சனி, 21 அக்டோபர், 2023

சமுத்திரம்

 https://sivamaalaa.blogspot.com/2017/10/blog-post_91.html

முந்நீர்  என்பதும் முத்-  திரை  ( மூன்று நீர்) தான்.   ஒப்பிட்டு அறிந்துகொள்க.

திரை என்பதும் நீர்தான்.

சமுத்திரம் என்பது தமிழ்தான்.   சமஸ்கிருதம் என்பது வெளிமொழி என்பது ஓர் இடுபுனைவு ஆகும்.   வெள்ளைக்காரன் எழுதிவைத்தது.  சமஸ்கிருதம் பயன்படுத்தியவர்கள் முன்னையப் பூசாரிகளான பண்டை இனத்தவர்களே.  வால்மிகியே பூசைமொழியில் முதற்பாவலரும் பெரும்பாவலரும் ஆவார். இலக்கணம் வகுத்தவன் பாணப் புலவன் ஆகிய பாணினி (  பாண்+இன்+ இ).

சமுத்திரம் பற்றிய இதர ஆய்வுகள்:

https://sivamaalaa.blogspot.com/2018/08/blog-post_19.html

https://sivamaalaa.blogspot.com/2018/08/blog-post_18.html

https://sivamaalaa.blogspot.com/2016/02/blog-post_28.html   முந்நீர். - சமுத்திரம்.

தம் மு( த்) திரை > சம் முத் திரை >add அம்

>சமுத்திரம்.

திரம் என்பதில் ஐகாரம் குறுகிற்று. 

திறம் திரம் ஈறானது எனினுமாம். Then define accordingly.


வியாழன், 19 அக்டோபர், 2023

அஸ்தினாபுரம்

 இன்று அஸ்தினாபுரம் என்ற சொல்லைக் கவனிப்போம்.

இந்த அஸ்தினாபுரம் என்னும் சொல். தமிழில் பழைய நூலாகிய சீவக சிந்தாமணியிலே உரையாசிரியர் வழியாக நாம் எதிர்கொள்கிறோம்.   வேறு பிற்கால நூல்களில் உள்ளது என்பதும் ஏற்கத்தக்கதே.  இங்கெல்லாம்  அஸ்தினாபுரமென்பது அத்தினாபுரம் என்றே காணப்படுகிறது.    வடவொலி நீக்கி அவ்வாறு   காணப்பட்டதா,  அதுதான் மூலமா  மூலத்தின் எதிரொலியா என்றெல்லாம் அறிந்துகொள்ள வழியேதும் இல்லை. 

பாண்டவர்,  பாண்டு என்ற சொற்களும் கவனிக்கத்தக்கவை.  இவற்றை இங்கு இடுகைப்படுத்தவில்லை.

பகு என்ற சொல் முதனிலை நீண்டு பாகு என்றாகும்.  இதன் சொல்லமைப்புப் பொருள் இனிப்பானது என்பதன்று.   பாகுபடுத்தப்பட்டது என்பது.  வழக்கில் காய்ச்சப்பட்ட பாகுகளெல்லாம் இனிமை பயந்ததனால்,  இச்சொல் இறுதியில் இனிமைப் பொருளதானாது.  பகு என்ற சொல்லுக்கு எவ்வாறு பொருந்துமெனின்,  உணவின்போது இது தனிச்சிறப்பு உடைமையினால்,  ஏற்புடைத்தாயிற்று.  உணவின் மிக்க இனிமையான பகுதி.  பல உணவிலும் ஒரு மணிமுடியாய் இருக்கும் பகுதியுணவு. ( "பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன்"  எனக்காண்க. ) காரண இடுகுறிப்பெயராவது இஃது.  பாகு >  பாகு+ தி >  பாத்தி,  அல்லது  பாகு> பா > பாத்தி.  பகுத்தியலும் வயலின் பகுதி.  இங்கு  கு என்னும் விகுதி மறையும்.  அது பாத்தி என்னும்.  சொல்லில் தேவையற்றதும் தடையும் ஆகும். பாகு தனியாகவும் காய்ச்சப்படுவது.  பத்தி (பகுக்கப்பட்ட உரைப்பகுதி ).  பகுத்தி > பத்தி.  வினைச்சொல் பகு என்பதே.

இதை ஏன் கூறுகிறோம் என்றால்,  அத்தி, பத்தி, சத்தி, முத்தி என்பனவும் இவைபோலவன பிறவும் பாத்தியில் குகரம் மறைந்தது போல்  இடைமறைவு அல்லது குறைப்பட்ட சொற்களா என்பதை ஆராய்ந்தறிவது அறிவுடைமை.

