வியாழன், 28 ஜனவரி, 2021

மொழிகளில் ஆர் விகுதி(suffix) இராவணன் முதல்....

 விழுமிய பீடு அணவிநின்றவன்  > வி + பீ டு+ அணன் >  விபீடணன் என்று சங்கப்புலவர் வால்மிகியார் அமைத்துக்கொண்டார்.  அல்லது தமிழ் இராமாயணம் ஒன்றிலிருந்து இப்பெயரை மேற்கொண்டார்.  இதனை நாம் முன்பு எடுத்துக்காட்டிய து உண்டு. இவை இரண்டில் எது சரி என்று இப்போது வரையறுத்தல் இயலாதது---  அது காலக்கழிவினால்(passage of time).

விழு = சிறந்த.

பீடு  =  பெருமை, பெருமிதம்.

அணவுதல் -  மேற்கொள்ளுதல்;  தொடர்பினால் அடுத்து நிற்றல்.


இராவண்ணன் என்பதன் இடைக்குறைச்  சொல்தான் இராவணன்.  ஒரு ணகர ஒற்றினை எடுத்துவிட்டால் வேற்றுலகு ஆகிவிடுகின்றது. ஆராய்ச்சியின்மை அத்துணை மோசமாகிவிடுகிறது.

இனி வான்மிகி என்ற பெயரைப் பார்க்கலாம்.

வான் -   ஆகாயம்.  வால் -  வெண்மை என்ற பொருள் இச்சொல்லுக்கு  முதுகெலும்பின்  பின்வெளிப்பாடு என்ற பொருளும் உளதென்றாலும் அப்பொருள் ஈண்டு பொருந்தாது.

வான்+ மிகு + இ >  வான்மிகி.   வானை மிக்கு  நின்ற புலவர் என்பது பொருள். இது ஒரு புனைப்பெயர். அப்புலவர் வைத்துக்கொண்டதாக வேண்டும்.

வால் மிகி என்பதும் அன்னது.   வால் தூய்மை என்னும் பொருளிலும் வரும். வெணமை மிக்கவர்,  தூய்மை மிக்கவர் என்றும் பொருள்படும். இதுவும் அப்புலவர் மேற்கொண்ட பெயராகவே அல்லது பிறர் வழங்கியதாகவே தெரிகின்றது.

இவை இயற்பெயர்கள் அல்ல.

வான்மிகி என்ற பெயருடைய ஒரு கூட்டத்தவர் உள்ளனர்.  அவர்களுக்கும் இப்புலவருக்கும்  தொடர்பு இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். இப்போது அறுதியிட்டு உரைத்தல் ஆகாது. அதற்குரிய பதிவுகள் கிட்டிற்றில.

தொடர்பு உண்டெனினும் அது ஒக்கும் ; இல்லெனினும்  ஒக்கும்.  எதுவும் பிழையில்லை.

மாரீசன் எனின் மரையாகிய தலைவன்.    மரை - மான்.   ஈசன் என்பது இறைவன் - இறைவர் -  ஈறைவர் > ஈஷ்வர்.

இவற்றுள் ஈறைவர் என்னும் முதல்நீண்ட வடிவம் மறைந்தது. ஆனால் முதனிலை நீண்டு சொற்கள் அமையும் என்பது இலக்கணமாதலின், இறை > ஈறை எல்லாம் ஒன்றுதான்.  பாட்டில் நீட்டும்போது வரையறை இலதாகும். பின் ஈறைவர் என்பதில் ஷ் புகுத்தி அமைத்தால், அதனால் வேறுபடல் ஒன்றுமில்லை.  வடவெழுத்தொரீஇ,    சொல்லாய் ( தமிழ்ச்சொல்லாய்) மீளுறும்.  இதனைத் தொல்காப்பியச் சூத்திரம் தெளிவு  படுத்துகிறது.  

உயர் > உயர்வு :  உயர்த்தி  (விகுதி மாற்றம் )  . ஒஸ்தி ஆனதுபோலும்.  வடவொலிகள் மரத்தடி ஒலிகளாய் இருந்தவை.  வடம் - கயிறு, மரம் என வேறு பொருள்களும் உள.  திரு வி.க.  நன்று கூறினார்.

பல தமிழ்ச்சொற்கள் தமிழின மொழிகளில்  வடவொலிகள் பெற்று இயலும்.

பாணினி என்ற பாணனும்  வால்மிகி என்ற அன்றுயர் பிரிவினரின்  புலவனும் மாற்றுமொழியிற் பெரும்புலமை கொண்டிலங்கினர். 

பெயரின் பின் ஆர் விகுதி பெற்று மன்பதைக்குள் மதிப்புற்றோர் ஆரியர். எடுத்துக்காட்டு:  தொல்காப்பியனார் (ஆர்);  வள்ளுவனார் (ஆர்),  இளநாகனார் (ஆர்),  சாத்தனார் (ஆர்),  இன்னும் பலர்.  உங்கள் பெயர் ஆர் விகுதி பெற்று இயலுமானால் நீங்களும்  " ஆர் + இய + அர்"  தான்!

இந்தத் தமிழ் ஆர் விகுதி உலகிற் பல இடங்களிலும் பரவி விட்டதனால்,  தமிழின் உலகத் தாக்கத்தை நாம் உணர முடிகிறது.

அறிக, மகிழ்க.


குறிப்பு:

ஆசிரியர் என்ற சொல் இடைக்குறைந்தும் ஆரியர் ஆகும்.

ஆ(சி)ரியர் - ஆரியர். ஆர் + இ + அர் : பிறர் மரியாதை செய்வதற்கு   உரியவர்.

மரியாதை:  மருவிக்  கட்டிப்பிடித்துக்கொள்ளுதல்.  சொல்லமைப்புப்பொருள்.

மரு + யாத்(து) + ஐ -   மரியாதை.  யாத்(தல்).    ரு யா >  ரியா  ஆகும்.

ஆசிரியர் - பற்றுக்கோடாக இருப்பவர்  :  ஆசு+ இரு+ இ + அர்.  இ - இடைநிலை. அர் - விகுதி.

vizhumiya means excellent. Does not mean fall.









ஞாயிறு, 24 ஜனவரி, 2021

மன்னித்தல் மருவிநிற்றல்

மருவுதல் என்பது, ஒன்றுபடுதல் இணைதல் என்ற பொருள்களில் அறியப்படுகிறது. தழுவுதல் என்பது இதற்கு இன்னொரு சொல்லால் தரப்படும் விளக்கம். "சங்கம் மருவிய இலக்கியம் " என்னும் வாக்கியத்தில் அவ்விலக்கியம் சங்ககாலத்துக்கு அடுத்த கால நிலைக்குரியது என்று எடுத்துக்கொள்ளவேண்டும் என்னலாம்.

 இதன் தொடர்பில் நாம் இந்த அடிச்சொற்களைக் கவனிக்கவேண்டும். மல் - ( ஒருவரை இன்னொருவர் மிக்க அருகில்சென்று கட்டிப்பிடித்து வீழ்த்தும் ஒரு விளையாட்டு அல்லது பிடியிடு போர். மற்போர். 

 மல் > மன்: இது லகர 0னகரப் போலி.இது நிலைபெறுதல் என்ற பொருளில் வரும் சொல். நிற்றல் இயலாத ஒருவன் அடுத்தவனை அணுகிப் பிடித்தோ, அல்லது ஒரு பொருளைப் பற்றிக்கொண்டோ நிற்பான். தரையில் காலை வைத்து நிற்பதிலும் நிலத்தின் துணை தேவைப்படுகிறது என்பதையும் கவனிக்கவேண்டும். ஆகவே மன்னுதல் என்பதிலும் ஒருசார் மருவற்கருத்து கரந்து நிற்பதை அறியலாம். நிலை நிற்பதெல்லாம் இவ்வாறு சார்ந்தே அமைகிறது. சார்பில் மிகுதியும் குறைவும் கூறுதல் கூடும்.  

மன் > மன்னித்தல். இது நிலைபெறுவித்தல் என்ற பிறவினைப் பொருளில் அமைந்த தமிழ்ச் சொல். மன்னித்தல்: இதுபோல், உன்னுதல் என்பதினின்று உன்னித்தல் என்பதும் அமையும். மன் > மன்று , மன்றம். பலர் கூடுமிடம். இவ்விடங்களில் பலர் அடுத்திருத்தல் காண்க. 

மன்றல் - திருமணம், இருபாலார் அடுத்திருக்கும் வாழ்க்கை. 

மல் > மரு. மருவுதல் என்பதில் மரு என்பது தவிர மற்றவை விகுதிகள். வினையாக்க விகுதி மற்றும் தொழிற்பெயர் விகுதி. 

