வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

வான்மீதிலே இன்பத் தேன்மாரி: இராமராவின் மெல்லிசை.

நாம் இன்னும் தமிழ்மொழியைப் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறோம். ஆனால் எம் போன்றோர் வெளிநாட்டினர்.  தமிழைத் தாய்மொழியாகப் போற்றும் நாட்டில் அல்லது மாநிலத்தில் வாழவில்லை. வீட்டை விட்டு வெளியே கிளம்பினால் சீரகம் சோம்பு பட்டமிளகாய் தாளிப்பு வகையறாக்கள் விற்கும் கடைக்குப் போனால்தான் தமிழ்ப் பேச வாய்ப்புக் கிட்டுகின்றது. மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் நாம் வெளியில் சந்திப்பவர்கள் 99 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள் அல்லது சீனர்கள்.  ஆங்கிலம்,  சீனம்,  மலாய் முதலிய மொழிகள் பெரிதும் பயன்படுகின்றன.

நம்மில் பலர் தமிழை அறிந்து வைத்திருப்பதற்குக் காரணம் பேரளவில் திரைப்படங்களையே சாரும். திரையரங்குகட்குச் சென்று படங்களைப் பார்க்காவிட்டாலும் தமிழ்த் திரைப்பாடல்களை ஆங்காங்கு வானொலி தொலைக்காட்சி வாயிலாகக் கேட்க முடிகிறது. இது ஊட்டச்சத்தினை உட்கொண்டது போலாகும். சற்றுத் தரம் தாழ்ந்த திரைப்படங்கள் வருவதைக் கருத்தில்கொண்டு  அவற்றில் நாம் விரும்பும் பண்பாட்டுக் கூறுகள் குறைந்துகொண்டு செல்வதனால் பரத நாட்டியம் பழைய இசை (கர்நாடக சங்கீதம் ) முதலியவற்றைக் கற்றறிய ஒரு சாரார் செல்வதும் வரவேற்றற்குரியதே ஆகும். கோவில்களிலும் ஓரளவு தமிழ் வழங்குகிறது. கிறித்தவ தேவாலயங்களிலும் தமிழ் போற்றப்பட்டு வருகிறது.

திரைப்பாடல்களில் பல இனிய மெட்டுகளிலமைந்த மெல்லிசைப் பாடல்கள் நம் மனத்தைவிட்டகலா இடத்தினைப் பிடித்துக்கொண்டுள்ளன. அத்தகைய பாடல்களிலொன்றுதான் "வான்மீதிலே' என்ற பாடல்.  பானுமதி ஆண்பாடகருடன் இனிமையாக வழங்கியது இப்பாடல்.

அண்மையில் இரண்டு குருசாமிகள் எம்மைக் காண வந்தனர்.  தேநீர் (கொழுந்துநீர்)  முறுக்கு முதலியவை கொண்டு பணிவன்பு தெரிவிக்கப்பட்ட பின்பு அவர்கள் இந்தப்பாடலைப் பற்றிப் பேசி அதை எம்மைப் பாடும்படி கேட்டனர். யாமும் இயன்றவரை இதைப் பாடினோம்.

வான்மீதிலே இன்பத்
தேன்மாரி பெய்யுதே;
வண்ணம்சேர் கலாமதி
வீசும் வெண்ணிலாவினில்   (வான்)

சுகாதீத மேவும்
அனுராக கீதம்
சுதியோடு பாடும்
மதுவண்டு கேளாய்.
சதாநந்த ஜீவிய கானம் இதே (வான்)

வசந்தத்தில் ஆடும்
புனர்ஜென்மம் நீயே
மையல்கொண்டு நாடும்
தமிழ்த் தென்றல் நானே

மனம் ஒன்று சேர்ந்தே
உறவாடும் போது ( I stopped here)
நிஜம்தான் என் ஆருயிர்)
மெய்வாழ்வு நான்)
எனை ஈன்ற ? போகமும்)
மோகமும் மாறாது.)

BRACKETED LINES  IN DOUBT. supplied by the swamis
I tried to elicit the lines from youtube but owing to
frequent reloading unable to retrieve them.

இதை அவர்களுக்காகப் பாடினேம். இதை யாம் கேட்டிருக்கிறோமே அன்றிப் பாடிப் பயிற்சி செயததோ அடிக்கடி பாடியதோ இல்லை;  வரிகளும் சரியாகத்
தெரியவில்லை என்றேம். இருந்தாலும் நன்றாகப் பாடியதாகத் தெரிவித்தனர்,
மணிப்பவழ நடையில் (  மணிப்பிரவாளம் ) அமைந்த நல்ல பாடல். பலரையும் கவர்ந்தது ஆகும்.  ( நீங்கள் அறிந்திருந்தால்,  இப்பாடலின் வரிகளை இங்கு பின்னூட்டம் இடுங்கள். மேலே தரப்பட்ட வரிகளில் தவறுகள் சில இருக்கலாம் என்று நினைக்கிறேம்  ).