அஸ்தினாபுரம் எல்லா இனிமையும் பயக்கும் படி    வடிவமைக்கப்பட்ட நகரமாகும்.  இந்த இனிமை அல்லது மகிழ்ச்சி  ( நல்ல மதிப்பீடு)  மனத்தில் தோன்றுவது ஆகும்.   மனம்  என்பது அகம்.   அகம் என்பது உள் என்றும் பொருள்படும்.  அகத்தில் இன்பம்தரும் நகரம்  அகத்தில் இன் ஆகும் ஒன்றாவது.  அகத்து இன் ஆகு புரமே  அகத்தினாபுரம் ஆகி,  அத்தினா புரம் என்று குறுகிற்று.  அந்நகரத்தினர் தென்பகுதி அரசர்கள் அல்லது தென்பகுதியிலிருந்து வடபகுதி ஓரிடம் அடைந்து ஆங்கு அரசோச்சியவர்கள்.

யானை நகரம்,  அஸ்தின் என்ற அரச நகரம் என்றும் முன் கூறியுள்ளனர்

இன் என்றால் இன்பம், இனிமை.  தாழ்மை உடையது எதுவும் புன்மையாகும். துன்பம் என்பதொன்று.

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு.  குறள் 1152

இவ்வாறு திரிந்த சொற்கள் சிலவற்றைப் பழைய இடுகைகளிலும் காணலாம்.

இன்னா - துன்பம்.  இதுவன்று அடங்கிய சொல் 

இன் ஆ புரம் > இன்பம் ஆகும்  ( ஆக்கும்) நகரம்).  ஆபுரம் என்பது வினைத்தொகை.

நிறைய மாடுகளும் பாலும் உள்ள நகரம் எனினும்  ஆகும்.  ஆ - பசு. ( வீட்டுக்குப் பசுமை தருவது பசு. )   கோமாதாவினால் சிறப்புற்ற நகரம் ஒரு சிறப்பு ஆகும்.

சமஸ்கிருதம் என்பது சில வெளிநாட்டுச் சொற்கள் இருப்பதால் இந்தோ ஐரோப்பியம் ஆகிவிடாது. வெளிநாட்டு மொழி அன்று. ( வரலாற்றாசிரியர்: ரோமிலா தாப்பார்).

அறிக மகிழ்க.

மெய்ப்பு: பின்னர்.


திங்கள், 16 அக்டோபர், 2023

பாஞ்சாலி

 இன்று சாலி  என்று முடியும் ஒரு சொல்  காண்போம்

முதலில் பாஞ்சாலி  என்ற பெயரின் பொருளாய்  அறியப்பட்டவை:  அரசி,  அழகுள்ளவள் என்பவை. பொம்மை போலும் அழகியவள் என்றும் பொருளென்பர்.  இன்னும் வேறுபட்ட பொருட்களையும் கூறுவர். இது பழைய நூல்களில் வரும் பெயர் ஆதலினால்,  அவ்வந் நூல்களில் பொருள் விரிக்கப்படாதவிடத்து,  ஆய்வின் மூலமாகவே இதைக் கூறுவர். இயல்வது அதுவே.

பழம்பெயர்களில்  சிலவற்றை நாம்  ஆய்ந்து பிறர்பால் அறியாத பொருட்களை நாமே கூறியுள்ளோம்.  இவற்றைப் பழைய இடுகைகளில் கண்டுகொள்க.

திரௌபதி என்பதைத்   திற+ அவ+ பதி+ ஐ   என்று பிரித்தால்,  மிகவும் திறமுடையவர்களால், அவம் ( அவி+ அம் >  அவம்,  அவிபடுதல் )  செய்யப்பட்டு, பதி+ஐ  -  பதை,  பதி என்பதன் பெண்பால்,  பெண்தெய்வம்  ஆனவள் என்று பொருள்படுகிறது.   இது உண்மையில் இவள் ஏன் கருநிறம் அடைந்தாள் என்பதற்கு ஒரு விளக்கமாகிய பெயரே ஆகும்.  இப்பெண்ணின் இயற்பெயர் இது என்று எண்ண இடமில்லை.  இன்னொரு வழியிலும் பார்க்கலாம்.   திரு+ அவ+பதை  என்று பிரிக்க,  உயர்ந்த  அவிபட்டு எரிந்துவிட்ட + பெண்தெய்வம் என்று பொருள்படும்.  இரண்டிலும் தமிழில் பொருள் அறிய இடனிருப்பதால், நம் நேயர்கள் எதையும் ஏற்கலாம்.   இஃது  ஒரு பல்பிறப்பிச் சொல் என்னலாம். இப்பெருங்காவியம் பாடியவர்களின் நோக்கம் இதில் வரும் பாத்திரங்களின் உயர்வினையும் பிற கணிப்புகளையும் மக்களுக்கு உணர்த்துதலே ஆதலின், பெயர்கள் பெரும்பான்மை புனைவுகளே  ஆகும். இப்பாத்திரங்களின் இயற்பெயர்களைக் கூறினாலும், அதனால் நீர் பெறும் அறிவு  0  என்பதாகவே இருக்கும்.  யாகத் தீயிற் புறப்பட்டுக் கருநிறம் கொண்டாள் என்பது,  அவ்வம்மையின் நிறத்திற்கு  ஏற்புறுத்தல் என்னும் உத்தியே  ஆகும்.   திற(ம்), திரு என்பவவையே  அல்லாமல்.  திரி ( திரிதல்) என்பதையும் கவனத்தில் கொள்ளலாம்.  திரி+ அவி + பதை  என்றவாறு.

