வியாழன், 3 அக்டோபர், 2013

சுபாரு வென்பதற் கெதுகை

என் தோழி ஒருத்தி, ஒரு மகிழுந்து வாங்கினாள். எனை உலவ அழைத்துச் சென்றதோடு, அவள் வாங்கிய வண்டியைப் பற்றி வாயாரப் புகழ் பாடிக்கொண்டே ஓட்டினாள். இப்போது எல்லா வண்டிகளும் நன்றாகவே ஓடுகின்றன என்று எண்ணிக்கொண்டிருந்த எனக்கு அவள் சொன்னவை, ஒரு மாறுதலாக இருந்தது. அவள் கருத்துகள், இங்கு கவிதையாக.....


சுபாரு வென்பதற் கெதுகை தேடினால்
அபார  மென்பதே அகத்துள் கூடிடும்!

மேலை உலகில் நீள்பயன் அறிந்தோர்
சாலை உலவிடச் சாற்றினர் நன்றென.

வழவழ‌ வென்று சுழலும் இயந்திரம்,
வாடிக்கை யாளர்க்கு வழங்கும் பயன் திறம்.

ஆடா அசையா அழகுத் தேரிது!
மேடும் பள்ளமும் ஏதெனக்  கூறிட.

சொர்க்கம் இலையெனத் தர்க்கம் புரிவோர்
வர்க்கம் சுபாரு வழங்கிட அறிவார்.

வானில வன்ன வண்ண மணமகள்
தேனில வுகந்து தேடுவள் தினமிதை.

வாங்க நினைப்பின் வண்தமிழ் மாலா
நீங்கா நினைப்பினில் வைத்திடு மேலாய்!




கருத்துகள் இல்லை: