செவ்வாய், 2 டிசம்பர், 2014

இறையனார் அகப்பொருளிலிருந்து "சென்றே ஒழிக"

சென்றே ஒழிக  வயலணி ஊரனும் தின்னத்தந்த‌
கன்றே  அமையுங் கல்வேண்டா பல்யாண்டு கறுத்தவரை
வென்றான் விழிஞம்கொண் டான்கடல் ஞாலம் மிக அகல் இது
அன்றே அடியேன் அடிவலங் கொள்ள  அருளாகவே (275)

இறையனார் அகப்பொருளிலிருந்து  ஓர்  உதாரணப்1 பாடல்.

இந்தப் பாடல், பரத்தையிடம் போதற்குப் பிரிந்த தலைமகன் பற்றியது என்ப‌. But please see  last few paragraphs herein. அவன் போய்விட்டாலும் அவனுக்காகத் தலைமகளிடம் பேச, ஒருவன் வருகிறான். அவன் யாரென்பது, பாட்டிலிருந்து வெளிப்படையாகத் தெரியவில்லை.அவன் தலைமகளிடம்  பேசியதாக வருகிறது இந்தப் பாடல்.


சென்றே ஒழிக வயலணி ஊரனும்:  அழகான வயல்கள் நிறைந்த ஊரை உடைய‌ அந்தத் தலைவன்   போனால் போகட்டுமே! (அப்படி உங்களை விட்டு
எங்கே போய்விடப் போகிறான் என்பது)

தின்னத் தந்த கன்றே அமையும் :  புல், பிண்ணாக்கு முதலிய தீனிகள் அளித்ததுக் கொண்டிருக்கிறானே, உங்கள் கன்றுகட்கு! உங்கள் வீட்டின் பாலுள்ள அன்பையும் கவனிப்பையும் அவன் மறந்துவிடவில்லை என்பதை, இந்த அவன் செய்கை காட்டுகிறதே. புல் பிண்ணாக்கு தவிடு முதலிய தின்னத்தந்த கன்றுகள் சான்றாய் அமையும் என்றபடி,

கல் வேண்டா: அவன் போய்விட்டானென்று நீங்கள் உயிர் விடுவதா? கல் ‍ நடுகல்;( நீங்கள் நடுகல்2 ஆகவேண்டாம்.)

பல்யாண்டு கறுத்த வரை வென்றான்:  அவன் கறுத்துவிட்ட பழைய மலையை வென்றவன்; ( பல்லாண்டு சினந்து போர்செய்து மலையை வென்றவன் எனினுமாம். ) கறுத்தல் ‍ சினத்தலும் ஆகும். Rocks become darkened  owing to raining for a long time.  (old rocky mountain ) வரை:  mountain.
...
விழிஞம் கொண்டான்:  கடற்போரிலும் வென்றவன்; ( உங்கள்   தலைவன், வீரன்; நாட்டுப் பற்று உடையவன். அவன் வென்ற  இடங்களை விட்டு நீங்கிவிடமாட்டான்.)


அடியேன் அடிவலங் கொள்ள -  அடியேனின் அடிகள் வலமாகச் -சென்று தேடுவதற்கு,  அடிவலம்கொள்ள -: நடந்து  சுற்றித் தேட‌

கடல் ஞாலம் மிக அகலிது அன்றே :  கடலால் சூழ்ந்த இவ்வுலகு மிகவும் அகன்றது அன்றோ?

(ஆகவே விரைந்து ஒன்றும் நடந்துவிடாது, காலம் தேவை.  இப்போது எங்கே என்ன செய்துகொண்டிருக்கிறானென்பதை  உடனே அறிந்து கொள்வதும் அரிதே ஆகும்.)