இந்தப் பாடலுக்குத் திரையில் பானுமதியும் மறைந்த ஆந்திர முதல்வர் ராமராவும் நடித்திருந்தனர்.  அண்மையில் அவர் மகன் நந்தமுரி ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் காலமானது நம்மைச்  சோகத்துள் உய்த்தது. அவர்கள் குடும்பத்தாருக்கு நம் இரங்கல் உரித்தாகுக,  இருவரின் நினைவாகவும் இப்பாடல் உள்ளது.

திருத்தம் பின்


புகார் என்றால் நுழையமாட்டார் என்பது! என்ன புகார்?



மன்னர்கள் ஆட்சிகாலத்தில் அவர்களும் குடிமக்களிடமிருந்து புகார்களைப் பெற்றுக்கொண்டனர். ஒரு மன்னர்முன் நேரடியாகத் தோன்றி ஒருவன் தன்வருத்தக் கூற்றுகளை முன்வைப்பதானால் அப்போது அரசவையில் மன்னன் அமர்ந்து ஆய்வு செய்வதில் ஈடுபட்டுக்கொண்டுள்ள நேரமாக இருக்க வேண்டும். அரண்மனைக்கு வருவோருள் இருவகையர். இருந்தனர்.  ஒருவகையினர் “புகுவார்”.  புகுவார் என்போர் அனுமதி என்னும் நுழைவிணக்கம் பெற்றவர்கள்.  இவர்கள் அரசனுக்கு அணுக்கமானவர்கள்.  அரசு அதிகாரிகளும் கவிஞரும் பாவலரும் அறிஞர் பெருமக்களும் இவர்களில் அடங்குவர்.  இன்னொரு வகையினர் புகார்.  புகாரைப் படைஞரும் காவலதிகாரிகளும்  உள்ளே விடமாட்டார்கள். அரசரிடம் காவலாளி சென்று கேட்டுச் சரி வரச்சொல் என்றபின் இவர்கள் புகுந்தனர்.

மு(த)ன்மை வாய்ந்த ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கும்போது புகார் ஆனவர்கள் தங்கள் வருத்தக் கூற்றுகளை யார்மூலமாவது சொல்லி அனுப்பி ஓர் அதிகாரியின் வாயிலாக  அரசர்  அவற்றைப் பெற்றுக்கொண்டிருக்கலாம்.  வாய்மொழியாக இல்லாமல் ஓர் ஓலையில் தம் வருத்தங்களையும் குறைபாடுகளையும் சுருக்கமாக எழுதி அனுப்பிவைத்தோரும் உண்டு. இவை ஒரு வகையில் நிலையான கூற்றுமுன்வைப்புகள் ஆயின.  மன்னுதல் என்றால் நிலையானது என்று பொருள். இவையே “ மனுக்கள்’ ஆயின.  மன்+உ – மனு.  உ விகுதி.  உ என்பது முன் என்றும் பொருள்படும். இருவகையிலும் பொருள் கூறலாம்.

சிலர் முன் கூட்டியே தாம் கருதியவற்றை எழுதி ஓலையைக் கொண்டுபோய் அதிகாரிகளிடம் நீட்டினர். இவை நீட்டோலைகள் எனப்பட்டன.  . தக்க தருணத்தில் இவர்கள் உள்ளே வரவழைக்கப்பட்டு அவர்களின் நீட்டோலைகளை அவர்களே வாசித்தனர். தானே வாசிக்க இயலாதவன்  “நல்ல மரம்” எனப்பட்டான். அவனுக்குப் பிறர் உதவி தேவைப்பட்டது.

