திங்கள், 16 ஏப்ரல், 2012

இரண்டு குருவித் தோழிகள்

இரண்டு குருவித் தோழிகள் பேசிக்கொண்டார்கள். பின் கூரையின் கீழ் அவர்கள் இருப்பிடத்திற்குப் பறந்து சென்றுவிட்டார்கள்.

அப்பம் எறிந்தாள் சிவமாலா -- தோழீ
அதுநம் விருந்தாம் வருவாயே.
வெப்பம் மிகுந்திடில் கூரையுண்டு - தோழீ
வேறேது வேண்டும் மகிழ்வாயே

கூரையின் கீழொரு மண்டபமாம் -- கேள்
குறையில்லை அங்கே வருவாயே.
ஆருமே அங்கு வருவதில்லை -- எனில்
அஞ்சா அரசும் நமதல்லவோ

முட்டை குஞ்சென்றே எதனையுமே --திருடி
முடக்கிடும் தீமைகள் நேர்வதில்லை;
பட்டாவைப் பெற்ற நிலத்தினிலும் --மிகப்
பண்ணாகும் நல்லிடம் வந்திடுவாய்.

note: வகையுளி: முட்டைகுஞ் / சென்றே / எதனையுமே. இதை முட்டை குஞ்சென்றே எதனையுமே என இயல்பாகவே எழுதியுள்ளேன்.

கருத்துகள் இல்லை: