திங்கள், 27 ஜூன், 2016

இராமன் திராவிட பரம்பரையினன் என்பதா?

எனக்கு அளிக்கும் வரம், எம்பிராட்டி! நின்

மனக் களிக்கு மற்று உன்னை அம் மானவன் -

தனக்கு அளிக்கும் பணியினும் தக்கதோ? -

புனக் களிக் குல மா மயில் போன்றுளாய்!'  கம்பன் 9931


புனத்தில் ஆடிக் களிக்கும் அழகிய குலம்   சிறந்த   ஈடற்ற மயில்போலும் பெண்ணாய்!
உன் மனம் களிக்க உன்னை மனுவின் பின்னோன்  ஆகிய  இராமனிடம் சேர்க்கும் பணியின் மேலான வேறு பணியும் உளதோ?

இவ்விராமாயணச் செய்யுளில் இராமன் மனுவின் சந்ததி என்பபடுவதாகவும் கூறுவர்/  மனு திராவிட அரசன் என்கிறது மனு நூல்.  அப்படியானால் இராமன் திராவிட பரம்பரையினன் என்பதா?

மனு >  மனு + அவன்  =  மானவன்   :  மனுவின் பின்னோன்

மானவன்  :  மானமுடையோன்  என்றலுமாம் ,

உச்சுக் கொட்டுதல்

continued from:-

https://sivamaalaa.blogspot.sg/2016/06/blog-post_27.html

சிறு குழந்தைகளைக்    கொஞ்சம்  நீண்ட தூரப் பயணமாகத் தூக்கிக்கொண்டு செல்லவேண்டுமானால் பாதிவழியில் அவை கழிவை வெளிப்படுத்திவிடாமல் இருக்கத்  தாய்மார்கள் (முன்கூட்டியே வெளிப்படுத்த) ஒரு தந்திரம் செய்வர். உச்சு உச்சு உச்சு  (அல்லது உஸ்  உஸ்  உஸ் ) என்று வாயினால் ஊதுவர். இது காதில் விழவே குழந்தைகள் தம் கழிவை வெளிப்படுத்திவிடும், இப்படிச் செய்து வழியில் உண்டாகும் இடர்களை த் தவிர்த்துக்கொள்வர்.  இந்த உச்சு உச்சுவும் "உச்சர் " என்றே சங்கதத்தில் வரும். சமஸ்கிருதப் பண்டிதர்கள் உச்சர் என்பதற்கு மலங்கழித்தல் சிறு நீர் கழித்தல் எனு ம் பொருளை அகரவரிசையில் பதிவு செய்து கொண்டனர். உச்சு உச்சு என்பது ஓர் ஒலிக்குறிப்பு. கழிவுறுத்தல் என்ற பொருளில் வரும்போது இது பலமொழிகட்கும் உரிய சொல் எனலாம்.( பொதுச் சொல்)  .தூங்குவோனை எழுப்புதலுக்கும் உசுப்புதல் என்ற சொல் வரும்போது அதுவும் ஒலிக்குறிப்பினடிப்படையில் எழுந்ததே.

உச்சுக் கொட்டுதல் என்பதும் ஒலி  எழுப்புதலே ஆகும்,

இவை உச்சரித்தல் என்பதோடு  ஒருவகையில் தொடர்புடையவை.   சுட்டொலியாகவும்  ஒப்பொலியாகவும்  இருபுடைப் பொருத்தம் உள்ளவை .

Edited.  But text may change owing to interference by 3rd party.  A review will be done later. 


உச்சரிப்பு.

‍‍‍முதலில் உச்சரிப்பு தமிழா என்போர் உண்டு. உச்சரிப்பதென்பது தொன்று தொட்டு பேச்சு மொழியில் வழங்கிவரும் சொல் என்றே தெரிகிறது. இது சங்கதமொழியிலும் இருக்கிறது. உடலிலிருந்து வெளிப்படுத்துதல் என்பதே இச்சொல்லின் பொருளாதலின், மலங்
கழித்தல் உட்பட விரிந்த பொருளுடையதாய் உள்ளது. தமிழில் இது
நாவினால் ஒலித்தல் என்ற பொருளே உடையதாய் ஆளப்படுகிறது.

இதை நுணுகி ஆய்வோம். சரிதல் என்பதன் பிறவினை சரித்தல். சரிதலாவது சாய்வாக வீழ்தல். மலை சரிந்துவிட்டது, மண்சரிவில் சிக்கி மாண்டனர் என்றெல்லாம் வழக்கு இருப்பதை அறிவோம். சரித்தல் ‍ சாய்வாய் விழும்படி செய்தல்.