அரண்மனையுள் புகார் (புக இயலாமல் நிறுத்தப்பட்டவர்கள் )  அனுப்பிய மனுக்களே நீட்டோலைகள் அல்லது புகார்மனுக்கள் ஆயின.  இவை பின்னர் வாசிப்புப் பெற்றன.
புகார் மனு என்பது இப்போது வெறும் புகார் என்று குறுகி ஆங்கிலத்தில் கம்பிளைன்ட் என்ற சொல்லுக்கு நிகராக வழங்கிவருகிறது. புகார் என்றால் அரசவைக்குள் புகாதவர்கள் என்று பொருள்.  புக என்றால் உள்ளே போக அனுமதி அல்லது அதிகார இணக்கம் என்பதுதான். இவ்விணக்கம் பெறாதோர் உள்ளே புகார் (புகமாட்டார் அல்லது நுழையமாட்டார்). நுழையாரின் மனுவே புகார்மனு. மன்னியிருப்பது மனு.  எழுத்தில் இருந்தால் அது மன்னும். (  மன்னும் இமயமலை எங்கள் மலையே, மாநில மீதிது போல் பிறி திலையே என்ற பாரதி பாட்டில் மன்னும் என்றால் நிலைபெற்ற என்று பொருள்.  அந்த மலை அங்கேதான் இருக்கும். நிலையானது. யாரே  திருடவல்லார்?).  எழுத்தில் வரும் வருத்தக்கூற்றுக்கள் ஓரளவுக்கு நிலையானனவையே.  நீர்மேல் எழுதியிருந்தால் அது மனு இல்லை என்று நம் பாட்டி முன்பே சொல்லியிருக்கிறாள்.  உணர்க..  ஓலையில் எழுதி அரசரிடம் சேர்த்தது கல்மேல் எழுத்துப் போலும் கடினமான பொருளாதலின் மனு ஆகிறது.

மனு என்பது உருது கிருது என்பார்கள்.  எப்படி உருது?  தமிழில் பொருளிருக்கிறதே. உருது உருது என்று கத்திக்கொண்டு இருப்பதை உருதுப் பேராசிரியன் கேட்டால் ஆமாம் என்னது தான் என்று எடுத்துக்கொண்டு அவனது அகரவரிசையில் புகுத்திக்கொள்வான். அப்புறம் என்ன? நம்ம வீட்டுக் கறவைப் பசுவை அடையாளம் தெரியாமல் அடுத்தவீட்டுப் பசு என்று சொல்லிக்கொண்டிருந்தால் அடுத்தவீட்டான் எடுத்துக்கொள்வது அவன் குற்றமன்று.  என்னது அன்று என்று ஒரு பத்து வெள்ளியை கீழே போட்டுவிட்டுப் போனால் வருகிறவன்  எடுத்துக்கொண்டு நன்றிசொல்கையில் அது அவன் குற்றமன்று. ஆக  அதன்பிறகு அவன் எடுத்துக்கொண்டானே அது அவனுடையதாக இருக்கும் என்று இளிவாயுடன் களிகொள்வதே சாலும்.

முற்காலத்தில் ஓலைகள் எழுத அமைத்தவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவிலேதான் அதை அமைத்தனர். நீட்டோலை என்றால் ரொம்ப (  நிரம்ப) நீட்டமான ஓலை என்று சொல்லிக்கொடுப்பார்கள்.  நீட்டமான ஓலை ஓலையின் அளவைக் குறிக்காது.  அதிகாரி யிடத்து நீட்டி அதை அவர் வாங்கிக் கொண்டதைக் குறிக்கும்.  Submitted by extending a copy of whatever complaint in writing to an officer who received it with royal permission. Extending does not mean that the “olai” or palm leaf is long.  The complaint in it may be not short and may have consumed several leaves. That is not the matter. The leaves must be of a certain standard length and must be tied. All such things are basic. Standard cut and prepared leaves could not be that long to call it long. 

 இந்தியர்கள் எதையும் சுருக்கமாகச் சொல்லாமல் சுற்றிவளைப்பவர்கள் என்று சீனர் மலைக்காரர்கள் சொல்வதுண்டு. வள்ளுவர் சொன்னார்:  பல சொல்லக் காமுறுவர் மன்ற மாசற்ற…….தவர்'  என்று. சீனமொழியைப் படியுங்கள். அப்போது எப்படிச் சுருக்கிவிட்டார்கள் என்று தெரியும்.

அவ்வளவுதான் புகார். மந்திரி வரும்போது நீட்டிய ஓலைகளை இனி நீட்டோலை என்னலாம். குற்றமில்லை. நீங்களேபோய் வாசிக்கவேண்டா. எண்ணிய அனைத்தும் எழுதாமல் மன்னிய புகார்களை முன்வைக்கவும்,
மந்திரியின் அதிகாரிகள் வாசித்துக்கொள்ளுவார்கள்.

வியாழன், 30 ஆகஸ்ட், 2018

வாபஸ் எப்படிப் பரவியது?

