சனி, 28 ஜூன், 2025

சியாமளா என்ற பெயரமைப்பு

 இதனை இப்போது அறிவோம். ப

ஒரு சொல்லுக்கு ஒரு பொருள்தான் என்பதில்லை.  சொற்களுக்குப் பலவாறு பகுத்துப் பொருள்கூறவும் தமிழில் வசதி உள்ளது.

சீரிய மாலை என்ற தமிழ்த் தொடர் எவ்வாறு மாறி அமைகிறது என்று காண்போம்.

சீரிய மாலை >  சீய மாலா >  சியாமலா >  சியாமளா என்று ஆகிவிடும்.

சீரிய என்ற சொல் தன் ரிகரத்தை இழந்து சீய என்று இடைக்குறையாகும்.

இது பின் சியா என்றாவது அயல்மொழியில் ஏற்படும் மாற்றம்.  நெடில் குறில் என்று வராமல் குறில் நெடிலாக மாறியமையும்.  இது அயல்மொழித் திரிபு.

மாலை என்பதும் மாலா என்றாகும்.  ஆகரத்தில் முடிதல் தமிழிலும் உண்டு.  இது பெரும்பாலும் நெடில் குறிலாக இல்லாமல் குறில் நெடிலாக மாறுதல் அடையும்.

மலா>  மளா என்று மாறும்.

சீரிய மாலை என்பது முற்றும் இருளான மாலை நேரத்தைக் குறிக்கும். இது மாலை என்னும் பூத்தொடுப்பைக் குறிப்பதாகத் தெரியவில்லை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடைய இடுகை.




சமஸ்கிருதம் சென்ற தமிழ்த்தொடர்.

'' நமைக்காக்க!'' என்பது பலர் இணைந்து வேண்டும் ஒரு குழுவினரின் குரலாக ஒலிக்கின்ற வரை  அது ''நமைக்காக்க வேண்டும் இறைவனே'' என்ற வேண்டுதலை முன்வைக்கும் ஒரு சொல்லாக இருந்தது. அது மந்திர மொழியாகி அதே வேண்டுதலையே முன்வைத்தால், அது மாற்றமின்றித் தொடர்ந்திருக்கலாம்.  அல்லது காலப்போக்கில் திரிபு அடைந்திருக்கவும் கூடும்.  இவ்விரண்டனுள் எது நடந்திருக்கும் என்பதை  நமஹா என்ற சமஸ்கிருதச் சொல்லே காட்டுகின்றது..  நமைக்காக்க என்ற தமிழ்த் தொடர்,  நமஹா என்ற ஒரு சொல்லாக மாறியமைந்துவிட்டது.

இப்படி மாற்றம் அடைந்ததனால் மொழிக்கு ஒரு சொல்லால் ஒரு சிறு வளர்ச்சி ஏற்பட்டது.  நமஹா என்ற புதிய சொல் சமஸ்கிருத மொழிக்குக் கிட்டியது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். 

மொழிகளில் ஒன்றன் அணைப்பினால் இன்னொன்று வளர்தல் என்பது எல்லா மொழிகளிலும் காணப்ப்படுகின்ற ஒரு தன்மையே ஆகும்.  இப்படித் தமிழின் ஒரு தொடர் சற்று மாற்றமடைந்து சமஸ்கிருதத்தைச் சற்று வளப்படுத்தியது வரவேற்கத் தக்கதொன்றே  ஆகுமென்று உணர்க. இரண்டும் இந்திய மொழிகளே  ஆகும் என்பதும்  அறியற்பாலது ஆகும்.

ஏறத் தாழ  எழுநூறு  எண்ணூறு தமிழ்ச் சொற்கள் சமஸ்கிருதத்தில் இருக்கின்றன என்று கமில் சுவலபெல் சொன்னார்.  இன்னும் அதிகம் கண்டுபிடித்தனர் வேறு ஆய்வறிஞர்கள். நாமும் சிலவற்றைக் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறோம். இதனால் மொழிபற்றிய அறிவு முன்னேறுகிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.  தமிழ் இந்திய மொழிகளில் ஒன்று என்றும்  சமஸ்கிருதம் வெளிநாட்டு மொழி என்றும் முன்னர் செய்த வெள்ளையரின் ஆய்வு சொன்னதனால்  மேலும் பல தமிழ்ச்சொற்களைச் சமஸ்கிருத்த்தில் கண்டுபிடிப்பதற்கு ஒரு மனத்தடை இருந்துவந்தது.  இதற்குச் சரியான காரணிகள் இல்லை. வெள்ளையர்தம் கற்பனை ஆய்வினால் ஏற்பட்ட  நிலையே இதுவாகும்.

