வியாழன், 4 ஜூன், 2020

கொரனா அறிவுரைகள் மறந்தனரோ?



இடைவெளி தம்மில் கடைப்பிடி; கடனே;
மடைதிறந் தன்ன வருநோய் தடுப்பாய்;
உடுமுக ஆடை தடுசளிச் சிதறல்;
நெடுசொல வின்ன வனைத்தையும் அறிந்தோம்.

அறிந்திலர் என்பார் எவருமிங் கிலையே.
தெரிந்தன செய்ய மறுத்திடும் நிலையில்
நெரிசலில் தம்மை நுழுந்திய படியாய்
வரிசையில் நின்றார் வழக்கமே யதனால்.

நோய்க்கோர் நுடக்கம் அரசியற்றிற் றில்லாயின்
மாய்க்குவழிச் செல்வரோ சொல்.

சொற்பொருள்:


தம்மில் -  ( மனிதர்கள் ) தம்மிடை.
கடனே - கடமையே.
மடைதிறந்தன்ன - மடை திறந்ததுபோல், 
பெருந்தொகையாய்.
உடு முக ஆடை - முகக் கவசம் அணிக.
அறிந்திலர் - அறியாதார்
நெடுசொலவு -  நீண்ட உரைகள். பேச்சுகள்.
நெடுத்தல் = நீளுதல். நெடுசொலவு (வினைத்தொகை).
இன்ன - இந்தமாதிரி.
நுழுந்திய - உட்புகுத்திய

நுடக்கம் - முடக்கம்
அரசியற்றிற்றில்லாயின்- அரசாங்கம்
நடைமுறைப்படுத்தவில்லை என்றால்
மாய்க்குவழி - மாய்க்கும்வழி; தம்முயிரை
எடுத்துக்கொள்ளும் வழி. ம் ஒற்று - தொக்கது.



http://theindependent.sg/phase-1-report-card-seen-as-a-fail-by-netizens-as-crowds-gather-at-transportation-hubs/

Singapore – Members of the public questioned the effectiveness of the Post-Circuit Breaker’s Phase 1 wherein households are allowed only two visitors a day, yet huge crowds were spotted at various public transport hubs.

புதன், 3 ஜூன், 2020

பொய் சொன்னால் பிழைக்கலாம்

மெய்யொன்றே சொன்னான் இயற்கையோ தண்டித்தாள்
பொய்சொல்லிப் போனாலே வாழ்விங்கு ---- உய்வுறவே
பூமியிலே  வேண்டும் புளுகிடவே நாட்டுக்கே
நாமும் புளுகுதலே நன்று.



உண்ணாமலே இருந்துவிட்டால்.......

உண்ணாமல் இருந்துவிடில்  விண்ணாகும் வீடெமதே,
உடலங்குப் போகாது நிழல்வடிவில் அங்கிருப்போம்.

தண்ணீரைக் குடிக்காமல் முந்நாளில் முடிவாழ்வாம்
தாரணியின் பொய்வாழ்வில் காரணமாய் மகுடமுகி!

தலைமுன் புறம்மூடு தள்ளிநில்லு கைகழுவே
இலைகூடத் தரைதனிலே இருந்துவிடும் விழுந்தபின்பு

மனிதவுடல் ஆறடிக்கீழ் மரத்திலையோ மேல்தரையில்,
புனிதமிந்த வாழ்வென்று புகல்வதெலாம் பொய்தானே.

வாய்வயிறே ஒன்றாகும் மனிதருக்கும் விலங்குக்கும்
மாயும்வரை திரிந்துவிட்டு ஓய்ந்தபின்னே ஒழிந்திடுவாய்.


பொருள்


மகுடமுகி -  கொரனாவைரஸ்.