வெள்ளி, 24 ஜூன், 2022

தமிழ் பரவிய நிலங்கள், மொழிகள்.

 பிரிட்டீஷ்  ஆட்சி  ஏற்படுவதற்கு முன்  இந்தியா ஒரு தேயமாக  இருக்கவில்லை. பல பகுதிகளாகப் பல்வேறு மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது, ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மொழி வழங்கிவந்தது என்று கூறலாம், தமிழ்நாடு என்ற ஓர் ஆட்சிப்பகுதியோ முழுநாடோ இருந்ததில்லை. அதனால் தமிழ்ப் பேசும் நிலப்பகுதிகளைத்  "தமிழ்கூறு நல்லுலகம்"  என்றது தொல்காப்பிய நூல்.. கிளைமொழிகளும் எழுத்தற்ற மொழிகளும் பல்கிக்கிடந்தன. ( நல்லுலகம் என்று விதந்து கூறியவதனால்,  நாடுகள் பலகொண்ட ஒரு பெருநிலப்பகுதியைக் குறித்தனர் என்றும் கொள்ளலாம்.) தமிழ் இலங்கைத் தீவிலும் வழங்கியது. பல்வேறு தரப்பினரும் அறிந்து கொள்ளுமாறு ஒரு பொதுமொழியை உருவாக்குவதற்கு  அரசியல் குமுகவியல் அழுத்தமுறுத்தும் ஒரு  தேவை பழங்காலத்தின் முற்பகுதியில் ஏற்படவில்லை என்று கூறலாம். என்றாலும் சமத்கிருதம்   ( சமஸ்கிருதம்) என்ற -  பொதுமொழி என்று கருதத் தக்க மொழியொன்று ஏற்பட்டிருந்தது. இதிற் சிறந்து விளங்கிய தொல் கவி வால்மிகி  இராமாயணத்தைப்  பாடினார். பாணரான பாணினி  இலக்கண நூல் புனைந்தார். வியாசர் என்ற மீனவப் புலவர் மகாபாரதம் ஆக்கினார். இந்நூல்களும்  இன்ன பிறவும் மக்களிடம் நன்கு பயின்று வழங்கின.

கல்வியிற் சிறந்தவர்களை அரசர்களும் உகந்தனர்,  அரசாட்சி செய்தவர்களும் சிலர் நூல்கள் பாடினர். எடுத்துக்காட்டு:  அதிவீரராம பாண்டியன் என்ற அரசர். மொகலாய அரச வழித்தோன்றல்களிலும் நூல்கள் எழுதியோர் உள்ளனர்.

சமத்கிருதத்தில் பல்வேறு மொழிச்சொற்களும் கலந்திருந்தன. சில சீனச்சொற்களும் திரிந்து புகுந்தன.   தமிழர் போருக்கென்று ஓர் இலக்கணம் வகுத்துக்கொண்டு, மற்ற மொழி பேசியவர்களை போருக்குள் உட்படுத்தி, "இமயவரம்பன்" போன்ற பட்டங்களைச் சூட்டிக்கொண்டு மற்றமொழி பேசுவோரிடம் ஓரளவு இனக்கலப்பு மேற்கொண்ட அரசாண்ட தமிழருக்கு, ஒரு பொதுமொழி ஏற்படுத்தும் தேவை இருந்தது.   அதனால் அவர்கள் சமத்கிருதமொழியை வளப்படுத்தி பிறபகுதிகளில் வழக்குக்கு ( பயன்பாட்டுக்கு) க் கொணரும் முயற்சி மேற்கொண்டனர்.( சீன உச்சரிப்புக்கு ஓரளவு ஒத்துவரும் பாலிமொழியைப்  படைத்து விரிவு படுத்தியதும் இத்தகு தேவைக்கு ஓர் எடுத்துக்காட்டு. இதைத் தமிழரோடு பிறரும் செய்திருக்கலாம்  ). பல்வேறு பண்டிதன்மார் இதில் ஈடுபட்டனர் என்பது அறியத்தக்கது. ( நளந்தா பல்கலைக்கழகம் இதற்கு உந்துதல் அளித்தது.)  இந்திய நிலப்பகுதிக்கு வெளியில், உரோமப் பேரரசு ஏற்பட்ட போது,  இலத்தீன் மொழி உருவாக்கப் பட்ட காலை, தமிழிலிருந்து பல சொற்களை நம்புலவர்கள் கொண்டு சென்று உதவினர்.  இந்த நெருக்கத்தின் காரணமாகப் பல தமிழ்ச்சொற்கள் இலத்தீனுக்குள் புகுந்தன. வணிகத்தின் மூலமாகவும் தமிழ் பரவிற்று. சுமேரியா முதலிய இடங்களிலும் தமிழ் வழங்கியுள்ளது.

