சனி, 2 ஜனவரி, 2016

வருத்தப் படுவிய க - ய etc

இது ஒரு பேச்சு வழக்குத் தொடர். இதில் ,முதற் பதத்தில் திரிபு ஏதும் இல்லை.
வருத்த  என்பதை வலுத்த என்றால் பொருள் மாறிவிடும்.

இப்போது படுவீர்கள் என்பதைப் பார்ப்போம்.

படுவீர்கள்  > படுவீ (ர் ) க (ள் ) >  படுவீக.

ர்  என்ற ஒற்றெழுத்து  மறைவதைப் பலசொற்களில் எடுத்துக்காட்டியுள்ளோம்.

நினைவு கூர்க:

சேர் >  சேர்மி  >  சேமி.  சேமித்தல்.

ஆனால் ஒருமித்தல் என்ற சொல்லில் இப்படி வராது.

நேர் >  நேர்மி  > நேர்மித்தல். > நேமித்தல். இங்கு  அமையும்.

:ள்  வழக்கமாய்  மறைதல் உடையது .

அவள் >  அவ .

இனி,  க என்ற எழுத்து ய  என்று திரிவது காண்க. (படுவிய )

இதுபோல்  க - ய  என்று திரிந்த சொற்களைத் தேடுங்கள் .

மகன் என்பதைப் பேச்சில் சிலர் மயன்  என்று சொல்வதைக் கேட்டிருக்கிறீர்களா?  க - ய  திரிபு  அன்றோ?  

அகன் :  அகத்தில் உள்ளவனாகிய கடவுள்.  பெருமான் : பிரம்மன்.
          பிறவாதவனாகிய கடவுள்.   from akam.

அகன் > அயன்.  க > ய

இதையும் ஆய்வு செய்க.
இது போல்வன பிற -   தேடுங்கள்.

நல்லதொரு  பயிற்சியாய் இருக்கும் .

எம் பழைய இடுகைகளைப்  படித்தால் சில கிடைக்கலாம்.


வெள்ளி, 1 ஜனவரி, 2016

மனம் குறிக்கும் "மான்"



மன்னுதல் என்பதொரு வினைச்சொல்.  இது முன்னுதல் ‍  அதாவது
சிந்தித்தல்  என்ற சொல்லின் திரிபு. அன்றி  மன்னுதல் என்று இன்னொரு சொல்லும் உள்ளது. அதற்கு நிலைபெறுதல் என்று பொருளாம்.

முன் > மன் >  மனம்.  (அம் விகுதி ).

சில சொற்கள் முதனிலை நீண்டு விகுதிபெறாமலும் தொழிற்பெயராகும்.

இப்படி அமைந்ததே மான் என்னும் சொல். மான் எனின் மனம் என்று பொருள். மான் என்னும் விலங்கு,  ஏனை மான்கள் ஆகியவற்றுக்கும்  இதனுடன் தொடர்பில்லை


2அத்தன் அமைத்த உடல் இரு கூறினில்
சுத்தம் அது ஆகிய சூக்குமம் சொல்லுங்கால்
சத்த பரிச ரூப ரச கந்தம்
புத்திமான் ஆங்காரம் புரி அட்ட காயமே   (  திருமந்திரம் )

இங்கு  புத்தி மான்   எனின்  புத்தியும்  மனமும்  ஆங்க்காரமும் என்பது.  .
.

புதன், 30 டிசம்பர், 2015

புத்தாண்டு வாழ்த்துக்கள்


ஈரா  யிரத்தினைக்  கூர்பதி   னாறணுக
சீரா யனைத்தும் செழித்தின்பம் ----  நேர்ந்திடுக;
வாரி அலைநில வல்நடுக்கம்  வாராவே 
சேருநற் பேரால்  சிற.


குறிப்புகள்:

கூர் =  மிகுக்கும்.  சிறப்பிக்கும் .
n. < கூர்²-. 1. Abundance, excess; improvement; உள்ளது சிறந்து மிகுகை. (தொல். சொல். 314.

 மிகுதல். பெரு வறங் கூர்ந்த கானம் (பெரும்பாண். 23). 2.)

பதினாறு  என்பது  16  செல்வங்களையும்  குறிப்பது.  அது  2000 என்பதைச்  சிறப்பிக்கிறது.

அணுக -  வந்துகொண்டிருக்க .

வாரி -  கடல்.   வாரி அலை  என்றது சுனாமியை.

நற்பேர்  -  நல்ல புகழ்  வந்து சேரட்டும்.  அதனால் சிறக்க  என்றபடி,