இந்திய மொழிகள் இவை என்பது இப்போது புலப்படுதலால் ஒப்பீடு செய்வதற்கான தடை இப்போது இல்லை என்பது உணர்க.

நம- ஹா  என்பது நமைக்  கா என்பதன் திரிபே என்பதை  அறிய, பொய்மை தானே விலகிவிடும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை உடைய இடுகை


ஞாயிறு, 22 ஜூன், 2025

வாயு அல்லது வாய்வு

 வாயு என்ற சொல்லைக் கவனிப்போம்.

வாய்த்தல் என்பது  வினைச்சொல். இது கிடைத்தல், கிட்டுதல் என்றிதற்குப் பொருள் கூறலாம். பெறுதல் என்று கூறவும் இடமுண்டு.  வாய் என்ற சொல்லுக்கு இடமென்ற பொருளும் இருக்கிறது.

வாய்வு என்பது உடலின் ஓரிடத்தில் அல்லது அதற்கு மேற்பட்ட இடத்தில் உண்டாகி ஒருவித வலியையும் உண்டாக்கும் ''காற்றுத் தொல்லை என்று சொல்வார்கள். ஆங்கில வைத்தியத்தில் இதற்கு வேறு விளக்கங்கள் தரப்படும்.

இந்த ''வாய்வு'' உடலிலே உள்ளதன்று,  அது சில உணவுப் பழக்கங்களினால் வாய்க்கப்பெறுவது என்று சிலர் எண்ணினர். எடுத்துக்காட்டாக,  கடலைப் பருப்பு அதிகம் எடுத்துக்கொள்வதால் இது ஏற்படும் என்ற ஐயப்பாடும் உள்ளது.  ஆகவே வாய்க்கப்பெறுவது என்ற பொருளில் 'வாய்வு'' என்றனர்.  சமஸ்கிருதமும் இதற்கு இதே அடிச்சொல்லைக் கொண்டு  ''வாயு''  என்ற சொல்லை உருவாக்கியது.  வகர மெய் விடப்பட்டது.  வாய்வு என்னாமல் வாயு என்றனர்.

இந்த வாய்வுத் தொல்லை என்றால் அது வாய்க்கப்பட்டது என்பதுதான் பொருள்.

பாவாணர் இதை வாயினின்று வெளிப்படுவது என்று கருதினார்.

வாய்வு என்ற சொல்லே சரியானது.  ஆனால் தமிழர்களும் வாயு என்பதையே பின்பற்றினர். இதை நோயாகவே பார்க்கலாம்.

சமஸ்கிருதத்தில் இது பொதுப்பொருளில் வழங்குகிறது

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை வழங்கப்படுகிறது.


 

வெள்ளி, 20 ஜூன், 2025

தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்தி என்ற பெயரை இன்று ஆய்வு செய்கையில் இரு நன்மைகள் காண்கிறோம். ஒன்று, தட்சிணம் என்பதை உணர்வதுடன்  ; இரண்டு, மூர்த்தி என்னும் அழகான பெயரையும் தெரிந்து மகிழ்கிறோம்.

மூர்த்தி என்ற சொல் பலருக்கும் பெயராகவும் இலங்கும்  பெருமை கொண்டது.  தெய்வப் பெயர்களிலும் இணைந்து வருவது. கிருஷ்ண மூர்த்தி  இராமமூர்த்தி கணேச மூர்த்தி எனவெல்லாம்  காண்க.

வினைச்சொல்: முகிழ்த்தல்.  முகு: பொருள்: முன் சேர்தல். முன் வந்து தெரிவது. மு= முன்; கு = சேர்வுக் குறிப்பு. மு+கு > முக்கு,  பொருள் முன் அல்லது வெளிக்கொணர்தல்.  இழ் என்பது ஒரு விகுதி. பெயரிலும் வினையிலும் இழ் விகுதியாகும்.   இழ் என்பது ஓர் அடிச் சொல்லுமாகும்.  இழ் > இழு, இழை, இழி என்பவற்றில் வெவ்வேறு ஆனால் தொடர்புறு இயக்கங்களைக் குறிக்க வரும். ஆகவே தமிழ் என்றால் தனிமைப் பண்புடன் , சுவையுடன் பொருளுடன்  இயங்கும் மொழி என்று கொள்க.  ஆக, முகிழ் > முகிர் > மூர். + தி (விகுதி ) > மூர்த் தி :  முன்தோன்றும் தெய்வஉரு

தென்கணம் > தெற்கணம் > தெக்கணம் > தக்கணம் >  தட்சிணம். ( எ> அ). எ -  அ: தெரிசனம் - தரிசனம். சொன்முதல் திரிதல்.