அருள் ஆகவே: யாவும் நன்று ஆவதற்கு அருள் உண்டாகட்டும் என்றபடி


தலைமகன் எதுகாரணமாகச் சென்றுவிட்டானென்பதற்கு இப்பாடலில் வெளிப்படைக் குறிப்பு எதுவும் இல்லை, பரத்தை காரணமாக என்பது உரை எழுதியோர் கூற்றேயாகும். கல் வேண்டா என்றதால் பிறபெண்ணை நாடிச்சென்றிருத்தல் கூடுமென்பதும் அவள் பரத்தையாய் இருப்பாள் என்பதும் ஊகமாம்.(யூகம்). உண்ணுதல் என்னாது தின்னத் தந்த என்றதனால் புல் முதலியன கன்று ( or கன்று புல் முதலியன....... ) தின்னத் தந்த என்பது பெறப்படும். வீட்டில்  கன்றுக்குத் தீனி உட்பட எல்லாவற்றையும் கவனிப்பவன் என்பதனால் கவலை கொள்ள வேண்டாமை அறிகிறோம். பாடலுக்கு உரையாசிரியர் உரை ஏதுமில்லை.தலைப்புத் தந்ததே உளது அதுவும் ஏற்றுக்கொள்ளத் தக்கதாய் இல்லை. பாடல் புனைந்தவர் யாரென்பது தெரியவில்லை.

தலைமகள் வீண்கவலை காட்டுவது இப்பாடல்.

அருள் ஆகவே என்றதனால் வந்தவன் முதியோனாய் இருக்கலாம். தான் தேடிக் கண்டுபிடிக்க நாளாகலாம் என்பதால் அவன் தலைமகனால் அனுப்ப‍ப்பட்ட தூதுவனல்லன் என்பதே சரியாகும்


1 உதாரணம் என்பது மிக்க அழகாய் அமைந்துவிட்ட ஒரு சொல். அது இது உது என்பவற்றில் உது:  முன் நிற்பது; ஆர் : நிறைவு; அண் : பொருளால் அண்மையில் இருப்பது; அம் : விகுதி;  ஆகவே உதாரணம் என்றனர்.

2 þíÌ ¯¨Ã¢ø ¿Î¸ø ±ýÈÐ À¢½õ Ò¨¾ò¾À¢ý Ò¨¾ò¾ þ¼ò¾¢ø
¨Åì¸ôÀÎõ «¨¼Â¡Çì ¸ø¨Ä. Not used here in the sense it has
been used in ancient grammar works. (Not a "technical term" or "term of art" in the commentary herein). The writer at this point was neither referring to nor having any interest in those works for her purpose of interpretation.  

Footnote 2 added on 12.3.2018.
Will edit later

சனி, 22 நவம்பர், 2014

தலைமகளும் தற்புகழ்ச்சியும்

ஒரு தலைமகளும் ஒரு தலைமகனும் தமக்குள் புலவியில் ஈடுபட்டு
நிற்கும் வேளையில் தலைமகள் தன்னைத் தானே புகழ்ந்து கொள்வதாக
ஒரு புலவன் அல்லது கவிஞன் பாடுதல் கூடாதென்பது பண்டைப் பொருளதிகார வரையறவு  ஆகும். தற்புகழும் தலைமகள் தன்னடக்கம் இலாதவள் என்று கொள்ளப்படும். புலவன் படைக்கும் கதைத்தலைவி மிகச்சிறந்த பண்புநலன்கள் உடையவளாய் இருத்தல்வேண்டும்.பண்டைப் புலவர்கள் ஒரு சிறந்த குமுகாயத்தை (சமுதாயத்தை) உருவாக்க வேண்டுமென்பதிலும் சீர்கேடுகள் புகுத்தப்படுதல் கூடாதென்பதிலும் கண்ணும் கருத்துமாயிருந்தனர்  என்பதையே இவ்விதிகள் காட்டுகின்றன.

தலைமகனுடன் மாறுபட்டு நின்றாலும் கூட, தற்புகழ்ச்சியில் தலைதூக்கும் அடக்கமின்மை தலைவிக்கு விலக்கப்படும்.

பொருளிலக்கணம் ஏதும் ஆங்கிலம், சீனமொழி ஏனை உலக மொழிகள் என எவற்றிலும் இருப்பதாகத் தெரியவில்லை. எனினும்  ஆங்கிலத்தில்
self praise is no praise என்பர், தற்புகழ்தலை எல்லா மொழியினரும் வெறுத்தொதுக்குகின்றனர். அடக்கம் அமரருள் உய்க்கும் என்பது வள்ளுவனார் வாய்மொழி. இதனை ஒரு உலகப்பண்பாட்டு விதி எனலாம். இவ்விதியை நம் பொருளிலக்கணம் பண்டை நாளிலேயே செயற்படுத்தி யுள்ளது. எத்தகைய சூழ் நிலையிலும் தலைவியை அடக்கம் உடையவளாகக் காட்டுவதையே கவிஞனின் பண்பாடு, கவிதையின் பண்பு என்றெல்லாம் மொழிந்தால் அது மிகையன்று.