இதையும் அறிந்துகொள்க:  மெசோபோட்டேமியா

https://sivamaalaa.blogspot.com/2017/05/blog-post_16.html  மிசைப்போதுமே(வி)ய

மிசைப்பொழுது  -  சூரியன் உயர்நிலையில் இருக்கை. (வெப்பமிகுதி)

ஈராற்று நாடு -  ஈராக்,    ஈராக்கு ( ஈராக்குதல் ) இரண்டாகுதல்.   ஆறு இரண்டாகப் பிரிதல். Land of Two Rivers 

நல்லது என்பதைத் தெரிவிக்கும் சொல்லே  bon, bona ( f),  bonus (m)  என்ற சொல்வடிவங்கள்.

பொல் ,  பொன்.  லகர நகரப் போலி

bon =  பொன்(னான).   cf  pawn.  (pawnshop).

செல்வம் என்பது பல உருக்கொள்ளும். அவற்றுள் நல்லது, உயர்ந்தது பொன் என்னும் உருவம்.   ஆகவே நல்ல என்ற பொருள் பெறுபொருள். derived meaning.

bona என்ற சொல்லின் ஆய்வில் இந்தோ ஐரோபிய ஆய்வாளர்கள் தடுமாறியுள்ளனர். இதைப் பின்னர் அறிவோம். அவர்களைக் குறை சொல்வதற்காக இது எழுதப்படவில்லை.

பொன்னான பயணம்,  இதுவே bon voyage என்று இந்தோ ஐரோப்பியத்தில் வருகிறது.

தோகை என்ற சொல் இஸ்ரேலின் மொழியில் சென்றது போலுமே இது.

P, B   p or b  என்பவற்றில் வேறுபாடில்லை.  சில ஐரோப்பிய மொழிகளை ஆய்ந்து காணவும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

சில திருத்தங்கள்: 26.6.2022  0625

ஞாயிறு, 19 ஜூன், 2022

போய் என்பதிலிருந்து வோயேஜ்.

 இன்று வோயேஜ்  (voyage)  என்ற ஆங்கிலச்சொல்லைக் கவனிப்போம்.  நல்லபடியாகச் சென்றுவருக என்பதற்கு "Bon voyage"  என்பது சென்ற நூற்றாண்டில் பெரும்பாலார்க்கு அறிமுகமான ஒரு தொடர்.  "உன் செலவு ( பிரயாணம்) நல்லபடி அமைக"  என்பதே  இதன் பொருள்.  இத்தொடர் இன்று அவ்வளவாக வழக்கில் இல்லை.

நாம் கவனிப்பது வோயேஜ் என்பது மட்டுமே,

போய் வாருங்கள் என்பதிலே,  வாருங்கள் என்பது முதன்மையான ஒரு கருத்து. எல்லாம் நல்லபடியாய் இருக்குமானால் போகிற நபர் ( ந(ண்)பர் )  வந்துவிடுவார்.  சங்க காலம் போன்ற முற்காலங்களில்,  தொலைதேசங்களுக்குப் போகிறவர், பெரும்பாலும் திரும்புவதில்லை.  அவர்களின் ஆயுளும் இடையில் முடிந்துவிடுவது உண்மை.  கப்பல் வானவூர்தி தொடர்வண்டிகள் முதலியன வருமுன்,  போகிறவன் (பயணம்)  போய்விடுவதே பெரும்பான்மை. பக்குடுக்கையார் நளந்தா  சென்றதை அறிவோம்.  திரும்பிவந்தாரா என்று தெரியவில்லை. இராமபிரான் தென்னாடு வந்து சென்றது, ஒரே நெடும்பயணம். 

வோயேஜ் என்ற சொல்,  "போய்" என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து உருவான சொல். 

பகரம்  வகரமாகும் ( திரிபு).  இது பலமொழிகளில் ஏற்படும் திரிபுவகை.

போய் >   வோய்  voy.

பயணம் என்பது ஓரிடத்துக்குப் போவதுதான்.

வோய் என்பதுடன் ஏஜ் என்ற விகுதியை இணைத்துவிட்டால்  வோயேஜ் என்ற சொல் கிட்டுகிறது.

எச்சவினைகளையும் வினைப்பகுதி போல் கொண்டு,  அவற்றிலிருந்து வேறு சொற்கள் தோன்றினவாகப் பாலி,  சமத்கிருத மொழிகளில் காட்டுதல் உண்டு.