ஒ.நோ: புல் > புரு. நல்> நறு என்பதும் காண்க. 

மன்னித்தல் என்ற சொல் மன் என்றதிலிருந்து அமைதல் காட்டும் விளக்கம் ஒன்று: இது முன்பு பழைய இடுகையில் விளக்கப்பட்டுள்ளது. https://sivamaalaa.blogspot.com/2020/04/blog-post_12.html 

பலரும் அறிந்த ஒரு திரிபு  -  ஒருவேளை மறந்தும் இருக்கலாம் -   அது:

கரு > கன் என்பது.   கருநடம் >  கன்னடம் என்பது.

நடமென்பது  நாடகம் என்றும் திரியும்:  கருநடம் > கருநாடகம் > கர்நாடகம்.

இவ்வலைப்பூவில் பொருளடக்க அகரவரிசையில் "மன்னித்தல்" காண்க. Glossary on Etymology (Pages) .

மருவி நிற்றல் என்பது இன்னொரு வகையிலும் அமையும். மரு(வி) நிற்றல் --- மருநிற்றல் > மன்னித்தல் என்றும் அமைதல் கூடும். 

புல்லுதல் - பொருந்துதல் . இச்சொல் புல் > புரு என்று திரியும். எனவே புரு > புருசு > புருசன் ( வாழ்க்கையிற் பொருந்தியவன் ) என்பது. 

புரு > புருவம் : கண்ணுடன் பொருந்தி அமைந்தவிடம். இதிலிருந்தும் கண்ணுக்குப் பொருந்தியவன் என்றும் விளக்கலாம். எல்லாம் அதே கருத்துதான். 

 புரு > புருடு > புருடன் என்றும் அமையும் 

பல வழிகளிலும் தமிழ். 

 ஒருவனை மன்னிக்குங்கால் அவனை மீண்டும் மருவிக்கொள்கிறோம். பழைமை நட்பை நிலைநிறுத்துகிறோம். அறிக மகிழ்க. 

மெய்ப்பு செய்யப்பட்டது. 

Owing to software error in Win7, the edit tool bar in this blog disappeared. Hence saved the post and published first. Now this has been edited from another device.

Will review. 25 01 2021

தட்டச்சுப் பிறழ்வுகள் பின்னர் கவனிப்போம்.

வெள்ளி, 22 ஜனவரி, 2021

சிரோமணி

இன்று சிரோமணி என்ற அழகிய சொல்லின் வேர்களை அறிந்துகொள்வோம்;

இதைச் சுருக்கமாகவே அறிவோம்.

சிற  -  வினைச்சொல். சிறத்தல்.   முன்னிருந்ததைவிட இன்னும் நலமுடையதாய் ஆவதே சிறத்தல்.  சீர் பெறுதல்.

ஓ  -  ஓங்குதல்.  மிகுதல்.

மணி -  இதுவும் தமிழ்ச்சொல்.  மண்ணுதல் -  தூய்மை அடைதல். ( நீரினால் கழுவப்பட்டிருத்தல்).  உயர்ந்த (பொன்னும்) மணி(யும்)  அதன் கலப்புகளுடன் தான் மண்ணிலிருந்து மனிதனுக்குக் கிடைக்கிறது.  அது மனிதனால் தூய்மை பெற்றே உயர்வை அடைகிறது.  " மணியாகிறது". மணியை ஒளிபெறச் செய்வது ஒரு தொழிலாளி.

மண்ணுதல்.

மண்ணு + இ > மண்ணி > மணி

ண் தொலைந்தது இடைக்குறை.

மண்ணுமங்கலம் என்ற பழந்தொடர் கருதுக.

சிற + ஓ + மணி

ஓமணி =  ஓங்கும் மணி. அப்பொருள் பெற்ற புத்தொளியைக் குறிக்கிறது. இவ்விடத்து இத்தொடர் வினைத்தொகை.

சிற+ ஓ + மணி =  சிறோமணி -  சிரோமணி. ஓரெழுத்து மாற்றமுற்ற சொல்.

புலவர்மணி,   கவிமணி, கலைமணி முதலிய புகழ்த்தொடர்களை உன்னுக.

மூலத் தமிழ்ப்பதங்களை ஈண்டு காட்டினோம்.


அறிக.

மகிழ்க.