சனி, 19 நவம்பர், 2016

சொல்லமைப்பு: மகத்தான

மகன் என்ற சொல்லைப் பிரித்தால் மக+ அன் = மகன்  என்று அறியலாம்.  இச்சொல்லில் மக என்பதே பகுதி.  அன் என்பது
இறுதிநிலை அல்லது விகுதி. விகுதி என்ற சொல் மிகுதி என்பதன்
திரிபு ஆகும். ம‍~வ போலி. மக என்பதே சொல். அது  மிகுந்து  ( விகுதி பெற்று நீண்டு ) மகன்,மகள், மக்கள், மகார்,  என்றெல்லாம் வந்தன.

விகுதி என்பது விகுருதி அல்லது விக்ருதி என்ற  அயற் சொல்லுடன் ஓலியொப்புமை  உள்ளதாகும். அச்சொல் மாற்றம் என்று பொருட்படும் .

ஆனால் விகுதி  சேர்வதால் பகுதி  வேறொரு சொல் ஆவதில்லை. இவ்விகுதியும்  பகுதியில் தோன்றுவதில்லை. பொருள் வேறு பட்டது கா3ட்ட
இணைக்கப் படுவதே.  மகன் என்பதில் வரும்  ஆண் பால்  அன்   அகற்றப் பட்டுப்  பெண்பால் காட்ட  அள் புணர்த்தப் படுகிறது.     பகுதி  மக  என்பதுதான்.

மேலும் மகவு, மகவான் (பிள்ளைகுட்டிக் காரன் ) மகவாட்டி  (பிள்ளை குட்டிக் காரி ), மகப்பேறு,  மகம்> மிருகம்,  மகவின்கோள்,    முதலிய சொற்களுமுள.

மக என்பது அங்குதான் உள்ளது. மகள் எனப் பெண்ணை உணர்த்துகையில்  அள் என்ற விகுதி இணைந்து சொல் வேறுபடுகிறது. அள் என்பது அவள் என்பதன் சுருக்கமாகக் கருதினும் பிழையில்லை. குகைமாந்தர் காலத்தில் அ = அந்த என்றும் ள் = பெண் என்றும் பொருள்பட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் மொழியை நாம் அறிய வாய்ப்பில்லை. அ = அந்த;  வ்= உடம்படுமெய். அ= அந்த.(இரண்டாவது முறையாகச் சுட்டுச் சொல் வந்தது). ள் ‍= பெண்.
அ+ வ்+ அ+ ள் = அவள். சுட்டு இருமுறை வருவது தேவை இல்லை என்று குகைக்குப் போய் அந்த முந்தியல் மாந்தனிடம் சொல்லுங்கள்.
இலக்கணம் வந்தது பண்பாடு அடைந்தபின்.

இராசராச சோழனின் ஆட்சியின் பிற்பகுதியில் அவன் மகன் இராசேந்திர சோழன் படைநடாத்தினான். மகனும் தானுமாய்ப் போர்க்களங்களில் வெற்றியை ஈட்டினர். அதனால் அவன் மகத்தான மன்னன் ஆனான். மக  எனின் மகன்; தான = தான் பிறவும் உடையோன். இதில் பிற ஆவன படைகள். இது மகத்தான = பெரிய என்ற பொருளையும் தழுவி நின்றது
காண்க.

மோடி தானும் தம் அமைச்சர்களும் ( அவர் வழிகாட்டுதலில் நடக்கும் அமைச்சர்கள் )  இணைந்து செயல்படுதலால் மகத்தான என்ற வரணனைக்குப் பொருத்தமானவராகிறார். அமைச்சர்கள் மக போன்றோரே.


வெள்ளி, 18 நவம்பர், 2016

மகத்தான அரசியல் வீரர் மோடி

மோடி என்பவர்.  இந்தியாவின் தலைமை அமைச்சர்.  ஆனால் நான் இந்தியாவில் இல்லை.  ஆனால் அவர் செய்வது என்னையும் பாதித்துவிட்டது. நான் வைத்திருந்த ரூபாய் நோட்டுகள்  செல்லாமல் போய்விட்டன. முறைப்படி பார்த்தால்  எனக்கு அவர்மேல் கோபம் வந்திருக்க வேண்டும்.  அப்படி இருக்க அவரை மகத்தான வீரர் என்று நான் புகழ்வேனா ?