தெற்கணம் பார்க்கும் தெய்வம் என்றாயிற்று. தெற்கணம் - தென்திசை.

கண் = இடம்   கணம் இங்கு நிலப் பகுதி.

 அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிர்ந்துகொள்க 








எது சரி? நெசமா நிஜமா

 இதனை இப்போது ஆய்வு செய்வோம்.

நடைமுறை  வாழக்கையில் நம் மக்கள் பேசும்போது நெசம் என்றுதான் பேசுகிறார்கள். இதை ஆயந்த சிலர் நில் என்ற சொல் கடைகுறைந்து சு அம் என்ற விகுதிகள் ஏற்று நிசம் என்றாகி  நெசம் என்று மாறி வழங்கும் என்றனர்.  இந்தக் கருத்தில் உண்மை இருக்கி றது என்று நினைக்கலாம்..

எழுத்துத் திரிபுகள் என்ற அளவில் இந்த  விளக்கதில் வழு ஒன்றுமில்லை. ஆனால்  இதனினும் சிறந்த கருத்தில் நெசம் என்பதே முதலாகச் சொல் தோன்றியது என்பதே உண்மையாகும்.

ஓர் உண்மையைக் கூறுகையில் கருத்துகள் தம்முள் இணக்கம் பெற்று சொல்வது ஏற்புடைமை அடையும். பொய் எனின் ஒன்றுக் கொன்று பொருந்தாமை வெளிப்படும். Contradictions, inconsistencies என்றிவற்றைக் கூறுவர்

ஆகவே உண்மை  நெசவு போன்ற இழைப் பொருத்தம் உள்ளது. இதனாலே நெசவு என்ற சொல்லினடியாக நெசம் என்பது  தோன்றிற்று. இதுவே சரியானது மேலானது ஆகும்  இருவழிகளில் உரைபெறு சொல் இதுவாம்.   நெசவு என்பதில் நெச என்பது அடிச்சொல் அன்று (அல்ல) எனினும் அடிபோல் பாணினிபோல் பாவித்துக் கொண்டால்,  அதனோடு அம் விகுதி இணைப்பின் அது நெசம்  ஆகிவிடும். இழைப்பொருத்தம் ஆதலின் உண்மைத்தன்மை உடையது என்பதாம். எளிதாகப் புரிந்துகொள்ளும் நோக்கில் சுருக்கினோம்  விரித்துரை வேண்டின் எமக்கு எழுதுங்கள்.  புரிதலுக்காக இஃது அடி என்று உரைக்க.

இணக்கம் கருதி இது இருபிறப்பி அல்லது பல்பிறப்பிச் சொல் என் க .

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்ந்து பரப்புக.


 கூறுவர் 





உலகுக்கு உதவும் பிரதமர் மோடி

 பிறருக்கும் தமரான பிரதமர் மோடி

பிரியாமல் உலகருடன் உறைந்து வாழ்வார் 

அறவர்க்கும் அன்பருக்கும் அருமைச் செம்மல்

ஆலயத்தில் இறைவர்காண்  அகத்து மாண்பர்

அரியதீவு சைப்பிரசில்  அடியை வைத்தார்

ஆனமக்கள் அனைவர்க்கும் உறவர் ஆனார்

பெரிதுசொன்னார் இதுவன்று போர்செய் காலம்

பிழைக்காதீர் என்றபடி  பெருமை கண்டீர்.


பொருள்

பிறருக்கும்  -  தாம் அல்லாத பிறருக்கு(ம்)

உலகர் -  உலகத்து மக்கள்

உறைந்து - ஒன்றிணைந்து

அறவர் -  அறம் செய்வோர்

ஆலயத்தில் இறைவர்காண்  அகத்து மாண்பர்

ஆலயங்களின்  இறைவனைக் காண்பவர்

அகத்து மாண்பர் -  மனத்தில் மாண்புடையார்

உறவர் - சொந்தக்காரர்

பிழைக்காதீர் - இதற்குச் தவறு செய்யாதீர் என்று பொருள்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.