ஆகவே இது முன்வாழ்ந்த பண்டிதர் காட்டியவற்றோடு ஒத்துச்செல்வதாகும்.

ஆனால் இந்தோ ஐரோப்பிய ஆய்வாளர்கள்,  வொயேஜ் என்பது  வயா என்ற இலத்தீனிலிருந்து வந்ததாகக் காட்டுவர்.  இதுவும் தொடர்புடையதே ஆயினும் ஒரு சுற்றிவளைப்பே ஆகும்.  ஆனால் தவறன்று.   வயா என்பது தமிழ் வழி என்பதிலிருந்து போந்ததாகும்.

இந்தத் திரிபு:  ழ- ய.  ழகரத்தைச் சரியாக ஒலிக்க இயலாதோர் பயன்படுத்துவது. 

வாழைப்பழம் -    வாயப்பயம்

வழி > வயி > வயா via.

போய் என்ற வினை எச்சம் நேரடிப் பிறப்பிப்பு என்பதுணர்க.

வாய் என்ற சொல்லுக்கு  வழி என்ற பொருளும் உள்ளது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.  

மறுபார்வை , திருத்தம்: 21072022  0901

நோய்க்கு நல்ல பானம். மருந்துகள் ?

 கொழுந்துநீரைக்  குடிக்கலாமே  குணமுண்டு கூறுவர்காண்

குளம்பிநீரும்  குடித்திடலாம்  குறையதனால்  இலைகாண்பீர்!

எழுந்துநட  மாடுதற்கோ  இயன்றிடாத நிலைவரினோ

சிறந்ததெனச்  செவிகொள்வது பசும்பாலே பிறிதுளதோ?.


பொருள்.-----  கொழுந்துநீர்  -  இது தேநீர். இதைக் குடிக்கலாம், இதிலும் குணமுண்டு என்று கூறும் மக்களும் நூல்களும் உள்ளன.  அதெபோல் குளம்பிநீர் என்னும் காபியைக் குடிக்கலாம், குறையொன்றும் ஏற்படாது என்போரும் உள்ளனர்.  ஆனால் மூப்பினால்  எழுந்து நடமாட முடியாத நிலையில் நாம் செவி வாயிலாய் அறிவது பசும்பால் நல்லது என்பது, வேறு குடிநீர் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

குடும்பத்துக்குப் பசுமையைத் தருவதனால்  பசு  -  பசு.  மாடல்ல மற்றையவை என்று வள்ளுவனார் விளக்கியுள்ளது காண்க,






படம்:  அன்பர் ஒருவர் கொழுந்துநீர்  அருந்துகிறார்,  அது நல்ல தேறல்தான். எதற்கும் மருத்துவரை நாடி  ஆலோசனை பெறுங்கள்.


இன்றுபோல பின்னாளில்  நன்றுபல மருந்துகளும்

மன்றுமனைமருதகங்கள் எங்கெனினும் கிடைத்திடவே

வென்றநிலை உலகினிலே  விலகாது நிலவிடுக.

சென்றிடுக போர்கலகம்  சீரமைதி  உலகினிலே..


பொருள்.------  இன்று மருந்துகளும் பிறபொருள்கள் போல எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன. இது ஒரு வெற்றிபெற்ற நிலை என்று சொல்லலாம்.  பொருட்பகிர்வு என்று வரும்போது  மக்களுக்குப் பொருட்கள் சென்று சேராத நிலையை வென்றநிலை இதுவாகும்.  இது உலகில் தொடரவேண்டும். பயன்பாட்டுப் பொருள் பகிர்வுத்திட்டங்கள், உலகத்தில் தொடரவேண்டும். அதற்குத் தடைகளே நாம் ஏற்படுத்தக் கூடாது.  போர், கலகம் முதலியவை  உலகை  விட்டு நீங்கவேண்டும்.  உலக அமைதி முதன்மையாகும்.( Maintain supply chain ).



மருந்து அடுக்கும் பலகை


மருந்துகளை மக்களிடம் கொண்டுசேர்க்கும் பலகைவரிசை.

எதை உட்கொள்வதால் நோய் வருகிறது என்று உணர்ந்து கொள்வதை முதன்மையாகக் கருதினாலும், நோய் வந்த பின் மருந்துகள் உண்டு அந்நோய்களை விலக்கிக் கொள்வதும் முதன்மையானதே.  மருந்துகள் கிடைப்பதையும் உறுதி செய்க என்பது கருத்து.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.