ஞாயிறு, 8 மே, 2016

உமையிடம் வேண்டுதல்

தட்டச்சுச் செய்பொழுதில்
ஒட்டிவரு பிழைகளையே
வெட்டிவிட எண்ணுவதை
முட்டுபல கட்டையிடும்
மென்பொருளைப் பொதிந்துவைக்கும்
ஒண்ணுலவி இணைப்புளதே...
இதையழிக்கும் மின் துடைப்பம்
விதைத்துவைத்தும் கணினியிலே
சிதைத்துவிடும் செலவுகளும்
அதைவென்றும் ஆங்குவரும்.
புகுகடவுச் சொல்தொட்டு
நகுபிசகு புகுத்துவழி
மிகுஅறிவால் கண்டுசிலர்
வெகுகுழப்பம் விளைத்திடுவார்.
நம்விரல்கள் நலிவடையக்
கம்முபுகர் விம்மிவிடும்

எனவாங்கு
எழுதுவ அனைத்தும் இணையில் விழிப்புடன்
பழுதினி வாராது காக்கவுன்
விழுமிய பேரரருள் வேண்டுவம் உமையே


======================================================

அருஞ்சொற்கள்:

தொட்டு -=  தோண்டி எடுத்து.
நகுபிசகு  -=  நகைப்புத்தரும்   பிழைகள் 
ஒண்ணுலவி இணைப்புளதே. this refers to browser add-ons
மின் துடைப்பம் -  anti virus
எழுதுவ =  எழுதுபவை.
கம்முபுகர் - மங்கச் செய்யும் பிழைகள் 
விம்மிவிடும்  -   கூடிவிடும்.
.

பஜி >பஜன் also source of word Gaja

பஜி என்னும் சொல்.
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍=======================

பஜி என்பது கேட்பதற்கு இனிய சொல். ஆனால் தமிழன்று. முருகனைப் பஜி, கண்ணனைப் பஜி, முக்கண்ணன் மகனைப் பஜி என்று வருங்கால் இன்னோசை பிறக்கிறது. பண்டைத் தமிழருக்கு இந்த ஒலியும் இவை போல்வன பிறவும் ஏன் பிடிக்கவில்லை என்று தெரியவில்லை. ஒலியில் என்ன இருக்கிறது?  ஓரெழுத்தை ஒலித்து, அதைக் கேட்பவர் அதன் பொருளைப் புரிந்துகொண்டு அதற்கான  வேலை நடைபெற்றுவிடுமானால்  அவ்வளவு தானே வேண்டியதெல்லாம். உயர்வான ஒலி, தாழ்வான ஒலி என்று எவையுமில்லை.

இருந்தாலும் தொன்மைக்குக்  காப்பு (காத்தல், பாதுகாப்பு ) அளிக்க விரும்பி, தொல்காப்பியனார் இயற்றிய இலக்கணத்தில் சில ஒலிகளை விலக்கிவிடவேண்டுமென்றார். இதையே நாம் இது நாள் வரை பின்பற்றிக்கொண்டிருக்கிறோம்.

எந்த எந்தத்  தமிழ் ஒலிகட்கு வேற்றொலிகளைப் போடலாம் என்ற ஒரு முறை இருந்திருக்கிறது. இதன்படி ஒலிகள் மாற்றியமைக்கப் படுவதை பலவிடங்களில் நாம் எடுத்துக்காட்டியிருக்கிறோம்,

இதன்படி, " ட"  வுக்கு " ஜ"  என்ற எழுத்தை இடலாம் என்று தெரிகிறது.
யானை என்ற விலங்குக்கு ஒரு சொல் அமைக்க விரும்பியவர்கள்
கடை என்ற சொல்லை எடுத்துக்கொண்டனர். யானையின்  முகம் கடைந்ததுபோன்றிருக்கிறது  என்பதனால் கடை என்ற சொல்லினின்றும் ஒரு பெயரை அமைக்க விரும்பினர்.