வியாழன், 19 ஜூன், 2025

மனனம் - சொல், மற்றும் ''மாதிரி''

 இன்று மனனம் என்ற சொல்லைக் காண்போம்

இது மனப்பாடம் செய்தலைக் குறித்தலுடன்,  சிந்தித்தலையும் குறிக்கும்.  

மனம் என்பது மனன் என்று தமிழில் வரும்.  அறம் என்பது அறன் என்று வருதல் காண்க.  திறம் என்பது திறன் என்றும் வருதல் அறிக. போல இருப்பவை போலி எனப்படும்.  அதாவது ஒரே மாதிரியானவை. மாதிரி என்றால்  அதே அளவில் திரிக்கப்பட்டவை,  அல்லது அதே அளவில் செய்யப்பட்டவை. திரித்தல் என்றால் உருவாக்குதல் என்றும் பொருள் உண்டு.  

மா -  அளவு. ( அளவில்)   திரி =  திரிக்கப்பட்டவை.  திரி என்பது முதனிலைத் தொழிற்பெயர்.  தேவநேயப் பாவாணர்  ''மாடல்'' என்ற ஆங்கிலச் சொல்தான் மாதிரி என்ற திரிந்துள்ளது என்றார் எனினும்  இதை வலைப்பதிவுகளில் உலவிய தமிழன்பர்களும் அறிஞர்களும் ஒப்பவில்லை. ( பதினைந்து ஆண்டுகட்கு முன்). இவர்களின் கருத்தே இங்கு மேற்கொள்ளப்படுகிறது.  பாவாணர் கூற்றுக்குக் காரணம்  '' ஹாஸ்பிட்டல்'' என்ற ஆங்கிலம்  ''ஆஸ்பத்திரி'' என்றானதுதான். ஆனால் ஹாஸ்பிட்டல்  என்பதில் வரும் ''டல்''  -tal என்று முடிவது.   மாடல் என்பதில்  வரும் ....del என்பது சற்று வேறுவிதமான -டல்.  Dull என்பதில் டல்,   டல்லென்றே மாற்றமின்றித் தமிழில் ஒலிக்கிறது. பெடல் என்பதில் வரும் டல் மாறுவதில்லை. மெடல் என்பதும் மாறுவதில்லை. இவற்றையும் இங்குத் தெரிந்துகொள்ளுங்கள்.

இனி மனனுக்குத் திரும்புவோம். மனனில் அல்லது மனத்துள் படித்ததை அமைத்துக்கொள்வது மனனம்  எனப்படும். அம் என்பது அமைத்துக்கொள்ளுதல் என்பதற்கு ஏற்புடைய விகுதி. ஆகவே மனனம் என்பது நல்ல தமிழ்ச்சொல் ஆகும்.

இங்கு இரு சொற்களைக் கவனித்தோம். மனன் >  மனனம்,  மாதிரி என்பவை இவை.  இவை இரண்டும் தமிழல்ல என்று முடிவு செய்வதற்குக் காரணம் எதுவும் இல்லை.  ஒரு சொல் எந்த மொழிக்குரியது என்று முடிவு செய்வதில்,  முதலாவது  வழக்கு அல்லது பயன்பாடு என்னும் செயலும் இரண்டாவதாக எத்தகு மூலச்சொற்களால் இவை ஆக்கப்பட்டுள்ளன என்னும் நிலையும் முக்கியமானவை. ஒருசொல் ஒரு மொழியில் வழங்குவதால் மட்டுமே அச்சொல் அம்மொழிக்குரியது என்று முடிவு செய்வது பேதைமை. மனனம் என்பது தமிழிலும் உள்ளது; சமஸ்கிருதத்திலும் உள்ளது.  இவ்வாறு மட்டும் காண்கையில் இது எம்மொழிச் சொல்லாகவும் இருத்தல் கூடும்;  ஆயின் மூலங்கள் தமிழிலிருத்தலால், இவை தமிழ்ச் சொற்களே என்று முடிவுசெய்வதுதான் சரியானதும் காரணத்துடன் கூடியதும் ஆகுமென்க .  சமஸ்கிருதம் என்பது இந்திய மொழியே என்பது இங்கு வேறு இடுகைகளால் நிறுவப்பட்டுள்ளது. அது வெளிநாட்டு மொழி என்பது வெள்ளைக்காரன் புனைவு ஆகும்.  இது களையப்பட வேண்டிய மடமை என்பது முடிவு.