இவ்வம்மை ஒரு தென்னாட்டு அரசியாய் இருந்திருத்தல் இதனால் அறியக்கூடும்.  இவ்வம்மைக்குக் கிருஷ்ணை என்னும் பெயரும் உள்ளது.  கிரு என்பது  கரு என்பதன் திரிபு.   மூலம் கரு என்பதே. கரு -  கருப்பு என்பதன் அடிச்சொல்.  

ஒப்பிடுக:  கிருஷ்ணயசுர்வேதம் ,  சுக்கிலயசுர்வேதம்.   சுக்கில எனின் வெள்ளை நிறம்.

இனிப் பாஞ்சாலி என்பது:   பாண் என்பது  அம்மையார் பெயர்  பாண் +  சால் + இ என்று அறிய  வழிசெய்கிறது.   சால்  என்றது நன்மைப் பொருளது.  சாலுதல் - நிறைவும் ஆகும்.  இகரம் பெண்பால் விகுதி.  பரம்பரையாகப் பண்களில் சிறந்து விளங்கிய வழிவந்தவர் என்பது இதன் பொருள்.  பாணர்களும் அரசு ஓச்சிய காலம் பழங்காலம் ஆகும்.  ஆகவே இவ்வம்மை ஓர் இளவரசி என்றதில் ஓர் ஐயம் ஏற்படவில்லை.

பாணர் என்பதன் அடிச்சொல் பாண் என்பது.  பண் > பாண் தொடர்புடைய சொற்கள்.  பண்+ அர் =பாணர்.  முதனிலை நீண்டு அர் என்னும் பலர்பால் விகுதி பெற்றது. பண்ணன் எனினும் பாடுகிறவன் என்றே பொருள். ஒப்பு நோக்குமாறு:   வள்  என்பது வண் என்று திரியும்.  வண்ணம் என்பது பொருட்கள் (meanings ) பலவினொன்றாகும்.  வண் + இ =  வாணி.  முதனிலை நீண்டு இகர விகுதி பெற்று,  வண்ணம் உடையாள் என்று பொருள் படும்.  வாழ்நன் என்பதும் வாணன் என்று திரிதல் உளது.  [ பள்: பள்ளு, பாட்டு.  பள்> பண்,  இதுவும் பாட்டு. கண்டுகொள்க  ]

பாண் என்ற சொல் வாண் என்றும் திரியும்.  வாணபுரம் என்ற ஊர்ப்பெயர் பாணர்கள் ஆண்ட இடங்களில் ஒன்று  ஆகும்.  இது இன்று திருவல்லம் என்று அறியப்படுகிறது.  ( வேலூர்).  கர்நாடகாவில்  புங்கனூர் (  முனைவர் பேரா.இராசமாணிக்கனார், சோழர் வரலாறு.) என்பது இன்னொன்று.  பிற நூல்களில் அறிக.

னகர  ணகர ஒற்றீறும்  சொல்லாக்கப் புணர்ச்சியில்  ஞகர  ஒற்றாகும் என்று உணர்ந்துகொள்க.  வல் > வன் >  வன்+சு+ இ >  அனை >  வஞ்சனை என்பதுபோலும்  அமைந்தது.   வன்+ சி >  வஞ்சி -  வஞ்சிப்பா.

வான் >வான்+சை > வாஞ்சை   ( பொருள் உயர்ந்த அன்பு).

திரௌபதை அம்மன் என்னும் தெய்வம் பிராம்மணர் அன்று.  பாணர் குலத்து திரௌபதைக்குக் கண்ணன் உதவியதில் சாதி இல்லை என்பது தெளிவு.  

இந்தத் தெய்விக வடிவு,  வாழ்வாங்கு வாழ்ந்து விண்ணகக் கண்ணனருள் பெற்று,  வான் எய்தினள்,  அருள் பாலிக்கின்றனள்.  பால் = பகுப்பு. பாலித்தல் - யாவருக்கும் வேண்டியவிடத்து அருள் பகிர்ந்தளித்தல்.  பால்+ + தல்: இங்கு "இ" வினையாக்கவிகுதி.

அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின்.