வாபஸ் : இந்தச் சொல் தமிழர் எல்லோரும் அறிந்தது.  பெரும்பாலான தமிழ்நாட்டு வாசிகள் உருது மொழியைப் பேசவில்லை. இவர்கள் முஸ்லிம் அரசு அதிகாரிகளுடன் எத்தகைய தொடர்பு வைத்திருந்தனர் என்பதும் அறியோம். முஸ்லிம் அரசு நடைபெறாத தமிழ் நாட்டின் பல பகுதிகள் இருந்தனபோல் தெரிகிறது. இத்தகைய சொற்கள் எப்படி வேகமாகப் பரவி எல்லாத் தமிழ்நாட்டு மக்களும் அறியுமளவிற்கு விரிந்தது என்பது தெரியவில்லை.

அந்தக் காலத்தில் எதையேனும் செய்துவிட்டு அடிக்கடி வாபஸ் பெற்றுக்கொண்டு இருந்தனர் போலும். இல்லையேல் வாபஸ் எப்படிப் பரவிற்று? முஸ்லிம் மக்கள் ஏனையோருடன் பேசும்போதிலெல்லாம் இதைப் பயன்படுத்திக்கொண்டிருந்தனரோ? வாபசுக்கு உரியதாய் இருந்தது எது?

எப்படியோ வாபஸ் என்ற சொல் நன்`கு பரவிவிட்டது.  காளமேகப் புலவர் இருந்திருந்தால் வாபஸ் என்பதைப் பிரித்து  பஸ் என்னும் பேருந்தை வாவென்று அழைப்பதுபோல் எந்தக் கவியாவது எழுதியிருப்பாரோ என்னவோ?

தமிழ்வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட எத்தனையோ புதிய சொற்கள் வழக்குக்கு வராமலே கிடக்க, வாபஸ் மட்டும் வெற்றிநடை போட்டுள்ளதே!

இவை இருக்கட்டும்.   இப்போது இச்சொல்லின் அமைப்பை அறிவோம்.

எதையும் பின்வாங்கப் பெறுதலையே வாபஸ் என்ற சொல் குறிக்கிறது.

பெறுதல் என்பதில் பெறு என்பதை வடவெழுத்துக்கள் எனப்படும் அயல் ஒலி எழுத்துக்களை வைத்து மறு அமைப்புச்செய்வதானால்:

பெறு > பெஸ் என்று புனையவேண்டும்.

று என்பதை மெருகேற்ற எப்போதும்  ஸ் அல்லது ஷ் பயன்பட்டுள்ளது.


எடுத்துக்காட்டு:  இறைவர் > இஷ்வர் > ஈஷ்வர். 
இறைவர் > இஸ்வர் > ஈஸ்வர் > ஈஸ்வரன்.

ற வுக்கும் அதன் வருக்கத்துக்கும் ஷ் அல்லது ஸ் வரவேண்டும்.
று வுக்கும் ஸ் போடவேண்டும்.

பெறு > பெஸ்.

பின்வாங்கு என்பதில் வாங்கு என்பதை வைத்துக்கொண்டால்:
இதற்கு ஓர் எழுத்துப் போதுமானது. அது  -வா-  என்பது.

வா+ பெஸ்  என்று இரண்டையும் இணைத்தால்  வாபெஸ் ஆகும். இதில் பெஸ் என்பது பஸ் என்றிருத்தலே சொல்லுக்கு எளிமை கூட்டும். இனிமையும் இருக்கும்.

வாபெஸ் >  வாபஸ்  ஆகிறது.
எகரம் அகரமாவது இயல்பே.

பின் என்பதை எப்படி விடலாம்?  அதையும் இணைத்தால்

பிவாபஸ்:  இது சரியில்லை. பி என்னும் பின் என்பதன் முதலெழுத்தை நீக்கி விடுதலே சரி.  பிவாபஸ் என்பது நீண்டதுடன் ஒலித்தடையும் உண்டுபண்ணும்.

வாபஸ்.

ஓர் உருதுச்சொல் உருவெடுக்கிறது.

உருவெடுத்த சொற்கள் இருந்தாலே உருது அமையும்.

வருவாயில் தா என்பதற்கு வாய்தா போல.

மிக்க மகிழ்ச்சி.

எல்லாமும் தமிழ் தானா? இது வெறியன்றோ ?

தமிழே இல்லாத கோடிக்கணக்கான சொற்கள் உலகிலே உண்டு.  அவற்றை நாம் தமிழ் என்றுசொல்லவில்லை.  எடுத்துக்காட்டு: மேகன்மார்க்கல். இதில் தமிழ் எதுவும் இல்லை.

----------------------------

இச்சொல் முன் வாபீசு என்றும் எழுதப்பட்டுள்ளது. ஆனால் இன்றுஇவ்வடிவம் வழங்கவில்லை.