மாதிரி என்பது  மா-  அளவு;  (பொதுப்பொருள் ).  இச்சொல் நில அளப்பிலும் வருகிறது. பெரிது என்ற பொருளிலும் வருகிறது.  இவை எல்லாம் அளவு பற்றிய பொருண்மைகள். சொல் வரலாற்றில் ஒரு சொல் பலவேறு பொருள்கள் கொண்டு வழங்கி இன்று இறுதியில் ஒரு பொருளில் வழங்குவது என்பது பல சொற்களில் நாம் அறிந்துகொள்ளும் செய்தியாகும். தேவரடியாள் அல்லது தேவடியாள் என்பது இவ்வாறு காண்புறும் சொல்லுக்கு ஓர் எடுத்துக்காட்டு. இவ்வாறு நிறைய உள்ளன.  ஆகையால் மாதிரி என்பது தமிழ்ச்சொல். நல்ல ஆதாரங்கள் கிடைக்கும்போது தவறான முடிவைப் பற்றிக்கொண்டு அதில் தொங்கிக்கொண்டிருபது அறியாமையின் அறிகுறி. சான்றின்படி செல்லாதவன் ஒரு தீர்ப்பு எழுதும் தகுதியை இழந்துவிடுகிறான். சொற்கள் என்பவை ஒலிகளால் ஆனவை.  அவற்றின்பால்  வெற்று வெறுப்புக் கொள்வோனும் ஆய்வாளனாகும் தகுதியை இழப்பவனே. ஒருக்கால் ஒருவன் செய்த தவறான முடிவை பிற்பாடு மாற்றி அமைத்துக்கொள்கிறபோது  அவன் உண்மையில் அறிவாளி ஆகிவிடுகிறான்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை தரப்படுகிறது.


சனி, 14 ஜூன், 2025

கோரோசனை - புதுச்சிந்தனை.

 கோரோசனை என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.

இந்தச் சொல்லில் கோ என்பது மாடு என்றோ பசு என்றோ பொருள்படும். பசு என்பது தமிழன்று எனப்படினும், இச்சொல்லில் பசு என்பது பசுமை என்னும் சொல்லுடன் எண்ணத்தக்கதாய் இருப்பதால்,  மாந்தர்தம் வாழ்வைப் பசுமையாக்கும் ( வளமாக்கும்)  விலங்கு என்ற பொருளில் பசு என்பது தமிழ்ச்சொல்தான்.  இச்சொல் சிற்றூர்களில் மிக்க வழக்கு அல்லது பயன்பாடு பெற்ற சொல்லாகும். ஆ என்னும் சொல்லும் அறியப்பட்ட சொல்தான் என்றாலும் இலக்கியப் பயன்பாடு உடைய சொல்.

பசுமை எய்தச் செய்யும் விலங்கு  - பசு.

ஆக்கம் உருப்பெறச் செய்யும் விலங்கு  - ஆ.  ஆன் என்றுமாகும்.

இவ்வாறு காணின், இரண்டு சொற்களும்  ஒரே மூலக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்தவை.  ஆகு என்ற வினைச்சொல்லில் கு என்பது ஒரு வினையாக்க விகுதி.  ஆதல் ஆகுதல் என்ற இருவிதமாகவும் வந்து, ஆ என்பதே மூல வினைச்சொல் என்பதை இது மெய்ப்பிக்கின்றது.  இது ஆன் என்றும் வரும்.ஆன என்ற எச்சவினையில் னகரம் வருவதுபோல்  இங்கும் சொல் அமைந்துள்ளமை  பொருத்தமே.

ஆனால் கோ என்ற சொல் வேறு காரணங்கள் கொண்டு ஆக்கப்பட்ட அல்லது அமைந்த சொல்.  மாடுகள் மேயும்போது கோலி நின்று மேய்பவை.  கோலுதலாவது  ஒரு வட்டத்தில் சுற்றி நிற்றல். இன்னும் மனிதனைச் சூழ நின்று வாழ்ந்து அவனுக்குப்  பசுமையையும் ஆக்கத்தையும் உண்டாக்குபவை. மந்தையாகக் கூடி நிற்பவை ஆதலால்  கூ> கோ என்ற திரிபு இயல்பானதாகிறது.

கூடு>  கோடு> கோலு.  கோடுதல் வளைதலாகும்.

மடி > மறி > மரு(வு)>மரி>.மாள்>

மாள்கிறான்  மரிக்கிறான்  இதில் மாண்டான் என்று இறந்தாலத்தில் வருவதையும் கவனிக்கவேண்டும். 

