புதன், 14 அக்டோபர், 2020

கண்ணும் கடைக்கணித்தலும்.

 ஒவ்வொரு சொல்லையும் தனித்தனியாக எதிர்கொண்டு  தேடிப்பிடித்து அறிந்துகொள்ளலாம். ஆனால் இவ்வாறு செல்வதாயின், அதிக முயற்சியும் காலமும் தேவைப்படும்.  குறைந்த கால அளவில் மிகுந்த எண்ணிக்கையிலான சொற்களை உணர்தல் விழைந்தால்,  சொற்களின் அமைப்புகளையும் மூலங்களையும் அறிந்துகொள்வது பெரிதும் உதவும் என்று ஆசிரியன்மார் சொல்வர். எடுத்துக்காட்டாக, பூ என்ற சொல்லுக்கு உள்ள பொருள்களில் தோன்றுதல்( உண்டாதல் )  என்பதும் ஒன்றாம்.

இவ்வுலகம் உண்டான ஒன்று என்று மக்கள் நினைத்தனர். ஆகையால் உலகிற்கு ஏற்பட்ட பெயர்கள் சிலவற்றில் இப்பொருளைக் கண்டு மகிழலாம்.

பூமி. -- "பூத்த இவ்வுலகம்." --   தோன்றிய இவ்வுலகம்.   இச்சொல்லை வாக்கிய வடிவில் தருவதானால்,  பூத்திருக்கும்  இது என்ற கருத்துதான்   --- சுருங்கி  பூ-ம்-இ என்று என்று அமைந்தது.  பூம் = பூத்திருக்கும்   > பூ~ம்.  இ - இது.

இப்புவியும் அழகியது.  ஓர் பூவனம்.  தோன்றிய வனம்.  இது சுருங்கிப் புவனம் ஆனது.

பூ இ - பூத்த இது >  பூவி ( முதல் சுருங்கி )  புவி,  அதே பொருள்.


இவ்வாறே கண் என்ற சொல்லினின்று அமைந்த சொற்கள் பல.  பழங்கால மனிதன் கண்ணால் கவனமாக எண்ணித்தான் கணிக்க அறிந்துகொண்டான்.

ஆகையால் கண் என்ற சொல்லினின்று கணித்தல் என்ற சொல்லும் வந்தது.

கண் > கணக்கு

கண் > கணிதம்.

கண் > கணி

கண் > கணியன் ( சோதிடன்)

கண்ணை மூடிக்கொண்டும் கணிக்கலாமே என்பீர். எனினும் அஃது இயல்பன்று.

இவ்வாறு அறிக.

மேலும் அறிய:  https://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_9.html

குணமென்னும் சொல்:   https://sivamaalaa.blogspot.com/2019/07/blog-post_18.html

நம் குறைகளைச் சொல்லி இறைவனிடம் / இறைவியிடம் கண்கலங்கினால்

நம்மைக் கடைக்கண்ணால் சிறிது பார்த்து அவ் இறை அருளுமாம்.  இதற்கு

கடைக்கணித்தல் என்ற சொல் உருவானது. கடைக்கண்ணால் நோக்கி அருளுதல்.

அறிவீர். மகிழ்வீர்.


தட்டச்சு பிறழ்வுகள் பின் கவனிக்கப்படும்.

மெய்ப்பு:  15.10.2020.




ஞாயிறு, 11 அக்டோபர், 2020

சீணித்தல்

 நன்றாக வளர்ந்துவந்துகொண்டிருந்த ஒரு குழந்தைக்கு,  அதன் வளர்ச்சி நிற்கவோ குறையவோ செய்யுமாயின் அது சீணித்துப் போய்விட்டதென்பார்கள். ஊர்ப்புறங்களில் "வசக்கெட்டு"ப் போய்விட்டது என்று சொல்வதுமுண்டு. இச்சொல்  (சீணித்தல் ) இவ்வாறு உருவாயிற்று:

நிற்றல் >  நித்தல். என்றாகும்.  -ற்ற என்பது -த்த என்று மாறுவது பெருவழக்கான திரிபு. ஓர் எடுத்துக்காட்டு:-

சிற்றம்பலம்

சித்தம்பரம்  லகரமும் ரகரமாய் மாறிற்று.

இச்சொல் இடைக்குறைந்து:

சிதம்பரம் ஆனது.1


இச்சொல்லின் உருவாக்கத்தை வேறுவிதமாகக் கூறுவோருமுண்டு. ஆயினும்

இதுவே சரியான சொல்லமைப்பு ஆகும்,


நித்தல் என்பது இவ்வாறமைய,3

சீர் + நித்தல் >   சீணித்தல்.

சீர்நித்தல் > சீணித்தல் >  க்ஷீணித்தல். என்றாம்.


இன்னோர் எடுத்துக்காட்டு:

சீர்த்தேவி >  சீதேவி > ஸ்ரீதேவி.

சீர் என்றது சீ என்றானது கடைக்குறை.

வாருங்கள் <  வார் + உம்+ கள் >  வா(  )+(  ) ம் + க(ள்) > வாங்க.

வார் > வா.  சீர் > சீ.

வாராய், நீ வாராய்.  வரு+ ஆய் என்பது வாராய்  ஆகும்.

வாரீர் வாரீர். என்பதும் காண்க.

 எடுத்துக்காட்டுகள் சில தரப்படும். இன்னும் வேண்டின் நம் இடுகைகள் பலவும் வாசித்துக் குறிப்புகளும் கொண்டு போதிக்கவும்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

சீர்+வனைதல் > சீவனை > சீவனம் > ஜீவனம்.2

வனைதல் : செய்தல், அலங்கரித்தல்  என்பது.

வாழ்நாளைச் சீராக்கிக் கொள்ளுதல்.

சீர் நிற்றலே சீணித்தல் என்றாயிற்று அறிக, மகிழ்க.


குறிப்புகள்

1  பேராசிரியர் இரா.பி. சேதுப்பிள்ளை. பிறரும் கூறியுள்ளனர்.  எமது

ஆய்வும் இம்முடிவினதே.

2  உயிர் > யிர் > ஜீ.  > ஜீவன், ஜீவன.  இலங்கை ஞானப்பிரகாச அடிகளார்.

3 வற்றல் > வத்தல்.  வத்தச்சி என்ற பேச்சு வழக்கும் காண்க.

தொற்றல் > தொத்தல். ( தொற்றிக்கொண்டு நடப்பவன்).

உடற்குறை உடையோர்க்கு முன் காலங்களில் யாரும் அவ்வளவு இரக்கம்

காட்டுவதில்லை என்று அறிகிறோம்.


தட்டச்சுப்பிழைத் திருத்தம் பின்

வியாழன், 8 அக்டோபர், 2020

புட்பக விமானம்.

 புள் என்பது பறவை என்று பொருள்படும்.

புள் போல  மூக்கு, வால், பக்கங்கள் அமைவுண்ட ஒரு விமானம்தான்

புள் + பகம் + விமானம் >  புட்பக விமானம்.

பகம் எனின் பகுதி(கள்).

விழுமிய அளவுகளை உடைய ஊர்தி விமானம்.

விழு+ மானம் = விமானம் ( இங்கு ழு குறைந்தது).

விழுமிய = சிறந்த.

மானுதல் - ஒத்தல்

மானு + அம் = மானம்.  அளவு.

மானம் வரின், மானம் உடையவன் என்ற தொடர்களில்,

மானம் ஒரு பெருமை குறித்தது. சமுகத்தில் போற்றப்படும் அளவுடன்

தானும் அளவொத்து இருப்பதே மானம். அடிப்படைப் பொருள் அளவு என்பதே.

புஷ்பத்தினால் செய்யப்பெற்ற வானூர்தி பறக்காது. மலர்கள் அலங்காரம் ஆகலாம்.