உச்சரித்தல் என்பதில் முன் ஓர் உ அல்லது உகரம் உள்ளது, இந்த உகரம் ஒரு சுட்டு. முன்வந்து விழுதல் என்பது தோன்ற உகரம் வருகிறது. சமஸ்கிருதம் என்றும் பேச்சுமொழியாய் எங்கும் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆரியர் என்போரும் சிறந்தோர், அறிந்தோர் என்ற பொருளில் வருதலன்றி ஓர் இனப்பெயராய் வருவதில்லை. பேச்சில்லாத இலக்கிய மொழியில் சுட்டுதல் தோன்றியதென்பதினும் அவை பேச்சுமொழியான தமிழில் தோன்றியதென்பதே பொருத்தமுடையதாம். .இடங்களில் நடமாடுவோரே அங்குமிங்கும் சுட்டிப்பேசுவர். இதனால்தான் சுட்டுக்கருத்துகளைத் தமிழில் எடுத்துக் காட்ட முடிகிறது.

சமஸ்கிருதம் சந்த அசை மொழியாக முன் அறியப்பட்டது. அதனால் அதன் முந்துபெயர் சந்தாசா அல்லது சந்தசைவு. அதாவது சந்தம் வெளிப்பட வாயை அசைக்கப் பயன்பட்ட மொழி. மொழி என்பதைவிட அதனை அசைகளின் தொகுப்பறை எனலாம். இன்ன கூட்டத்தார் பேசிய மொழி என்றில்லை. இன்று இதில் மந்திரம் பலுக்குவோரும் பல்வேறு தாய்மொழியினர்; கூட்டத்தினர். மங்கோலியப் பரம்பரையில் வந்தோர்கூட உள்ளனர் என்று அறிக.

பிராமணருள் பல சாதியாரும் பல மொழியினரும் பல நிறச்சாயல் உடையோரும் உள்ளனர். சமஸ்கிருதம் அவர்களின் அலுவல் மொழி.

தொடக்கத்தில் இதில் இலக்கியங்கள் படைத்தோர் ‍ வால்மிகி: தாழ்ந்த சாதியினன். ( அப்போது அவர்கள் சாதி உயர்ந்ததாய் இருந்திருக்கலாம், அல்லது சாதிகள் வரையறைப் படாமல் இருந்துமிருக்கலாம்.) வேதவியாசன் ‍ ( இது இவன் இயற்பெயரன்று, காரணப் பெயரே) மீனவன்; வேதங்களில் உள்ள பல பாடல் பாடியோரும் உயர்சாதியினர் அல்லர். இவர்களைப் பிராமணர் என்பது அவர்கள் பிரம்மத்தை உணர்ந்தவர்கள் என்பதனால். பிறப்பில் வந்த சாதியால் அன்று. பாணினி என்னும் சங்கத இலக்கணம் பாடியோன் ஒரு பாணன், அவன் பெயரும் காரணப் பெயரே. பாண் என்ற சொல்லோ பாணத் தொழிலைக் குறிப்பது. இசைஞர்களான பாணர் பெரும் புலவராயிருந்தனர். சாணான் ஆகிய சாணக்கியனும் பிராமணன் அல்லன், ஆனால் பிராமணன், அது பிரம்மத்தை உணர்ந்ததனால்.

துணைக்கண்ட முழுதும் பேசப்பட்ட தமிழ், பல்வேறு திரிபுகளை அடைந்தமை சொல்லித் தெரியவேண்டாதது. சமஸ்கிருதத்தில் உள்ள மூன்றில் ஒரு பங்கு சொற்கள் தமிழ் அல்லது திராவிடத் திரிபுகள். இன்னும் ஒரு பங்கு, திராவிடச் சொற்களோ என்று ஐயுறத் தக்கவை.
இறுதி ஒரு பங்கு ஏனை இந்தோ ஐரோப்பியச் சொற்களோடு தொடர்புற்றவை. இவ்விறுதி இரு தொகுதிகளிலும் தமிழ் மூலங்கள் இல்லை என்பது இதன் பொருளன்று. சமஸ்கிருதச் சொற்றொகுதி, தமிழிலிருந்தும் ஏனைப் பாகதங்களிலிருந்தும் கல்லி எடுக்கப்பட்ட தொகுதி என்பதறிக. அப்படித்தான் அது நன்றாகச் செய்யப்பட்டது.

சமஸ்கிருதத்தில் ஏன் தாழ்த்தப்பட்டோர் எழுதியவை முந்து நூல்களாய் உள்ளன என்பதை ஆய்ந்தறிந்தால், அது ஆரிய மொழி, வெளியிலிருந்து வந்தது என்பது ஆட்டங்கண்டுவிடும். \\

அதனால்  உச்சரித்தல் என்பது  எப்படி வந்த சொல்  என்பதே கேள்வி . முன் சரிந்து வந்து  வீ ழ்ந்ததே ஒலி, அதுதான்  உச்சரிப்பு.

continued at : https://sivamaalaa.blogspot.sg/2016/06/blog-post_58.html