ஈரலைச் சுற்றி வளரும் ஒரு கல் வகை.

ஒசிதல் > வளைதல்,  ஒடிதல்.

கோலு > கோரு> கோரு+ ஒசி+ அன் + ஐ >  கோரோசனை.

இது கோசனை என்றும் வரும்.

கூடி நின்று மேயும் வழக்கத்தினால்,  கோ என்ற சொல் ஏற்பட்டுள்ளது.

கோ என்பது பசு.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை வழங்கப்பட்டுள்ளது



புதன், 11 ஜூன், 2025

பரவுதல் -- தொழுதல் கருத்தியல்

 பரவுதல் என்பது பல்பொருளொரு சொல் என்பர். ஒரு திசையிலும் பல்திசைகளிலும் சென்றேறும் ஒன்றைப் பரவுகிறது என்போம்.  இதற்கு இன்னொரு பொருள்: தொழுதல் என்பதுமாகும்.  கடவுட் கொள்கையும்  அதைப் பின்பற்றிய மனிதச் செயல்களும் தொழுகைக் கருத்தியல்களும்  ஒருவனிடமிருந்து இன்னொருவனுக்குப் பரவக் கூடியவை,  பரவிய மாத்திரத்தில் அந்த இன்னொருவன் கடைப்பிடிப்புடன்  அதன் பல்வேறு அமைப்புச்செயல்களையும் தன் நடவடிக்கைகளில் கொணர்ந்துவிடுவான்.  ஆகவே காற்று எங்கும் ஊர்ந்து செல்லுதல்போல இது பரவத் தொடங்கிவிடுகிறது.   என்வே தொழுதலுக்குப் பரவுதல் என்பது இன்னொரு சொல்லாகிவிட்டது. 

'' தொண்டர் பரவும் மிடற்றாய் போற்றி,

தொழினோக்கி ஆளும் சுடரே போற்றி''

பின்பற்றும் போது கும்பிடும் முறைகளை நன் கு அறிந்து கடைப்பிடிப்பது  பற்றர்களுக்கு வழக்கம்.  ஆனால் சிலர் தவறாகக் கடைப்பிடிப்பதும் உண்டு.  அப்போது இறைப்பணி பிழைப்பதை ( தவறு படுவதை ) ப்  பிறர் திருத்தினர்.  திருத்துங்கால் சரிவராவிட்டால் சிலர் அடியும் கொடுத்துத் திருத்துவதுண்டு.

''போதுவித்தாய்  நின் பணி  பிழைக்கிற புளியம் வளாரால்

மோதுவிப்பாய் உகப்பாய்  முனிவாய்  கச்சி ஏகம்பனே''

என்று பாடல் வருவதால்,  புளியம்  வளார் கொண்டு அடிக்கப்பட்டும் ஆத்திரத்துடன் அதட்டபட்டும் இறைப்பற்றினை அறிந்துகொண்டவர்களும் உண்டு என்று அறிந்துகொள்க.

வளார் -  மரக்கிளை அல்லது தடி.

எழுத்துக் கற்ற மாணவன் முதல் இறைப்பற்று  அறிவிக்கப்பட்ட மாணவன் வரை உதைவாங்கிப் பாடம் புகட்டப்பட்டோர் இருந்தனர் என்று அறிந்துகொள்கிறோம்.

கற்பிக்கப்படுவது எல்லோருக்கும் சரிவரப் பதிந்துவிடுவதில்லை.

'' கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்

உணர்வுடை மாந்தர்க் கல்லது  தெரியின்

நன்னயப் பொருள்கோள் எண்ணருங்குரைத்தே''

என்று தொல்காப்பியனார் கூறுவதால்   (தொல். மெய்ப்பாட்டியல். உஎ)  

சொல்ல்லிக்கொடுப்பதை உடன் உணர்ந்துகொள்வோர் சிலரே ஆவர்.

இவ்வாறு பரவியது பலவகையாகும்.  அதனால் ''பரவுதல்'' என்பதன் பொருளை அறிந்துகொள்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை வழங்கப்பட்டுள்ளது.

திங்கள், 9 ஜூன், 2025

வினோதம் என்ற சொல்.

 வினோதம் என்ற சொல்லின் அமைப்பைக் கண்டு அதன் வினோதம் உணர்வோம்.


