆய‌
கணக்குகளில் சாரமிதோ வேறொன் றென்று
கண்டறிந்து கழறினரே கருத்துக் கொண்டு;
தணிவிலதாம் தார்வினியத் தெரிவி  யல்காண்
தான்மீண்டும் வன்புடனே நிமிர்ந்த தன்றே!

ஆளைப்போல்  -  மனிதனைப்போல் 
அரத்த சாரம் -  இரத்தத்தின் சாரம் (DNA)   அர்த்தம் = இரத்தம் .
கணக்குகளில் - in their DNA calculations
தணிவிலதாம் -   பாதிக்கப் படாததாம் 
தார்வினியம் -  Darwinism 
வன்புடனே - பலமாக 
தெரிவியல் -theory

விரிவாகத் தெரிந்துகொள்ள:


No human DNA found in kid with human-like features, says Vet Department



https://sg.news.yahoo.com/no-human-dna-found-kid-110219079.html?nhp=1


வெள்ளி, 13 மே, 2016

சுவாசம் என்பது

சுவாசம் என்ற சொல் நன்கு ஆராய்வதற்குரியது ஆகும்.

இதன் பிற்பாதியாகிய வாசம் என்பதை முதலில் கவனிப்போம்.
இந்தச் சொல், வாய் என்ற சொல்லில் இருந்து திரிந்து அமைகின்றது.

வாய் > வாயம்  >   வாசம் என்று இச்சொல்  அமையும்/.

வாய் என்பது பல்பொருள் ஒருசொல்.  வாயில் >  வாசல் என்ற சொல்லில்  அது வீட்டினுள் அல்லது  அதுபோன்ற இடத்தினுள் செல்லுதற்கும் வெளியில் வருதற்கும் உள்ள வழியைக் குறித்தது.

வாய்க்கால், கால்வாய் என்பவற்றுள் அது நீரோடு வழியைக் குறித்தது.  வருவாய் என்ற சொல்லில் அது பொருள்வரவு என்று  நாம் அறிகின்றோம்.

வாய் என்பது உண்மையில் இடம் என்று பொருள்படுவதாகும்.

எனவே சுவாசம் என்ற சொல்லில்,  வாசம் என்பது  நெடிதாக வரும் வழி என்று பொருள்படும்.  மூக்கு என்னும் மூச்சுக் கருவி வாயினுடன் தொடர்பு உடையது  என்பதால் அதுவும் வாயின் ஒருபகுதியாகக் கருதப்படக் கூடும், காரணம் மூச்சு என்பது வாயினாலும் இயங்கககூடியதாகும்.

இச்சொல்லுடன் சு என்பது முன் நிற்கிறது. மூச்சு என்பது  உள்ளும் வெளியிலுமாக சுழற்சி முறையில் நடைபெறுவது.  இது குறிக்கும் தமிழ்ச்சொல் சுலவு என்பது ஆகும்/ இதன் தலையெழுத்து: சு என்பது/  இது வாசம் என்ற சொல்லின் முன் நிற்கிறது.

ஆகவே சுவாசம் என்பது  சுழற்சியாக  நடைபெறும்  மூச்சைக் குறித்தது.  காற்று  என்று பொருள்படும் வாயு என்ற சொல்லும் வாய் என்பதன் அடியாக அமைக்கப்பட்டதே ஆகும்.

முடிவாக,  சுவாசம் என்பது தமிழினின்று அமைந்த புனைவுச்சொல் என்பது நன்கு தெரிகிறது. முழுச்  சொற்களை  முன்னொட்டுக்களாக  ஆக்குகையில்
முதலெழுத்துக்களை மட்டும் நிறுத்திச் சொல் அமைப்பது ஒரு கலையாகும்.
இந்த முறையைத் தமிழும் கையாண்டு உள்ளது.     உதாரணம்:  வடு :>  சுவடு.
பின் வந்தோர், இவற்றிலிருந்து கற்றுக்கொண்டனர்.

அறிந்து மகிழ்க/

The first draft on this subject was wiped out by a remote application.  Then this was rewritten.