பாக்கிஸ்தானி டம்  பழைய இந்திய ரூபாய் நோட்டுகள் மட்டும் 500 கோடி உள்ளன என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.   இவை எல்லாம் நல்ல நோட்டுகள் என்று நாம் நினைக்க முடியாது.  அதேசமயம் அவர்கள்
அச்சடித்து வைத்திருக்கும் கள்ள நோட்டுகள் எவ்வளவு என்று முன்வந்த
செய்திகள் கூறின.  எல்லாம் கோடிக்கணக்கில் இருக்கலாம் ,  எல்லாம் பொய்யாகவும் இருக்கலாம்.  பொய்யென்று வைத்துக்கொள்ளுங்கள்.  இந்த  மோடி அறிவிப்புக்குப் பின்  இந்திய பாக்கிஸ்தான் எல்லையில் அமைதி நிலவுகிறது. கடுமையாக ஓடிக்கொண்டிருந்த துப்பாக்கிகளும் சுடும் இயந்திரங்களும் ஓய்ந்துவிட்டன . எதனால் ஓய்ந்தன ? வேறு காரணம் ஏதும்
இல்லாத  அல்லது கூற  முடியாத  போது   தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளே உற்ற காரணமாக இருக்கலாம்.  எல்லாப் புகழும் மோடிக்கே போய்ச்  சேர்கிறது .  இனிப் புதிதாக நடவடிக்கைகளைப்  பாக்கிஸ்தான்  தொடங்கினாலே உண்டு.  அதுவரை போர் ஓய்வைத்  தருகிறது  இது.

அணுவாயுதப் போர்வரை  போகும்படி விரிந்துவிடக் கூடிய  தாய்ப் போருக்கு  ஒரு நிறுத்தம் தந்த மோடி மகத்தான வீரர்.

இனி மகத்தான என்ற சொல்லை ஆய்ந்து அது இங்கு  பொருத்தமா என்று பார்ப்போம்.. அதாவது  தற்குறிக் காரணங்களைக் கைவிட்டு விடாமலே இந்த  ஆய்வினை மேற்கொள்வோம் .

Read also:

http://www.fakingnews.firstpost.com/world/pak-used-100-usd-to-print-a-fake-500-rupee-indian-note-musharraf-172   Gen Musharaff.



https://www.google.com.sg/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=3&cad=rja&uact=8&ved=0ahUKEwjFwaCusLXQAhUGNY8KHRlYCKAQFggpMAI&url=https%3A%2F%2Fwww.quora.com%2FCan-Pakistan-still-print-Indian-currency-after-the-scraping-of-old-currency-notes&usg=AFQjCNGadr85LKYgqrctBNBAzGYNsXUqJQ&sig2=itd2BjvZrXOry3288z9AZg

https://www.google.com.sg/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=2&cad=rja&uact=8&ved=0ahUKEwjFwaCusLXQAhUGNY8KHRlYCKAQFggiMAE&url=http%3A%2F%2Feconomictimes.indiatimes.com%2Fnews%2Fdefence%2Ffake-currency-worth-rs-167-crore-seized-by-government-in-five-years-pakistan-a-big-contributor-to-it%2Farticleshow%2F55355933.cms&usg=AFQjCNEbW8JdKn93T4zc3mbnDZm5OFv91g&sig2=adVxcFlW9NCHYgKD_3ttIg


will  review and edit

ஆசீர்வாதம்

ஆசீர்வாதம் என்ற சொல்லின் தென்றமிழ்ப் பிறப்பை முன் யாம் விவரித்த‌துண்டு.  ஆனாலும் இங்குக் கிடைக்கவில்லை.\

ஆகூழ் போகூழ், மற்றும் ஆகாயம் முதலிய சொற்களிற் போல  ஆ= ஆதல் என்ற முன்னொட்டுப்பெற்ற  சொல் இதுவாகும்.  ஆசீர் என்பது
சீராவது என்று பொருள்தரும்.

வாயில் தோன்றி விரிவது வாதம் ஆகும்.  பின் எழுத்திலும் வாதங்கள் வந்தன. ஆனால்  வாதம் என்று இச்சொல்லின் விதந்து சு ட்டப் படுவது  இருவருக்கு அல்லது அதனின் மேற்பட்ட ந(ண் )பருக்கிடையில் ஏற்படும் சொல்லாடல்  அன்று.   தம் வாயினின்று அல்லது பிறர் வாயினின்று புறப்படும் "சீர்  ஆகுக"  என்னும் வாய்மொழியையே குறிப்பது இது.   ஆ - சீர் - வா- தம்  என்று இயைந்து வந்திருப்பது காண்க. வழக்கில் பொருள் விரியும். 

ஆசீர் என்பது தமிழ் வழக்கே ஆகும். தோன்றியதும் தமிழரிடத்தே.