வியன் என்ற சொல் நீங்கள் அறிந்ததொன்றாகவே இருக்கும், குறளில் விரி நீர் வியன் உலகத்து உள் நின்று உடற்றும் பசி  என்ற வள்ளுவனின் தொடர் சிறந்த நயம்பொருந்தியது.

வியன் எனின் பெரிது.விரிவானது

முன் பூனையையே கண்டு வளர்ந்தவனுக்கு யானை வினோதமானது. தினமும் காண்பவனுக்கு அது வினோதமாகாது.  வினோதமெனும் மனவுணர்ச்சி மறைந்துவிடும்.

ஆதலால் வியன் என்னும் சொல்லினின்று வினோதம் என்பது அமைந்துள்ளது.  எப்படி எனின் கூறுதும்.

வியன் + ஓது +  அம் = வியனோதம்.

இப்போது யகரத்தை விட்டிடுவோம்.

வினோதம் ஆகிவிட்டது.  ஒரே எழுத்தின் விடுபாட்டில் ஒரு புதிய‌
சொல் கிடைத்துவிட்டது.

வினோதமெனின் பெரிதாக மக்களால் பேசப்படுவது.  அவ்வளவுதான் .  ஓது என்பது  பேச்சைக் குறிக்கிறது.  மந்திரம் ஓதுவதைப் பிற்காலத்தில் குறித்தது.  தொடக்கத்தில்  ஓஓஓஓஓ என்று ஒலி  எழுப்புதலையே குறித்தது.  ஓலமிடுதல் என்ற சொல்லும்  அதே.  ஓஓஓஓ  என்பதுதான். ஒப்புதல் என்ற சொல்லும்  ஓ ஓ என்று சரி கொள்வதையே குறிக்கிறது.   இப்படி ஒலிக்குறிப்புகளைக் கொண்டு அமைந்த சொற்கள் பல்வேறு மொழிகளிலும்  ஏராளம்.  ஈண்டு விரித்தலாகது.  அம்  விகுதி/

புதிதாக உள்ளதைத்தான் பேசுவார்கள் . பழங்  குப்பைகள் பேச்கிக்குரியனவல்ல .

மகிழ்ந்து கொண்டாடலாம்.

ஆதி மனிதன் குகைகளில் வாழ்ந்து கரடி புலிகளுடன் போராடி உணவு தேடித் துன்புற்றான்.  அவனிடம் அகராதியுமில்லை  முகராதியுமில்லை. நாலைந்து சொற்களுக்கே அவன் சொந்தக்காரனாயிருந்தான். பல சொற்களைப் படைத்து மொழியை உருவாக்க வேண்டின், இதுபோன்ற தந்திரங்களைக் கையாள வேண்டுமல்லவா. இந்தப் பதங்களெல்லாம் ஒன்று தங்கத்தட்டில் வைத்து கடவுள் நீட்டினார் என்று எண்ணுகிறவன், மொழிவரலாறும் மனித வரலாறும் அறியாதவன். மனிதனின் கள்ளம் அவன் மொழியிலும் பளிச்சிடவேண்டுமே.

வி + நோ தம்  என்று பிரித்து  அதிலிருந்து  நூதனம் என்பதைப் பிறப்பித்தால் இன்னும் புலமை. பண்டையரைப் பாராட்டுவோம் .

வினோதம் என்ற சொல் பிறவழிகளிலும் விளக்கத்தக்கது ஆகும்.  இது ஒரு பல்பிறப்பி  ஆகும்.

சிவமாலா   23.2.2016

சனி, 7 ஜூன், 2025

இந்து நாடு - எழும் பொருள்

 இந்து என்பதைப் பற்றி பலதரப்பட்ட பொருண்மைகள்  வலம் வந்துகொண்டுள்ளன. அவற்றுட் பல வியப்பை விளைவிப்பன; சில கேட்பார் உள்ளத்தில் இசைவையும் இணைப்பையும் உறுத்துவன.

இந்து  என்றால் நிலா என்ற பொருளும் உள்ளது. " இந்தின் இளம்பிறை போலும் ஏய்ிற்றனை" என்று பாடல் வருகிறதே.

இந்து வாழ்வியல் முறை இலங்கும் நாடு இந்து நாடு எனப்படுதல்

ஓர் இயல்பும் ஆகும்.

https://youtube.com/shorts/4mQw8LR9uuk?si=f5DhPhXypb7dGOj

மேற்கண்ட இணைப்பைச் சொடுக்கி அதனிற் பொதிந்துள்ள கருத்தினையும் அறிக.