எனவே,  கடை > கட > கஜ.

கடைந்தது போலும் முகமுடைய விலங்கு என்று பொருள்.

யானைக்கு ஆரியர்களிடம் பெயரில்லை என்றும் அவர்கள் முன்னாளில் வாழ்ந்த இடங்களில் இந்த விலங்கு இல்லை என்றும்
ஜான் கே( John  Kay ) என்ற வரலாற்றாசிரியர் தெரிவிக்கிறார்.   இது ஒருபுற மிருக்க :

 கடை > கட > கஜ(ம்)   என்பது உண்மை என்று தெரிகிறது.

இதுபோல படி  என்பதிலிருந்து பஜி அமைந்தது.

சில வேளைகளில் பாட்டுப் படித்தல் என்பதுமுண்டு. ஆகவே படித்தலுக்கும்  பாடுதலுக்கும் பெரியதொரு  வேறுபாடு முன்னாளில் இல்லை என்று தெரிகிறது.  "உன்னை நினைச்சேன், பாட்டுப் படிசசேன்" என்றொரு திரைப்பாடலும்  நாம் கேட்டிருக்கிறோம்.  முன்னாளில் பெரிதும் பாடல்களே இருந்தன. உரை நடை என்பது பின்னாள் வளர்ச்சி.

படி > பஜி    இத் திரிபு இப்போது  தெளிவு அடைந்துள்ளது ..

பஜி >பஜன்.

இனி

ஆடு  > ஆட  >  ஆஜ  ( ஆட்டின் தொடர்புடைய )

மேடு  >   மேடை >  மேஜை
மேடை >  மேசை

ஆகவே  இவ் ஆய்வு மெய்ப்பிக்கப் பட்டதென்க .

அறிந்து இன்புறுக.

Auto-correct errors have been   edited..Apologies.



சனி, 7 மே, 2016

முகுந்தன்

பரந்தாமன் என்ற சொல்லைக் கேட்டுப் பரமும் தாமுமாய்ப் ப‌ற்றிலாழ்ந்து பரவயப்பட்டு நிற்றற் கருத்தின் உட்பொதிவை அறிந்துகொண்ட  நாம்,  அடுத்து முகுந்தன் என்ற சொல்லின் முன்வரவையும் உணர்தல் முக்கியமே.

இச்சொல்லின் பின்பாதியில் உள்ளது குந்தன் என்பதாகும். அன் விகுதி தென்மொழிகளுக்குச் சிறப்புரிமை எனினும், வடக்கில் அன் விகுதி இலது எனினும்,  அதையும் சேர்த்தே கவனிப்பதில் வரும் குழப்பம் யாதுமில்லை.

கண்ணன் பற்றரின் முன் இருப்பவன். அதனாலேதான் அவன் கடவுள் என்று அறியப்பட்டான்.  கடவுள் எம்மொழியினரிடத்தும்
முன் அமரும், முன் நிற்கும், முன் விளங்கும் முன்னவன். குந்துதல் இருத்தல்.  எனவே குந்து+ அன் =  குந்தன் ஆகிறான்.
அன் விகுதி இல்லா மொழியில் குந்தா என்று நிறுத்தப்படும். இதில்
ஒரு வியப்புமில்லை.

முன் என்ற சொல், மு என்று கடைக்குறையும்.  முன் என்பதற்கு முந்திய  அடிச்சொல் முல் என்பது.  முலை என்ற சொல்லில் முல்+ஐ என்பதில் அது உள்ளது.  முல்> முன்> மு,  (ல் >ன்  திரிபு).

எனவெ

மு + குந்து + அன் =  குகுந்தன். (முன்னவன்).
மு + குந்து + ஆ =  முகுந்தா. (அன் விகுதி வடதிசை மக்களிடம்
இல்லை).


எனவே  முகுந்தன் , கடவுள் , முன்னிருப்போன் என்ற சொற்பொருள் பெறப்பட்டது.