வெள்ளி, 11 ஏப்ரல், 2014

நம் இளைஞர்

அழகுள்ளோர்க் கரசென்றே   அறைந்தார் பெண்ணை;
அதுதானும் நாமேற்க மாட்டோம் என்று
மிளகுள்ள சொற்களிலே இளைஞர் சில்லோர்
மேல்வழக்கில் ஈடுபட்டார் இற்றை ஞாலம்
சிறகுள்ள பறவைகளைக் கொண்ட தம்மா
சீரான கட்டுக்குள் சேர்ந்து நில்லார்
விறகுள்ள அடுப்புக்குள் விட்ட தீயில்
வெந்து தணல் காணாமல் விடவே மாட்டார்



Notes
அறைந்தார்  -    declared.  மிளகுள்ள  -    காரமான  (சொற்கள் .)    
மேல்வழக்கில்  -   வாக்குவாதத்தில்.   ஞாலம்  -  உலகம் .

சிறகுள்ள பறவை -   free birds without restrictions  (can fly as and when they feel like....).
சீரான கட்டு  - tightly regulated conditions.  சேர்ந்து  நில்லார்  -- would not tie themselves down to abide by what is set for them by others.
  விறகுள்ள அடுப்புக்குள் விட்ட தீயில்   வெந்து தணல் காணாமல் விடவே மாட்டார் --(they)  would not leave the matter without attaining what they set out to achieve.

\(meaning is given above.  not exact translation of  words.)
  

வியாழன், 10 ஏப்ரல், 2014

வேறுபடும் உத்தரவுகளை..........

இருவேறு நீதி மன்றங்களின் ஒன்றுக்கொன்று வேறுபடும் உத்தரவுகளைப் பிறப்பித்ததால் பிள்ளைகளின் தாயாருக்கும் சட்டவல்லுநர்களுக்கும்  தலைச்சுழற்சியாய் உள்ளதாம்.

இந்த  முன் இடுகையின் தொடர்ச்சி.

https://www.blogger.com/blogger.g?blogID=7941642520803533372#editor/target=post;postID=4002681425338457102;onPublishedMenu=posts;onClosedMenu=posts;postNum=3;src=postname

http://www.thestar.com.my/News/Nation/2014/04/11/Cops-No-probe-on-Izwan-Father-who-allegedly-took-son-has-custody-order-too-says-OCPD

Police will not investigate ................... You may read the news by clicking the above

அத்தியாயம்.

முன் இடுகையில்  நாம் "அத்தியாயம் " என்ற சொல்லினைக் கண்டோம். இதற்குமுன் இதைப்பற்றிய ஒரு விளக்கம் எழுதியிருந்தேன்.  எங்கென்று தேடவேண்டும். இந்த இடுகையில்  இச்சொல் குறிக்கப்பட்டுள்ளது    .http://sivamaalaa.blogspot.com/2014/04/blog-post_10.html 

ஒரு  நூலில் ஒரு பகுதி முடிந்து, அதே நூலில் இன்னொரு பகுதி தொடங்கினால்  இது அடுத்த அத்தியாயம் என்போம். இதை ஆங்கிலத்தில் chapter என்பர் : இது உங்களுக்குத் தெரியும் .

இதற்கு ஒரு சொல் புனைந்து பார்க்கலாம்.

ஒரு பகுதி அற்றது.  அதாவது முடிந்தது. இருந்தாலும் நூல் இன்னும் முடியவில்லை. அடுத்த பகுதி அதனோடு இயைகிறது.

அற்று (ஒன்று முடிந்து)
இயை  (இன்னொன்று இயைகிறது).
அம்  என்ற விகுதி கொடுப்போம்.

அற்று + இயை + அம் .

ஆனால் பேச்சு வழக்கில் நாம் அற்று என்பதை அத்து என்றல்ல்லவா சொல்கிறோம்?

ஆகவே, 

அத்து+ இயை +அம் = அத்தியையம் .

யையையை என்று வந்தால் வாய்க்குத் தடையாய் உள்ளது. ஆக, யை என்ற எழுத்தைத் தூக்கி எறிக.  அதற்கு பதில் "யா"  போடுக.

ஆக,   அத்தியாயம்.

நன்றாக  இருக்கிறதா ?


Note:   I may look for my old writings when I have the time.  Some forums where I wrote them have closed down. Web masters gone, perhaps for good.  I too have to spend time looking for my own records. There are data charges too incurred. The best is to write anew.  If you have read it before, please bear with me.
I will edit later,