வியாழன், 5 ஜூன், 2025

அணிந்தனம் என்பதன் திரிபு அஞ்சனம் என்றானது

 அணிந்தனம் என்ற நல்ல தமிழ்ச்சொல். பேச்சுவழக்கில், அணிஞ்சனம் என்று வரும். அதாவது  அணிந்துகொண்டேன் என்பது தமிழ்ச்சொல்லின் பொருள். என்ன அணிந்துகொண்டீர் என்றால்  மிக்க முதன்மை வாய்ந்த மையை என்று சொல்லவேண்டியது தெளிவாகும்.

இனி, அணிஞ்சனம் என்பது  ஓரெழுத்துக் குறைத்தால்,  அஞ்சனம்  ஆகிறது.  இது மையழகு ஒப்பனை என்று சொல்லவேண்டாத நிலையில்  மையழகுக்குப் பெயராய் வந்துவிட்டது.

இப்படிச் சொல்லமைப்பதும் ஒரு தந்திரம்தான் என்பதில் ஐயமில்லை.

அறிக் மகிழ்க

மெய்ப்பு பின்.

பகிர்வுரிமை வழங்கப்படுகிறது/

செவ்வாய், 3 ஜூன், 2025

காலும் காலமும்

 கால் என்பது ”நீண்டு செல்லுவது," என்று பொருள் படும் சொல்.  பந்தல் கால் என்ற வழக்கை நோக்குக. இனிக் கால் என்ற சொல்லும் பொழுது அல்லது போது என்பவற்றுக்கு ஈடாகவும் வழங்கும். " இல்லாக்கால்" என்பது இல்லாதபோது என்று பொருள் தருதல் காண்க.

கால் என்பது நேரம் என ற சொல் குறிப்பதை விடக் குறுகிய பொழுது ஆகும்.

கால் என்பது அம் விகுதி பெற்றுக் காலம் என்ற சொல் அமையும். இதன் அடிச்சொல் கால் தமிழ்ச் சொல் ஆதலால் காலம் என்பதும் தமிழ்ச்சொல்லே  ஆகும். சங்கதம் என்னும் சமஸ்கிருதத்திலும் இ ச் சொல் வழங்கும்.  ஆதலால்  இதைப் பொதுச் சொல் என்றும் சொல்வர்.  சங்கத மொழியும்  உள்நாட்டு மொழியே.  காலம் என்பது நீண்ட கால அளவைக் குறிக்கும்.  எ-டு::இளவேனிற் காலம் ,  (வசந்த காலம் ).  

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

இதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்க.




ஞாயிறு, 1 ஜூன், 2025

பாராயணம் அல்லது பாராமல் அணுகுதல் (படித்தல்)

பாராமல் என்ற தமிழ்ச்சொல்,  பாரா என்று சொற்புனைவுக்காகக் குறுக்குண்டது. 'ஆ-மல்' என்பதில்  மல் தேவைப்படவில்லை. அது இல்லாமலே எதிர்மறை உணர்த்துவிக்குக் வலிமை பாரா என்பதற்குண்டு/

இனி அணம் என்ற விகுதியை நோக்குவோம். இது அணுகுதல் குறிக்கும் அண் என்பதும் அமைப்புக் குறிக்கும் அம் என்ற இறுதிநிலையும் இணைந்துள்ள நிலையில், இவற்றுக்கும் பொருள் கூறுதல் எளிதாகவே தெரிகின்றது. பாராமல் எழுதியுள்ளதை அணுகி ( மனத்துள்) அமைத்தல் என்றே பொருள் கூறவேண்டும். பொருளும் சிறப்பாக அமைகின்றது.  பாராமல் என்னும்போது மனத்துள் என்பது பெறப்படுதல் காண்க.

அணுகுதல் -  மனத்தால் எழுத்துரையின் அருகிற்  சென்று, மனத்தினில் பதியவைத்தல்  என்றிதற்குப் பொருள் விரிக்கவும்.

பாராயணம் என்பது தமிழ்ச்சொல் என்பதில் ஐயமில்லை.

சொல்லாக்கத்தில்  பகுதிகள் அல்லது முதனிலைகள் எதிர்மறைகளாக இருத்தல் குறைவே.

பாராய்!  அணம் --  என்பது,  கவனிப்பீராக,  நான் அணுகிச்செல்கிறேன்.  பார்க்கமல் ஒப்பிக்கிறேன் என்று துணிச்சல் மொழியாகவும் சிலரால் கூறப்படலாம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை தரப்படுகிறது.