கிழவோன் முன்னர்க் கிழவி தற்புகழ்தல்
புலவிக் காலத்துப் புரைவ தன்றே.

என்பது இறையனார் அகப்பொருட் சூத்திரம். 47

கிழவோன் - தலைமகன்  கிழவி - தலைமகள் இது கற்பியலில் வருகிறது.
கிழமை என்ற சொல் உரிமை என்று பொருள்படும். கிழ+ஆர்=கிழார் உரிமை உடையவர் என்பது  பொருள். நிலக்கிழார் என்பது காண்க.

தற்புகழ்தல் தகுதியானதன்று. ஆனால் கதைப்பாத்திரம் ஒரு பரத்தையாயின் அது ஒத்துவரக்கூடிய நடத்தையே. பாடலியற்றுவோன் அவள் தற்புகழ்ந்து பேசுவதாகப் பாடலாம்.

"இந்தத் தலைமகன் என்பால் விழவில்லையாயின் என் சங்கங்கள் தவிடுபொடியாகட்டும்' என்று அவள் கூச்சலிடுவதாகக் கவி புனையலாம்.
சங்கம் என்பது சங்குவளையல்.  சூத்திரத்தில் "முன்னர்" என்பது பெய்யப் பட்டுள்ளதால் இது நேர்நிற்கையில் நடந்துகொள்ளும் விதம் பற்றி எழுந்தது ஆகும். எனினும் ஏனைக் காலங்களிலும் தற்புகழ்ந்து பேசாதிருத்தலே சிறந்த நெறியாம்.

கிழவன் கிழவி கிழமை

கிழவன் கிழவி என்ற சொற்கள் இக்காலத்தில் பொருள் திரிந்து வழங்குகின்றன. கிழமை : உரிமை.  "கிழமைப் பட வாழ்"‍‍.  Wherever you live, live there with all rights and privileges associated with your situation. So said auvaiyAr. சனிக்கிழமை:  சனிக்கு உரிய நாள் என்று பொருள். கிழ என்பதற்கு  உரிமை என்பதே அடிப்படைப் பொருள். கிழ +  ஆர் = கிழார். உரிமை உடையவர். கிழ என்பதிலுள்ள  ஈற்று அகரம் கெட்டு, கிழ எனற்பாலது  கிழ் என்று நின்று ஆர் விகுதியுடன் புணர்ந்தது. கிழ + அன் ‍= கிழவன், இது
வகர உடம்படு மெய் தோன்றி, கிழவன் ஆயிற்று. கிழான் > கிஸான்.

கிழ என்ற உரிச்சொல், கீழ் என்பதிலிருந்து தோன்றியது. அரசனே எல்லா நிலங்கட்கும் உரியவன். ஏனை உரிமையாளர்கள், அவன் உரிமை தர அதைப் பெற்று வாழ்வோர் ஆவர். இன்றைய அரசாட்சியிலும்,
 இதுவே நடைபெறுகிறது. அரசு ஆவணம் தரவில்லையானால், நிலம் எப்படி உங்களுக்குச் சொந்தம்?  கீழ் > கிழ.  ஒப்பு நோக்குக: கீழ் > கிழங்கு.தமிழில் கிழ் என்பது சொல்லாகாது, அது திரிபுகளின் ஓட்டத்தில் கருவைப்போல் தோன்றா வடிவமே. அதைப் பிறைக்கோடுகளுக்குள் இட்டுக் காட்டலாம்:  கீழ் > ( கிழ் )+ அம் + கு = கிழங்கு. தரையில் கீழ் உள்ள செடியின் பகுதி.

பொருள் மாறுதலுக்கு உதாரணம் நாற்றமெனும் சொல். முன்னர் இது நன்மணம் என்று பொருள்பட்டது. நறு :  அடிச்சொல். நறு ‍>ந‌றிய. (ஒ.நோ: சிறு > சிறிய)
"நறியவும் உளவோ நீ அறியும் பூவே!"  (kuRunthokai)  என்பது காண்க. நறு > நாறு > நாறுதல் : வினைச்சொல் ஆக்கம்.  நாறு + அம் = நாற்றம்.

"சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி,
மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி,
.................................................
.................................................
புதுமலர் தீண்டிய பூ நாறு குரூஉச்சுவல்
கடுமா பூண்ட நெடுந்தேர்..............................
( நற்றிணை, 149  )

என்பதும் காண்க.

மற்றும்:  "சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்...." என்பது
குறள்.

பரத்தையிற் பிரிந்த தலைமகன்

.காதல் பரத்தை எல்லார்க்கும் உரித்தே

(இறையனார் அகப்பொருள்.
கற்பியல், சூத்திரம் 40 )

அதாவது, பரத்தையின் காதற் பொருட்டுத்  தலைமகளைப் பிரிந்து செல்லுவதாகப்  புலவன் கவிதை இயற்றுதல்,   தலைமகன் எத்தகைய நிலையினன் ஆயினும்,  அவனுக்கு உரியதாக இலக்கிய உலகம்
ஏற்றுக்கொள்ளும் என்பது.

இல்லறம், துறவறம் என்ற மேலான  நல்லறங்களைப் போற்றி வந்தவர்
தமிழர். ஆயினும் பரத்தைமை போன்ற  இழிவுகளும்  அவர்களிடம் இருந்ததன .ஆனால் சிலர், இதுவும் குலமகளிரைப் பாதுகாகத் தேவையான ஒரு வசதியே என்கின்றனர்.

எப்படியோ!

பரத்தையை வேண்டி ஒரு தலைமகன் தலைமகளைப் பிரிந்தான் என்றால்
தலைமகட்கு அது துன்பமே. இத்துன்பத்தை எடுத்துக்காட்டப் புகும் புலவன், இத்துன்பம் நீங்கி மீண்டும் தலைமகளிடத்துத் தலைவன் வந்து ஒன்றுகூடும் நிகழ்வினையும் பாடலாம். இப்படிப் பிரிந்து கூடினால், அது இன்பமே என்கின்றனர் இலக்கிய மேதைகள். இதிலிருந்து புலவனுக்குப் பாடப் பற்பல
பொருள் கிடைக்கின்றன.

இறையனாரின் அகப்பொருளுக்கு உரை  தந்ததாகச் சொல்லப்படும்
திருமுருகாற்றுப் படை தந்த நக்கீரனார், இதைத் தற்காத்துக் கூறுவதாகத் தெரிகிறது. "ஊடலே, புலவியே, துனியே ( அச்சம் அல்லது புலவியின் முதிர் நிலை ) என்றிவை நிகழும், நிகழ்ந்தால் அவை நீங்கிக் கூடினவிடத்துப் பெரியதோர் இன்ப(ம்) "  என்கிறார் அவர்   (புலவர்  பிறர் அவர் பெயரால் புகுததியதாகவும்  இருக்கலாம்! )  .பிரியவும் ஒரு காரணம் வேண்டுமே. எக்காரணமும் இல்லை யென்றால் பிரிவுதான் ஏது?  துன்பம்தான் ஏது?
\
இறையனார், கவிதையில் மென்சுவை வேண்டுபவர், ஆகையால் அவர்
இதனை இலக்கியத்துக்கு ஏற்றதெனக் கொண்டுள்ளார் என்கிறார் நக்கீரனார்.


காதற்பரத்தை எல்லார்க்கும் உரித்து என்று அஃறிணை முடிபு கொண்டதற்குக் காரணம், "  காதற் பரதையின் பொருட்டுத் தலைமகளைப் பிரிதல் என்னும் நிகழ்வு எல்லார்க்கும் உரித்து" எனற் பொருட்டாம். இல்லையேல், காதற்பரத்தை எல்லார்க்கும் உரியள்  என்று சூத்திரம் வந்திருக்கவேண்டும். அந்த நிகழ்வைப் புலவன் எத்தன்மையோர்க்கும் பாடலாம் என்பது. இவ்வதிகாரத்தின் பொருள் பிரிவு   (subject )  ஆதலின், இது பொருத்தமே.

காதற் பரத்தை என்றதனால், இந்த உரை மேலும் பொருத்தமாகிறது.
"காதல்" என்றதனால், அதுகொண்டு தலைமகன் தலைமகளைப் பிரிவன் என்று கொள்ளவேண்டும். இது இக்காலத்தில், "சின்னவீடு" என்று திரைப்படங்களில் பரப்பப்பட்டது  போன்றதொரு சொல்லாட்சி ஆகும்.